புத்தரைக் கல்லெறிந்து கொல்லும் அஸ்கிரிய புத்த மதம்!
இலங்கையின் அரச பாதுகாப்புப் பிரிவினால் யாழ். பொதுநூலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்ட பேரதிர்ச்சியை இலங்கையின் புகழ்பெற்ற ஒரு கவிஞரான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஒரு கவிதையாக வடித்திருந்தார். அக் கவிதையின் தலைப்பு 'புத்தனைக் கொல்லுதல்'. ஒருவர் கண்ட கனவாக அக்கவிதை புனையப்பட்டிருந்தது. அக்கவிதையில், பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட புத்தரின் உடலம், எரிந்து சாம்பலாகிக் கிடந்த யாழ் பொதுநூலகத்தின் படிவரிசைகளில் அனாதையாகக் கிடக்கிறது. அதைக் கண்ணுற்ற அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் 'நமது…