4/21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முஸ்லிம் லீக் 5 மில்லியன் டொலர் அன்பளிப்பு

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கும் நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­காக இலங்­கைக்கு 5 மில்­லியன் டொலர்கள் உத­வி­யாக வழங்­க­வுள்­ள­தாக உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் கலா­நிதி ஷேக் மொகமட் பின் அப்துல் கரீம் அல்­ஈசா தெரி­வித்­துள்ளார். மேல் மாகாண ஆளுநர் காரி­யா­ல­யமும், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் இணைந்து நேற்று முன்­தினம் கொழும்பு தாமரைத் தடாக கேட்போர் கூடத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த சமா­தானம், அமைதி, சக­வாழ்வு தொடர்­பான மாநாட்டில் கலந்து…

ஹக்கீம், ரிஷாட் உட்பட நால்வர் பதவியேற்பு

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்குத் தீர்­வாகத் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இரா­ஜி­னாமா செய்து கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் மேலும் நால்வர் மாத்­திரம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­றுக்­கொண்­டனர். அமைச்சுப் பத­வி­யேற்கும் நிகழ்வு நேற்று இரவு 7.30 மணி­ய­ளவில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. ஸ்ரீ…

தனியார் சட்ட திருத்தம் ; நேற்றும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களை மீளாய்வு செய்து உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான கலந்­து­ரை­யாடல் நேற்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் தலை­மையில் நடை­பெற்­ற போதிலும் இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­டாத நிலையில் முடி­வுற்­றது. மீண்டும் இன்று மீளாய்வு குழு ஒன்­று­கூடி திருத்­தங்கள் தொடர்பில் ஆரா­ய­வுள்­ளது. நேற்று மூன்று மணித்­தி­யா­லங்கள் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்ற போதும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏற்­க­னவே அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்த 14 திருத்­தங்­களில்…

வடமேல் மாகாண வன்முறை : 50 குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கல் இன்று

கடந்த மே மாதம் 12, 13 ஆம் திக­தி­களில் வடமேல் மாகா­ணத்தில் நாத்­தாண்­டியா பகு­தியில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட 98 குடும்­பங்­களில் 50 குடும்­பங்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக 7 மில்­லியன் ரூபா இன்று வழங்­கப்­ப­ட­வுள்­ளது. நாத்­தாண்­டியா பிர­தேச செய­ல­கத்தில் இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பர்­ணாந்து தலை­மையில் இன்று காலை10 மணிக்கு நடை­பெ­ற­வுள்ள நிகழ்வில் நஷ்­ட­ஈ­டுகள் உரிய குடும்­பங்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன. ஏனைய 48 குடும்­பங்­களின் நஷ்­ட­ஈடு விண்­ணப்­பங்­க­ளி­லுள்ள…