அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸா மர்ம நபர்களால் தோண்டியெடுப்பு

கலேவெல- பல்லேவெல பிரதேசத்தில் சம்பவம்

0 783

முஸ்லிம் பொது மயா­னத்தில் அண்­மையில் அடக்கம் செய்யப் பட்­டி­ருந்த ஜனாஸா ஒன்று சில மர்ம நபர்­களால் தோண்டி யெடுக்­கப்­பட்டு மற்­று­மொரு இடத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த சம்­பவம் ஒன்று நேற்­று­முன்­தினம் அதி­காலை கலே­வெல பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள பல்­லே­வெல என்ற கிரா­மத்தில் இடம் பெற்­றி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

பிர­தே­ச­மெங்கும் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது. குறித்த முஸ்லிம் பொது மயா­னத்தைச் சுற்றி முட்­கம்பிப் பாது­காப்பு வேலிகள் அமைக்­கப்­பட்டு பிர­தான நுழை­வா­யிலும் பூட்டுப் போடப்­பட்டு அடைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மயா­னத்தின் பின்­பு­ற­மாக பாது­காப்பு முட்­கம்பி வேலியின் கம்­பி­களைத் துண்­டித்து மர்ம நபர்கள் உட்­பி­ர­வே­சித்து, ஜனாஸா அடக்­கப்­பட்­டி­ருந்த மூன்று குழி­களைத் தோண்­டி­யி­ருப்­ப­துடன் அவற்றில் மிக அண்­மையில் அடக்கம் செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குழி­யி­லி­ருந்த ஓர் ஆணின் ஜனா­ஸாவே இவ்­வாறு வெளியில் எடுக்­கப்­பட்­டி­ருந்­த­தாக பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளன.

இதே­வேளை, குறித்த மயா­னத்­திற்கு சமீ­ப­மாகக் காணப்­பட்ட அடுத்­த­டுத்த தோட்­டங்­களில் பொலிஸார் மேற்­கொண்ட தேடுதல் நட­வ­டிக்­கை­களின் போது தோண்­டி­யெ­டுக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் ஜனாஸாவை அங்­கி­ருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் இருந்த முருங்கைத் தோட்டம் ஒன்றில் கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் பொலிஸார் மீட்­டனர்.

ஜனா­ஸா­விற்கு அணி­விக்கப்பட்­டி­ருந்த வெண்­ணிற கபன் ஆடையின் பகு­திகள் அருகில் ஓடிக் கொண்­டி­ருந்த சிற்றோடையில் மிதந்த வண்ணமிருந்தன.

இச்சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் தெரியாத நிலையில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.