முஸ்லிம் பெண்கள் முகத்திரையை நீக்கி ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு முகத்திரை (புர்கா, நிகாப்) அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக முகத்திரையை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்தார். தேர்தலில் வாக்களிக்கச்செல்லும் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் வினவியபோதே அவர் ‘விடிவெள்ளி’க்கு இவ்வாறு தெரிவித்தார்.