பலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை ஆழ்ந்த இரங்கல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அல்-முக்ஹைர் கிராமத்தில் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை நோக்கம் கொண்ட தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அடே அட் என்ற பலஸ்தீன கிரமத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சட்டவிரோத குடியேற்றப் பகுதியி்ல் இஸ்ரேலியக் குடியேற்றவாசிகள் பலஸ்தீன கிரமவாசிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் ஹம்தி நஸ்ஸான் என்ற 38 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
சுமார் 30…