விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 06
இவ்வருடம் மே மாதம் (ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து) முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவக் கெடுபிடிகளும் சோதனை நடவடிக்கைகளும் வரலாற்றில் என்றென்றும் இல்லாதவாறு தீவிரமடைந்ததை மிக இலகுவில் நாம் மறந்துவிட முடியாது. 1990 களில் கிழக்கு மாகாண முஸ்லிம் கிராமங்களில் புலிகளை வேட்டையாட வந்த இலங்கை இராணுவம் கண்ணில் பட்ட முஸ்லிம் இளைஞர்களையும் அள்ளிக்கொண்டு சென்று டயரைப் போட்டு எரித்தது. அதனால் மாலையானதும் யாரும் வீதியில் நிற்பதில்லை. அப்படி நிற்பவர்களும் ராணுவக் கவச வாகனத்தின் சப்தம் தூரத்தே…