தீயசக்­திகள் மதத்தை கார­ண­மாக்கி பயங்­க­ர­வா­தத்தை கொணர்­கின்­றன

சமாதான மாநாட்டில் உலக முஸ்லிம் லீக் செயலாளர் தெரிவிப்பு

0 519

தீய சக்­திகள் மதத்தை சாக்குப் போக்­காக கார­ண­மாக்கிக் கொண்டு வன்­முறை மற்றும் பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­ப­டு­வது பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளது எனத் தெரி­வித்த உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாய­கமும் சர்­வ­தேச முஸ்லிம் அறி­ஞர்கள் சங்­கத்தின் தலை­வ­ரு­மான கலா­நிதி மொஹமட் அப்துல் கரீம் அல் ஈஸா, இதனை முறி­ய­டிக்க சகல மதத்­த­வர்­களும் கைகோர்த்துச் செயற்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார். 

கொழும்பு தாமரைத் தடா­கத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அமைதி சமா­தானம், சக­வாழ்­விற்­கான தேசிய மாநாட்டில் விசேட அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், இலங்­கையில் கிறிஸ்­தவ மத­வ­ழி­பாட்­டா­ளர்கள் மற்றும் வெளி­நாட்­ட­வர்­களை இலக்கு வைத்து பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இப் பயங்­க­ர­வாத தாக்­குதல் மதஸ்­த­லங்கள் மற்றும் ஹோட்­டல்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்­டன. அத்­துடன் இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் மத அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்ட புதிய அணு­கு­மு­றை­யா­கவே தெளி­வாக உள்­ளது. இத்­தாக்­கு­த­லுக்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் நியு­சி­லாந்து கிரைஸ்ட்­சேர்ச்சில் முஸ்லிம் பள்­ளி­வா­சலில் மத வழி­பாட்­டா­ளர்கள் மீது கொடு­மை­யான துப்­பாக்கி பிர­யோக தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அத்­துடன் அமெ­ரிக்­காவில் கலி­போர்­னியா மற்றும் பென்­சில்­வே­னி­யாவில் யூதர்கள் மீது இதே போன்­ற­தொரு தாக்­குதல் இடம்­பெற்­றது.

மதங்­க­ளி­டையே சமா­தானம் பற்­றிய இந்த முக்­கிய மாநாடு மதங்­களின் அடிப்­படை உண்­மை­யான அன்பு, சமா­தானம் மற்றும் ஒரு­மைப்­பாட்டை மத­வ­ழி­பாட்­டா­ளர்­க­ளி­டையே உறுதி செய்ய துணை­பு­ரி­கி­றது. எந்­த­வொரு மதமும் மனித குலத்­திற்கு அச்­சு­றுத்­த­லாக ஒரு போதும் விளங்­கு­வ­தில்லை. உல­கத்­திற்கு அருட்­கொ­டை­யா­கவே உம்மை நாம் அங்கு அனுப்பி வைக்­கி­றோ­மென நபிமணி முஹம்­மது (ஸல்) பற்றி அல்­குர்­ஆனில் அல்லாஹ் குறிப்­பி­டு­கிறான்.

பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் இலங்­கையை மட்டும் பாதித்­து­வி­ட­வில்லை கொழும்பில் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் பர­வ­லான கண்­ட­னத்­திற்கு உட்­பட்­டது. முஸ்லிம் மதத் தலை­வர்­களும் இத்­தாக்­கு­தல்­களை கண்­டித்­தி­ருந்­தனர். இக் கண்­ட­னங்கள் மற்றும் குற்றச் செயல்­களை தடுத்து நிறுத்த போதா­தது மட்­டு­மன்றி எந்த வித­மான தீர்­வையும் வழங்கப் போவ­தில்லை.

இந்த கொழும்பு தேசிய மாநாடு தற்­போ­தைய நிலைக்கு ஓர் உண்­மை­யான அடிப்­படைத் தீர்வை வழங்க வழி­வகை செய்­கி­றது. முழு­மை­யான வெளிப்­படைத் தன்­மை­யுடன் விட­யத்தைக் கையாண்டு திற­மை­யாக செயற்­தி­ற­னுடன் தீய பயங்­க­ர­வா­தத்தை அம்­மா­நாட்டில் பங்­கேற்போர் எதிர் கொள்ள திரள வேண்டும்.

இலங்­கையில் பன்­னெடுங் கால­மாக பயங்­க­ர­வா­தமும் அமை­தி­யின்­மையும் நிலவி வந்­தது. இந்த சூழலில் இந்த கொழும்பு பிர­க­டனம் பங்­கேற்­போரின் எதிர்­பார்ப்­பு­க­ளையும் இயல்­பு­க­ளையும் பூர்த்தி செய்யும் வகையில் இடம்­பெ­று­மென நம்­பிக்கை கொள்வோம்.

தீய சக்­தி­க­ளுக்கும் பயங்­க­ர­வா­தத்­திற்கும் அப்­பாற்­பட்டு எமது இவ் உலகம் இறை­வனின் ஆணைப்­படி பாது­காப்­பாக அமையும். பயங்­க­ர­வா­தத்தை எதிர் கொள்ள அவர்­களின் கொள்­கையை அது எவ்­வ­கை­யாக இருப்­பினும் அதை புறந்­தள்ள இறைவன் ஆணை­யிட்­டுள்ளான். இம் மாநாடு நிலை­யான தொடர்ந்த ஒற்­று­மையின் இயல்பை மதிப்­பீடு செய்ய வழி­வகை செய்யும். அடிப்­படை பயங்­க­ர­வாத மற்றும் கடு­மை­யான தீவி­ர­வாத பிரச்­சி­னை­களைத் தீர்க்க எங்­க­ளி­டையே காணப்­படும் குறை­பாட்டை நாம் மறுப்­ப­தற்­கில்லை இருப்­பினும் எமது தீர்­மா­னத்தில் பற்­றாக்­குறை அல்­லது தளர்வு காணப்­பட்டால் அதுவே இந்­நி­லைக்கு விட்டுச் செல்லும்.

கண்­கா­ணிக்­கப்­ப­டாத வெறுப்­பூட்டும் பேச்­சுக்கள் மற்றும் செயற்­பா­டுகள் என்­பன பகை­மை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக அமை­கின்­றன. கொள்­கைகள் மற்றும் எதிர்வு கூறல்கள் என்­ப­ன­வற்­றிற்கு அப்­பாற்­பட்டு இவை இயல்­பா­கவே காணப்படுகின்றன. இந்த சுதந்­தி­ர­மான உலகில் கடு­மை­யான தீவி­ர­வா­தத்­தையும் பயங்­க­ர­வா­தத்­தையும் பிற நாட்டிற்கு பரப்புவதற்கு சிலர் சாக்குப் போக்குகளை கையாண்ட வெளிப்படுத்துவார்கள். நாம் தற்போது இலங்கை மண்ணில் உள்ளோம். இலங்கை, பௌத்தர்களை அதிகமாக கொண்ட நாடாகும். இதனை ஒவ்வொருவரும் அன்பை பரிமாற்றல் பிறரை மதித்தல், அமைதியாக வாழ்தல் என்பவற்றின் மூலம் புரிந்துக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.