கண்டி வன்முறைகள் நஷ்டஈடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் அந்த அதிர்ச்சியிலிருந்தும் இன்றும் மீளாதவர்களாகவே இருக்கிறார்கள். அன்று தங்கள் வீடுகளும், கடைகளும், வர்த்தக நிலையங்களும், பள்ளிவாசல்களும் தீயினால் கருகிய காட்சிகள் இன்றும் அம்மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.