சாய்ந்தமருது தனி அலகு பற்றி குழப்பமடைய தேவையில்லை : ஞானசார தேரர் தெரிவிப்பு

சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு என அர­சாங்கம் தனி­யான நக­ர­சபை வழங்­கி­யமை குறித்து எவரும் குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை. சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­நாடு கொடுக்­க­வில்லை. அங்கு வாழும் மக்கள் தொகையைக் கருத்­திற்­கொண்டே தனி­யான உள்­ளூ­ராட்சி அலகு வழங்­கப்­பட்­டுள்­ளது என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

தேர்தலை ஏப்ரல் 25-28 இடையில் நடத்த முடியும் : ஜனாதிபதிக்கு தேர்தல் திணைக்களம் அறிவிப்பு

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலைக்­கப்­பட்டால் பொதுத்­தேர்­தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் 28 ஆம் திக­திக்­கு­மி­டையில் ஒரு தினத்தில் நடாத்த முடியும் என தேர்­தல்கள் ஆணைக்­குழு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்­ளது.

வில்பத்து வன அழிப்பு விவகாரம் : ரிசாத் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நாளை

வில்­பத்து தேசிய வன பிர­தே­சத்தில் அதி­பா­து­காப்­புக்­குட்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணியை துப்­பு­ரவு செய்து மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்கள் செய்­துள்­ள­தாகத் தெரி­வித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரி சூழல் நீதிக்­கான மையம் தாக்கல் செய்­துள்ள வழக்கின் மேல­திக விசா­ரணை நாளை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் இடம்­பெ­ற­வுள்­ளது.

விண்ணப்பதாரிகள் விரும்பும் ஹஜ் முகவரை தெரிவு செய்யலாம் : அரச ஹஜ் குழு அறிவிப்பு

இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக பதி­வுக்­கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தாங்கள் விரும்பும் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள ஹஜ் முக­வர்­களைத் தொடர்­பு­கொண்டு இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளலாம் என அரச ஹஜ் குழு அறி­வித்­துள்­ளது.