இந்திய உதவியின் கீழ் நாடு முழுவதும் ‘1990 அம்பியூலன்ஸ் சேவை’ விஸ்தரிப்பு

கிழக்கு மாகாணத்திற்கான சேவைகள் நேற்று முன்தினம் அங்குரார்ப்பணம்

0 466

இந்­திய அர­சாங்­கத்தின் நன்­கொடைத் திட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும்  1990 அவ­ச­ர­கால நோயாளர் காவு வண்டிச் சேவை கிழக்கு மாகா­ணத்­திலும் நேற்று முன்­தினம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

அம்­பா­றையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில்  ஆரம்பக் கைத்­தொழில் மற்றும் சமூக வலு­வூட்டல் அமைச்சர் தயா கமகே, பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு மற்றும் பொது வளங்கள் அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா, பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே, இந்­திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.

இதற்­க­மைய, அவ­ச­ர­கால நோயாளர் காவு வண்டிச் சேவை­களை நாடு முழு­வ­தற்­கு­மாக விஸ்­த­ரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் பூர்த்­தி­ய­டைந்­துள்­ளது. இலங்­கையின் அனைத்து ஒன்­பது மாகா­ணங்­க­ளிலும் இப்­பொ­ழுது இச்­சேவை கிடைக்­கப்­பெ­று­கி­றது.

இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் கலா­நிதி. சு. ஜெய்­சங்கர் ஒரு விசேட காணொலிச் செய்தி மூல­மாக இந்­நி­கழ்வில் பங்­கேற்­ற­வர்கள் மத்­தியில்  உரை­யாற்­றினார். ஆரம்­பத்­தி­லி­ருந்து தனிப்­பட்ட விதத்தில் இச்­செ­யற்­றிட்­டத்­தோடு தான் தொடர்­பு­பட்­டி­ருந்­ததை அவர் நினை­வு­ப­டுத்­தினார்.

இச்­சேவை, அதற்­கான ஒரு குறி­யீட்டு நாம­மாக வந்­துள்­ள­தாக கலா­நிதி. சு. ஜெய்­சங்கர் குறிப்­பிட்டார்.

வெள்ளம் மற்றும் அண்­மைய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களின் போது இச்­சேவை எவ்­வாறு இலங்­கைக்கு உத­வி­யது என்­ப­தையும் அவர் நினை­வு­ப­டுத்­தினார். இந்­தி­யாவும் இலங்­கையும் ஒன்­றி­ணைந்து எத­னையும் சாதித்துக் கொள்ள முடி­யு­மென்­ப­தற்கு ஒரு சிறந்த உதா­ர­ண­மாக இச்­செ­யற்­றிட்டம் உள்­ள­தையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந்­திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து தன­து­ரையில், இச்­செ­யற்­றிட்டம் இந்­தி­யாவின் பகிர்ந்து கொள்ளும் உணர்வை குறித்துக் காட்­டு­வ­தாகக் குறிப்­பிட்டார். ‘இலங்­கைக்கு முதலில் பதி­லி­றுப்­ப­வ­ராக’ இந்­தியா என்றும் தொடர்ந்­தி­ருக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அவ­ச­ர­கால நோயாளர் காவு­வண்டிச் சேவையின் நாடு முழு­வ­திற்­கு­மான விஸ்­த­ரிப்பு 2018, ஜூலையில் யாழ்ப்­பா­ணத்தில்  அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­பட்­டது. இதன்­போது இந்­தியப் பிர­தமர்  நரேந்­திர மோடி,  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் புது­டெல்­லி­யி­லி­ருந்து  நேரலை செய்­மதித் தொடர்பு மூல­மாக இணைந்து கொண்டார். இந்த அவ­ச­ர­கால நோயாளர் காவு­வண்டிச் சேவை 2018 ஜூலை மாதத்­தி­லி­ருந்து வட மாகா­ணத்­திலும், 2018 ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து ஊவா மாகா­ணத்­திலும், அந்த வரு­டத்தின் செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து வட மத்­திய மாகா­ணத்­திலும், ஒக்­டோபர் மாதத்­தி­லி­ருந்து வட மேல் மாகா­ணத்­திலும், நவம்பர் மாதத்­தி­லி­ருந்து மத்­திய மாகா­ணத்­திலும் மற்றும் 2019 ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து சப்­ர­க­முவ மாகா­ணத்­திலும் கிடைக்கப் பெறு­கி­றது.

