பொதுபலசேனாவின் கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில் : ஜனாதிபதி, பிரதமரிடம் நேரில் முறையீடு

பொது­ப­ல­சேனா அமைப்பு பல தேசிய அமைப்­பு­க­ளுடன் இணைந்து கண்­டியில் எதிர்­வரும் 7 ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள மாநாடு தொடர்பில் கண்டி மற்றும் அயல் பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் பெரும் அச்­ச­முற்­றுள்­ள­தா­கவும் இது தொடர்பில் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். கண்­டியில் பொது­ப­ல­சேனா ஏற்­பாடு செய்­துள்ள மாநாடு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.…

கொழும்பு பள்­ளி­வா­சல்­களில் அநா­வ­சிய பாது­காப்பு கெடு­பி­டி

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் தலை­நகர் கொழும்­பி­லுள்ள பள்­ளி­வா­சல்­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட தீவிர பாது­காப்புக் கெடு­பி­டிகள் இன்­று­வரை தொடர்­வ­தா­கவும் இதன் கார­ண­மாக பள்­ளி­வா­சல்­க­ளுக்குச் செல்­வதில் பலரும் அசௌ­க­ரி­யங்­களைச் சந்­திப்­ப­தா­கவும் விசனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பயணப் பைக­ளையோ அல்­லது ஏனைய பைக­ளையோ எடுத்துச் செல்­வோரை பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் நுழை­ய­வி­டாது வாயிற் காவ­லர்கள் தடுத்து வரு­கின்­றனர். இதன் கார­ண­மாக வெளி­யூர்­க­ளி­லி­ருந்து தற்­கா­லிக தேவை­க­ளுக்­காக…

முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?

நாட்டில் அவ­ச­ர­காலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அள­வுக்­க­தி­க­மா­ன­வர்கள் ஒன்­று­கூ­டு­வதோ மாநா­டு­களை நடத்­து­வதோ அனு­ம­திக்­கப்­பட முடி­யா­த­தாகும். என்­ற­போ­திலும் பௌத்த இன­வாத சக்­திகள் தாம் விரும்­பி­ய­வாறு கூட்­டங்­களை ஏற்­பாடு செய்­யவும் ஒன்­று­கூ­டல்­களை நடாத்­தவும் பொலிசார் அனு­மதி வழங்­கு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். கடந்த காலங்­களில் இவ்­வா­றான கூட்­டங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யதன் விளைவை நாடு கண்­டி­ருக்­கி­றது. அளுத்­க­மவில் முஸ்­லிம்­களின் எதிர்ப்­பையும் அச்­சத்­தையும் கருத்திற் கொள்­ளாது பொதுக்…

வன்முறைகளை கட்டுப்படுத்தி முஸ்லிம்களை பாதுகாக்கவும்

இலங்கை அர­சாங்கம் தன்­னிச்­சை­யான கைது நட­வ­டிக்­கை­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­துடன், முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் வன்­முறை செயல்­களைத் தடுத்து, அவர்­களைப் பாது­காக்க வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைத் தாக்­கு­தல்கள், அச்­சு­றுத்­தல்கள், பாகு­பாடு காண்­பித்தல் என்­ப­வற்றை முடி­விற்குக் கொண்­டு­வரும் வகையில் அர­சாங்கம் விரைந்து செயற்­பட வேண்­டி­யது மிக அவ­சி­ய­மா­ன­தாகும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.…