தாழமுக்கம் தொடர்ந்தால் கிழக்கில் கடும் மழை
இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க பிரதேசம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதனால் இலங்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை நீடிக்குமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தாழமுக்க பிரதேசம் தாழமுக்கமாக மாற்றமடைந்தால் குறித்த மாகாணங்களில் மழை வீழ்ச்சியின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில்,
குறித்த தாழமுக்க பிரதேசம்…