2015 மார்ச் மாதம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­தின்­போது,  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால்  இந்­தியப் பிர­த­ம­ரிடம், இலங்­கையில் வைத்­தி­ய­சாலை முன்­ன­னு­மதி அவ­ச­ர­கால நோயாளர் காவு வண்டிச் சேவை ஒன்­றினை ஆரம்­பித்து வைப்­ப­தற்கு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. அதற்­க­மைய  7.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் இந்­திய நன்­கொடை உத­வியின் கீழ் ஜூலை 2016 இல் தென் மற்றும் மேல் மாகா­ணங்­களில் 1990 அவ­ச­ர­கால நோயாளர் காவு­வண்டிச் சேவை ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.  இந்த நன்­கொடை 88 நோயாளர் காவு­வண்­டி­களைக் கொள்­வ­னவு செய்தல், ஒரு வருட சேவைக்­கான நடை­முறைச் செலவு மற்றும் அவ­ச­ர­கால பதி­லி­றுப்பு மையம் ஒன்றை ஸ்தாபிக்கும் செலவு என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக இருந்­தது.

செயற்­றிட்­டத்தின் நேர்­மறைத் தாக்­கத்தை கருத்­திற்­கொண்டு,  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அவ­ச­ர­கால நோயாளர் காவு­வண்டிச் சேவையை நாடு முழு­வ­தி­லு­மாக விஸ்­த­ரிப்­ப­தற்கு இந்­தியப் பிர­த­ம­ரிடம் வேண்­டுகோள் விடுத்தார். மே 2017 இல், இலங்­கைக்­கான தனது விஜ­யத்தின் போது, இந்­திய அர­சாங்­கத்தின் நன்­கொடை உத­வியின் கீழ் நாடு முழு­வ­தி­லு­மாக நோயாளர் காவு­வண்டிச் சேவை­யினை விஸ்­த­ரிப்­பது தொடர்­பி­லான ஓர் அறி­வித்­தலை இந்­தியப் பிர­தமர்   நரேந்­திர மோடி  விடுத்தார். 209 நோயாளர் காவு­வண்­டி­களின் கொள்­வ­னவு, ஒரு வரு­டத்­திற்­கான சேவையின் நடை­முறைச் செல­வுகள் மற்றும் பயிற்சிச் செல­வுகள் என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக நாடு முழு­வ­தி­லு­மான விஸ்­த­ரிப்பை மேற்­கொள்­வ­தற்கு இந்­தி­யா­வினால்   15.02 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள்  ஒரு மேல­திக நன்­கொடைத் தொகை­யாக வழங்­கப்­பட்­டது.

இலங்­கையின் எந்தத் தொலைத் தொடர்பு வலை­ய­மைப்பு மூல­மா­கவும் ‘1990’ எனும் இலக்­கத்தை வெறு­மனே அழுத்திப் பெறக்­கூ­டிய இந்தக் கட்­ட­ண­மின்­றிய அவ­ச­ர­கால நோயாளர் காவு­வண்டிச் சேவை, இலங்­கையில் இந்­திய வீட­மைப்பு செயற்­றிட்­டத்­திற்கு அடுத்து பாரிய இந்திய நன்கொடை செயற்றிட்டமாக அமைந்துள்ளது.

இதுவரை இச்சேவைக்கு வந்த 1,133,344 தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளித்து, 219,371 தடவைகள் அம்பியூலன்ஸ் வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு, 12.58 நிமிடம் எனும் சொற்ப நேரத்தினுள் நோயாளரை அணுகியதுடன், அவசர சிகிச்சை தேவைப்பட்ட 198,223 நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளது.  மேலும், இந்த அம்பியூலன்ஸ் வாகனங்களில் இதுவரை 89 குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.