நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதில் இதய சுத்தியற்ற நகர்வுகள்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டம் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின்படியே இக் கூட்டம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பகிரங்கமாக கூறியிருக்கிறார். எனினும் இதனை மறுத்துள்ள பிரதமர், ஜனாதிபதியே இக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து ஆராய முற்பட்டதாக பதிலளித்துள்ளார்.
மேற்படி கூட்டத்தை யார் கூட்டியிருப்பினும் அதன் நோக்கம் வெற்றியளித்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னர் இதுபற்றிப் பேசுவதில்…