நாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள்
நாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள் செயற்பட்டு வருவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன. அதனால் போலி உம்ரா முகவர்களுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.