உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : சஹ்ரானின் “பைஅத்’ காணொளி நீதிமன்றில் காண்பிப்பு; மொழிபெயர்ப்பும் சமர்ப்பிப்பு

0 117

(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

அதில் நேற்றும் (8) நேற்று முன் தினமும் (7), தாக்குதல்களுக்கு முன்னர் பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹஷீம் மற்றும் குழுவினர் ஒன்றாக இருந்து பைஅத் செய்துகொண்டதாக கூறப்படும் காணொளி காட்சிகள் நீதிமன்றில் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் மொழி பெயர்ப்பும் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த காணொ­ளியில் உள்ள விட­யங்­களை சிங்­கள மொழியில் மொழி பெயர்த்த மொழி பெயர்ப்­பாளர் அவ­ரது மேற்­பார்­வை­யாளர் உள்­ளிட்­ட­வர்­களின் சாட்­சி­யங்கள் நெறிப்­ப­டுத்­தப்பட்­டன. இதன்­போதே இந்த காணொ­ளிகள் நீதி­மன்றில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

எவ்­வா­றா­யினும் அக்­கா­ணொளி­களின் உள்­ள­டக்கம், பிர­தி­வா­தி­களால் சவா­லுக்கு உட்­ப­டுத்­த­ப்படும் நிலையில், அக்­காட்­சி­க­ளையும் அதன் உள்­ள­டக்க விட­யங்­க­ளையும் பின்னர் சாட்­சி­யங்கள் ஊடாக நிரூ­பிப்போம் என்ற வழக்குத் தொடுநர் தரப்பின் முன் கூட்­டிய உறுதி மொழிக்­க­மைய இவ்வாறு அக்காணொளிகள் காண்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.