2020 மார்ச் வரை அருவாக்காலுவில் குப்பைகளை கொட்ட இடைக்கால தடை

தீர்ப்பையடுத்து புத்தளம் மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆராவாரம்

0 573

புத்­தளம் அரு­வாக்­காலு குப்பைத் திட்­டத்­திற்கு எதி­ராக புத்­தளம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தொட­ரப்­பட்ட ரிட் மனு மீதான விசா­ரணை நேற்று இரண்­டா­வது தட­வை­யாக எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது எதிர்­வரும் 2020.03.12 வரை அப் பகு­தியில் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு வழங்­கப்­பட்­ட­டுள்­ளது. க்ளீன் புத்­தளம் அமைப்பு மற்றும் பிர­தே­ச­வா­சி­களால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றித்தில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கி­லேயே இத்­த­டை­யுத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய கொழும்­பி­லி­ருந்து குப்­பை­களை கொண்­டு­வந்து புத்­த­ளத்தில் கொட்­டு­வதை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என களீன் புத்­தளம் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இவ்­வ­ழக்கு மீண்டும் 2020.03.12 அன்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இத் தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து புத்­தளம் நகரில் பட்­டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தினர். இந்த தீர்ப்­பா­னது மக்­களின் நீண்ட கால போராட்­டத்­திற்கு கிடைத்த முத­லா­வது வெற்றி என க்ளீன் புத்­தளம் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்­சினால் கடந்த சில வாரங்­க­ளாக கொழும்­பி­லி­ருந்து லொறி­களில் குப்­பைகள் கொண்டு செல்­லப்­பட்டு அரு­வாக்­கா­லுவில் கொட்­டப்­பட்டு வரும் நிலையில் குறித்த லொறிகள் மீது சிலர் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.