திருமலை சண்முகா: புதிய ஆசிரியைகளும் அபாயா அணிந்து செல்ல எதிர்ப்பு
ஆசிரியைகளாக நியமனம் பெற்று திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலைக்கு சென்றுள்ள மூன்று முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதன்போது நியமனம்பெற்ற மூன்று முஸ்லிம் ஆசிரியைகள் கடமைகளை பொறுப்பேற்க கடந்த 20 ஆம் திகதி குறித்த பாடசாலைக்கு அபாயா அணிந்து சென்றபோது, அதிபரால் அபாயா அணிந்துவர முடியாதெனக் கண்டிப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…