சில மத தலைவர்களின் அறிவிப்புகள் வன்முறையை தூண்டுபவை

கண்டனம் வெளியிட்டது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் கவலை தெரிவிப்பு

0 722

முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ரான  தாக்­கு­தல்கள்  பற்­றிய  அறிக்­கைகள்  தொடர்பில்  கவ­லை­ய­டை­கின்றேன். சில  மதத்­த­லை­வர்­களின்  அண்­மைய  அறி­விப்­புக்கள்  வன்­மு­றையைத் தூண்­டு­ப­வை­யாக  உள்­ளன.  இது­தொ­டர்பில்  ஆரா­யப்­பட வேண்­டி­யுள்­ள­தென்று ஐக்­கிய நாடுகள் ஸ்தாப­னத்தின் மனித உரி­மைகள் ஆணைக்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அத்­துடன், பயங்­க­ர­வாத  தடுப்பு  செயற்­பா­டுகள்  தேவைப்­ப­டு­வன  ஆயினும்,  அவ­ச­ர­கா­லச்­சட்டம்  குறு­கி­ய­கால  எல்­லையைக் கொண்­ட­தாக  இருக்க  வேண்டும்.  சமூ­கத்­த­லை­வர்கள்  ஒன்­றி­ணைந்து  அனைத்து  வகை­யான  வன்­முறை  மற்றும்  பாகு­பாட்டை களைய  அத­னது ஆணி­வேரைக் கண்­ட­றிந்து  அர­சியல்  மற்றும்  மத ரீதி­யி­லான தீர்­வுக்கு  முன்­னு­ரிமை  அளிக்­கப்­பட வேண்­டு­மென்றும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள்    மனித  உரி­மைகள்  சபையின்  41 ஆவது  கூட்­டத்­தொடர்  நேற்று  ஜெனி­வாவில்  கூடி­யுள்ள  நிலையில்  ஐ.நா.   மனித  உரி­மைகள்  சபையின் ஆணை­யாளர்  மிச்­செலி பசலெட்  இலங்கை  தொடர்பில்  கவலை  வெளி­யிட்­டுள்ளார்.

இரண்டு  வாரங்­க­ளுக்கு  முன்னர்  இடம்­பெற்ற   பயங்­க­ர­வாத  தாக்­கு­தல்கள்   இலங்­கையில்  பதற்­றத்­திற்கு  மேலும்  தூப­மிட்­டுள்­ள­தென  அவர்  கவலை  வெளி­யிட்­டுள்ளார்.

இலங்­கையில்  முக்­கிய  மனித  உரி­மைகள்  தொடர்பில்  ஜனா­தி­ப­திக்கும்  அர­சாங்­கத்­திற்கும்  இடையே ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட   அணு­கு­மு­றையில் பற்­றாக்­குறை  காணப்­ப­டு­கின்­றது.  இது  பாது­காப்பு  படை­களின்  செயற்­பாட்டில்   எதிர்­ம­றை­யான  விளைவை  ஏற்­ப­டுத்தி  நாட்டு  மக்கள்  அனை­வரின்  பாது­காப்பை  பல­வீ­னப்­ப­டுத்­தி­விடும்.

முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ரான  தாக்­கு­தல்கள்  பற்­றிய  அறிக்­கைகள்  தொடர்பில்  கவ­லை­ய­டை­கின்றேன். சில  மதத்­த­லை­வர்­களின்  அண்­மைய  அறி­விப்­புக்கள்  வன்­மு­றையைத் தூண்­டு­ப­வை­யாக  உள்­ளன.  இது  தொடர்பில்  ஆரா­யப்­பட வேண்­டி­யுள்­ளது.

பயங்­க­ர­வாத  தடுப்பு  செயற்­பா­டுகள்  தேவைப்­ப­டு­வன  ஆயினும்  அவ­ச­ர­கா­லச்­சட்டம்  குறு­கிய  கால  எல்­லையைக் கொண்­ட­தாக  இருக்க  வேண்டும்.  சமூ­கத்­த­லை­வர்கள்  ஒன்­றி­ணைந்து  அனைத்து  வகை­யான  வன்­முறை  மற்றும்  பாகு­பாட்டை களைய  அத­னது ஆணி­வேரைக் கண்­ட­றிந்து  அர­சியல்  மற்றும்  மத ரீதி­யி­லான தீர்­வுக்கு  முன்­னு­ரிமை  அளிக்­கப்­ப­ட­வேண்டும்.

இலங்கை  மனித  உரி­மைகள்  ஆணைக்­கு­ழுவின்  பாராட்­டத்­தக்க துணிச்­ச­லான பங்­க­ளிப்­பிற்கு எனது  ஆத­ரவைத் தெரி­விக்­கின்றேன். மத சிறு­பான்மை  இனத்­த­வ­ருக்கு  எதி­ரான தாக்­கு­தல்கள்  நம்­ம­னைவர்  மீதான  தாக்­கு­தல்­க­ளாகும்  . மதக்­கோட்­பா­டு­களில்  மனித  பெறுமதி  மற்றும்  மனித  பிணைப்பு  பற்றி  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான வன்முறை  சிறுபான்மை  இனத்தவருக்கு  எதிராக  ஆரம்பித்து  நமது  முழு சமூகத்தையும்  சூழ்ந்துவிடும்  என்பதை   வரலாறு  எமக்கு  கூறுகிறது  என  அவர்  மேலும்  தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.