துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை பார்க்கும் நாள் நாளை

0 589

துல்­ஹிஜ்ஜஹ் மாதத்­திற்­கான தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு நாளை வெள்­ளிக்­கி­ழமை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.

குறித்த தினம் தலைப்­பி­றையைக் கண்­ட­வர்கள் 011 2432110, 077 7140939, 077 7316415 ஆகிய இலக்­கங்­களில் ஒன்­றுடன் தொடர்பு கொண்டு அறி­யத்­த­ரும்­படி கேட்­கப்­ப­டு­கின்­றனர்.

தலைப்­பிறை தீர்­மான மாநாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிரு­வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன் ஹனபி பள்­ளி­வாசல் பிர­தி­நி­திகள் ஆகியோர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

தலைப்­பிறை குறித்து இம்­மா­நாட்டில் எடுக்­கப்­படும் ஏக­ம­ன­தான தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யூ­டா­கவும் இதர ஊட­கங்கள் மூல­மா­கவும் மாநாட்டுத் தலை­வரால் உத்­தி­யோகபூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் என்று கொழும்பு பெரியபள்ளிவாசல் நிருவாக சபை பொதுச் செயலாளர் பாரிஸ் பஹ்மி தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சத்தார்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.