முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்

தெல்தோட்டையில் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

0 553

என்­மீது எந்தக் குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் ஏன் இரா­ஜி­னாமா செய்­தீர்கள் என்று கேட்­கின்­றனர். முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான அடக்­கு­முறை முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அதற்­கான உத்­த­ர­வாதம் கிடைக்­கப்­பெ­றாமல், மீண்டும் அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­பதில் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

‘பிரஜா ஜல அபி­மானி’ வேலைத்­திட்­டத்தின் கீழ் நேற்று முன்­தினம் கண்டி, தெல்­தோட்­டையில் கிரா­மிய குடிநீர் வழங்கல் திட்­டங்­களை ஆரம்­பித்­து­வைக்கும் நிகழ்வில் கெள­ரவ அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்­திய ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது;

எங்­க­ளுக்குள் ஒளிந்­து­கொண்­டி­ருந்த பாவிகள் சிலர் செய்த பயங்­க­ர­வாத செய­லினால், அப்­பா­விகள் பலர் இன்றும் சிறை­களில் வாடிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த சூழலில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வேண்­டு­மென்றே அநி­யா­யங்கள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­களை வம்­புக்கு இழுக்­கின்ற பல விட­யங்கள் அரங்­கேறி வரு­கின்­றன. இவற்­றுக்­கெல்லாம் தீர்­வு­கா­ணாமல் அர­சாங்­கத்­துடன் சேர்­வதில் எந்த அர்த்­தமும் கிடை­யாது.

பெண்­களின் ஆடை விட­யத்தில் தேவை­யில்­லாத சுற்­று­நி­ரு­பத்தை கொண்­டு­வந்­துள்­ளதால், அரச தொழில்­களில் இருக்­கின்ற முஸ்லிம் பெண்கள் அவஸ்­தைப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த வாரத்­துக்குள் அதை நிவர்த்­தி­செய்ய வேண்­டு­மென நாங்கள் அர­சாங்­கத்­திடம் வலுக்­கட்­டா­ய­மாக சொல்­லி­யி­ருக்­கிறோம். குறித்த சுற்­று­நி­ருபம் திருத்­தப்­பட்டு, முஸ்லிம் பெண்­களின் உரி­மைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பது நாங்கள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களில் ஒன்­றாகும்.

முஸ்­லிம்கள் மீதான பார­பட்சம் நிறுத்­தப்­ப­ட­வில்லை என்றால், நாங்கள் எந்த முகத்­துடன் அர­சாங்­கத்தில் இருப்­பது என்ற கேள்­வியை அவர்­க­ளிடம் கேட்­டி­ருக்­கிறோம். இந்த விட­யத்தில் அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்­றுத்­த­ருவோம் என்ற உத்­த­ர­வா­தத்­து­டன்தான் எமது அமைச்­சர்கள் இருவர் பத­வி­களை மீளப் பொறுப்­பேற்­றி­ருக்­கி­றார்கள்.

நாங்கள் அர­சாங்­கத்­துக்குள் இருந்­தாலும், வெளி­யிலும் இருந்­தாலும் சமூ­கத்தின் நன்­மைக்­காக எடுத்த தீர்­மா­னத்தில் எந்த மாற்­றமும் இல்­லாமல் கூட்­டாக ஒரு­மித்து செயற்­ப­டுவோம். இலங்­கையில் சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எதி­ரான அநி­யா­யங்­களை சர்­வ­தேச சமூகம் அவ­தா­ன­மாகப் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில் எங்­க­ளது கோரிக்­கை­களை அர­சாங்­கத்­தி­டமும் பாது­காப்புத் தரப்­பி­ன­ரி­டமும் அழுத்­த­மாக முன்­வைத்­தி­ருக்­கிறோம்.

இனி அட்­ட­காசம் செய்­ய­வ­ரு­ப­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும். எடுத்­த­தெற்­கெல்லாம் உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களின் அட்­ட­கா­சங்­களை கைட்டி வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் பாது­காப்பு படை­யி­னரை வைத்­தி­ருப்­பதில், இந்த அவ­ச­ர­காலச் சட்­டத்தில் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை.

மூன்­றா­வது மாத­மாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அவ­ச­ர­கால சட்­டத்தை இனி­மேலும் நீடிக்க விடக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் இருக்­கிறோம். அவ­ச­ர­கால சட்டம் எதற்கு தேவைப்­பட்­டதோ, அந்த தேவை முடிந்­து­விட்­டது. இனியும் இதை நீடிப்­ப­தாக இருந்தால், எல்லா மக்­க­ளுக்கும் பாது­காப்பு தரு­வ­தாக அது இருக்­க­வேண்டும். ஆனால், அந்த நிலைப்­பாட்டை அண்­மைக்­கா­லங்­களில் காண­வில்லை என்­பதை நாங்கள் தெளி­வாக சொல்­லி­யி­ருக்­கிறோம்.

தற்­போ­தைய அர­சாங்கம் பல விட­யங்­களில் அச­மந்­தப்­போக்­குடன் நடந்­த­தாக விமர்­ச­னங்கள் இருக்­கின்­றன. அதற்­காக இன்­னு­மொரு அர­சாங்கம் வந்தால் இந்தப் பிரச்­சி­னைகள் தீர்ந்­து­விடும் என்று நாங்கள் எதிர்­பார்க்க முடி­யாது. கடந்த அர­சாங்­கத்தில் நடந்த விட­யங்­க­ளையும் இன்னும் மறக்­க­வில்லை. எந்த அர­சாங்கம் வந்­தாலும், சிறு­பான்மை சமூ­கங்கள் மீது பார­பட்சம் காட்­டப்­ப­டக்­கூ­டாது என்­பதில் நாங்கள் மிகவும் அவ­தா­ன­மாக இருக்­கிறோம்.

சிறு­பான்­மைக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ரா­கத்தான் நாங்கள் போராட்­டத்தில் இறங்­கி­யி­ருக்­கிறோம். நிச்­சயம் இதற்கு விடி­வு­கிட்டும். இதற்­கான தீர்வு விட­யத்தில் சரி­யான தெளி­வில்­லாமல் வலிந்­துபோய் அமைச்சு பத­வி­களை பெறு­வதால் எங்­க­ளது கெள­ரவம் பாதிக்­கப்­ப­டு­வது மாத்­தி­ர­மல்ல, சமூ­கத்தின் எதிர்­பார்ப்பும் நிறை­வே­றாமல் போய்­விடும்.

என்­மீது எந்தக் குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் நீங்கள் ஏன் இரா­ஜி­னாமா செய்­தீர்கள் என்று சக அமைச்­சர்கள் என்­னிடம் கேட்­கின்­றனர். குற்­ற­மி­ழைத்­த­வர்­களை கைது­செய்­யாமல் இருப்­பது மிகவும் மோச­மான விடயம். சிறு கும்பல் செய்த வேலைக்காக முழு சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களும் வீடுகளும் புனரமைக்கப்பட வேண்டும். அவற்றைச் செய்யாமல் நாங்கள் அமைச்சரவையில் இருக்கமுடியாது. ஏனைய இடங்களில் எவ்வாறு நஷ்டயீடு கொடுத்து கட்டிமுடித்தார்களோ, அதேபோன்று இங்கும் செய்யப்பட வேண்டும். அதைச் செய்யாமல் நாங்கள் கதிரைகளில் போய் உட்கார முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.