தாழமுக்கம் தொடர்ந்தால் கிழக்கில் கடும் மழை

இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க பிரதேசம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதனால் இலங்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை நீடிக்குமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தாழமுக்க பிரதேசம் தாழமுக்கமாக மாற்றமடைந்தால் குறித்த மாகாணங்களில் மழை வீழ்ச்சியின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில், குறித்த தாழமுக்க பிரதேசம்…

தீர்ப்பு பாதகமாக அமைந்தால் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?

அடுத்தகட்ட  அரசியல் நகர்வுகள் குறித்தும் நீதிமன்ற தீர்மானம் தமக்குப் பாதகமாக அமைந்தால் தமது அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து மஹிந்த ராஜபக் ஷ மற்றும்  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் முக்கிய சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின் போது தாம்…

பாராளுமன்றுக்கு கற்காதவர்களை அனுப்பியதன் விளைவை அனுபவிக்கிறோம்

சமூக விழுமியங்களை சரியாகக் கற்றுக் கொள்ளதாவர்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம். இதனால், நாட்டில் ஒரு அரசு இல்லாத நிலையும், மரியாதைக்குரிய பாராளுமன்றில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் நிலையும்  ஏற்பட்டுள்ளதாக கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம்.யாகூப் தெரிவித்தார். கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வருடந்தோறும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களை வழங்கி வருகிறது. அவ்வாறான ஒரு நிகழ்வு வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள பின்தங்கிய…