மலேசியாவில் இஸ்லாத்தை தவறாக சித்திரித்த நபருக்கு பிணை மறுப்பு
சமூக வலைத் தளத்தில் இஸ்லாத்தையும் இறைத் தூதர் முகம்மது நபியையும் கொச்சைப்படுத்திய மலேசிய நபர் ஒருவருக்கு ஏழு மாதகால சிறைத் தண்டனையும் 10,000 றிங்கிட் (2,445 டொலர்) தண்டப் பணமும் விதிக்கப்பட்டதாக திங்கட்கிழமையன்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
மொஹமட் யாஸிட் கொங் அப்துல்லாஹ் என்ற 52 வயது நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதோடு, அவர் மீதான 11 குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக் கொண்டார். அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டது. 1998 ஆம் அண்டு கையொப்பமிடப்பட்டு சட்டமாக்கப்பட்ட தொடர்பாடல்…