காதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா? பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப்
ஒரு சில அடிப்படைவாதிகளினால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் அனர்த்தங்களையடுத்து இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஒரு சில இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் முழு முஸ்லிம் சமூகத்தினரும் சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படுகிறார்கள்.