பொதுபலசேனாவின் கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில் : ஜனாதிபதி, பிரதமரிடம் நேரில் முறையீடு
பொதுபலசேனா அமைப்பு பல தேசிய அமைப்புகளுடன் இணைந்து கண்டியில் எதிர்வரும் 7 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள மாநாடு தொடர்பில் கண்டி மற்றும் அயல் பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரும் அச்சமுற்றுள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கண்டியில் பொதுபலசேனா ஏற்பாடு செய்துள்ள மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.…