அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லை

புத்தளத்தில் தீர்மானம்

0 515

புத்­தளம் மாவட்­டத்தில், பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் ஏனைய அரச திணைக்­க­ளங்­களில் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆலோ­சிக்கும் இரண்டாம் கட்ட கலந்­து­ரை­யாடல் நேற்று முன்­தினம் புத்­தளம் நக­ர­பிதா கே.ஏ.பாயிஸ் தலை­மையில் புத்­தளம் நகர மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

ஏற்­க­னவே இம்­மாதம் 09ஆம் திகதி சுமார் 15 சட்­டத்­த­ர­ணி­களை ஒன்­றி­ணைத்து புத்­தளம் நக­ர­பிதா கே.ஏ.பாயிஸின் தலை­மையில் புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல், ஜம்­இய்­யதுல் உலமா புத்­தளம் கிளை ஆகி­ய­வற்­றினால் நடாத்­தப்­பட்ட முதற்­கட்ட செய­ல­மர்வில் அரச திணைக்­க­ளங்­களில் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் குறிப்­பாக, அபாயா தொடர்­பான பிரச்­சினை தொடர்­பா­கவும் விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தோடு, சட்­டத்­த­ர­னி­களால் பல்­வேறு ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த இரண்­டாம்­கட்ட கலந்­து­ரை­யா­ட­லா­னது  முதற்­கட்­ட­மாக குழு­நிலை கலந்­து­ரை­யா­ட­லாக பழைய நகர மண்­ட­பத்­திலும் பின்னர் அதற்­கான தீர்­வு­களை வழங்கும் கூட்டம் புதிய நகர மண்­ட­பத்­திலும் நடை­பெற்­றன.

இந்­நி­கழ்வில் புத்­தளம் நக­ர­பிதா கே.ஏ. பாயிஸ், புத்­த­ளத்தின் மூத்த சட்­டத்­த­ர­ணி­க­ளான அப்துல் காதர், எம்.எம். இக்பால் உட்­பட சட்­டத்­த­ர­ணி­க­ளான ஏ.எம்.கமர்தீன், ஏ.எம். சம்சுர் ராபி, எம்.ஐ.ஹிஸ்மி, ரம்சான் மற்றும் நகர சபை உறுப்­பி­னர்கள், வர்த்­தக சங்­கத்­தி­னரும் கலந்து கொண்­டனர்.

இதன்­படி முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லையென்றும், தேவையேற்படின் நீதிமன்றம் செல்லவும் தயார் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.