இலங்கையும் சவூதியும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் குறிக்கோளுடன் செயற்படுகின்றன
பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது இலங்கையைப் போன்றே சவூதி அரேபியாவினதும் குறிக்கோளாகும் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின், பயங்கரவாதம் என்பது குறித்தவொரு சமயத்திற்கோ இனத்திற்கோ வரையறுக்கப்பட்டதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள சவூதி அரேபியாவின் சபாநாயகர் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைத்…