பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி

0 31

எம்.எப்.எம்.பஸீர்

இரா­ஜாங்க அமைச்சர் டயானா கம­கே­வுக்கு, இந் நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக செயற்­பட சட்ட ரீதி­யி­லான தகைமை இல்லை என உயர் நீதி­மன்றம் ‘உரி­மை­வினா நீதிப் பேராணை’ (Writ of Quo warranto) ஒன்­றினை பிறப்­பித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் காமினி அம­ர­சே­கர தலை­மை­யி­லான குமு­தினி விக்­ர­ம­சிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம், எஸ்.சி. மேன்­மு­றை­யீடு. இல. 11/2024 எனும் சிறப்பு மேன் முறை­யீட்டு மனுவை விசா­ரணை செய்து இந்த தீர்ப்பை அறி­வித்­துள்­ளது.

அத்­துடன் மனு­தா­ர­ருக்கு வழக்குச் செல­வு­களை செலுத்­தவும் பிர­தி­வாதி டயானா கம­கே­வுக்கு இந்த தீர்ப்­பூ­டாக கட்­டளை இடப்­பட்­டுள்­ளது.
சமூக செயற்­பாட்­டா­ள­ரான ஓஷல லக்மால் ஹேரத் சார்பில் இந்த சிறப்பு மேன் முறை­யீட்டு மனு உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டது.

கெளரி தவ­ராசா சட்ட நிறு­வனம் சார்பில் சட்­டத்­த­ரணி தர்­மஜா தர்­ம­ரா­ஜாவின் ஆலோ­ச­னைக்கு அமைய தாக்கல் செய்­யப்­பட்ட இந்த மேன் முறை­யீட்டு மனுவின் விசா­ர­ணையின் தீர்ப்பே நேற்று (8) அறி­விக்­கப்­பட்­டது.

குறித்த மேன் முறை­யீட்டு மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக டயானா கமகே, பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸ், குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள கட்­டுப்­பாட்­டாளர் இலுக்­பிட்­டிய மற்றும் சட்ட மா அதிபர் உள்­ளிட்ட 15 பேர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

இந்த மேன் முறை­யீட்டு மனு விசா­ர­ணை­களின் போது மனுதாரர் சார்பில், ஹபீல் பாரிஸ் தலை­மையில் நிஷிக பொன்­சேகா, சனோன் தில­க­ரட்ன, ரஞ்சித் சம­ர­சே­கர, சஞ்­ஜீவ கொடித்­து­வக்கு ஆகியோர் சட்­டத்­த­ரணி தர்­மஜா தர்­ம­ரா­ஜாவின் ஆலோ­சனை பிர­காரம் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைத்­தனர்.
பிர­தி­வாதி டயானா கமகே சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்­ணான்­டோவும், 4 ஆம் பிர­தி­வா­தி­யான ஐக்­கிய மக்கள் சக்தி செய­லாளர் ரஞ்சித் மத்­து­ம­பண்­டார சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பர்மான் காசிமும் ஆஜ­ரா­கினர்.

ஏனைய பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திஸ்னா வர்­ன­குல தலை­மை­யி­லான குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

மேன் முறை­யீட்டு நீதி­மன்ற வழக்கு :
இரா­ஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்­தா­னிய பிர­ஜா­வு­ரி­மையை உடை­யவர் என்­ப­தனால் இந்த நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­ப­டவும், பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பங்­கேற்­கவும், பாரா­ளு­மன்ற வாக்­க­ளிப்­புக்­களில் பங்­கேற்­கவும் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அவ­ருக்கு சட்­ட­பூர்வ உரிமை இல்லை என தீர்ப்­ப­ளிக்­கு­மாறு கோரி சமூக செயற்­பாட்­டாளர் ஓஷல ஹேரத் முதலில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ரிட் மனு தாக்கல் செய்­தி­ருந்தார்.

இந்த மனு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் மூன்று நீதி­ப­திகள் அடங்­கிய அமர்வு முன் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.
மூன்று நீதி­ப­திகள் கொண்ட மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம், தனது முடிவை அறி­வித்த நிலையில், பெரும்­பான்மை நீதி­ப­தி­களின் நிலைப்­பாட்­டுக்கு அமைய மனுவை தள்­ளு­படி செய்ய முடிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

சிறப்பு மேன் முறை­யீட்டு மனு :
இந்த நிலை­யி­லேயே இரா­ஜாங்க அமைச்சர் டயானா கம­கேவின் நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இரத்து செய்து எழுத்­தாணை பிறப்­பிக்­கு­மாறு கோரி தாக்கல் செய்­யப்­பட்ட மனுவை நிரா­க­ரித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் மேன் முறை­யீட்டு மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் தீர்ப்பை செல்­லு­ப­டி­யற்­ற­தாக ஆக்­கு­மாறு கோரியும், இரா­ஜாங்க அமைச்சர் டயானா கமகே பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­ன­ராக பதவி வகிக்க தகு­தி­யற்­றவர் என ‘உரி­மை­வினா நீதிப் பேராணை’ ஒன்­றினை அளிக்­கு­மாறும் இம்­மேன்­மு­றை­யீட்டு மனு­வூ­டாக உயர் நீதி­மன்­றிடம் கோரப்­பட்­டது.

மேன் முறை­யீட்டு விசா­ரணை :
அதன்­படி இந்த சிறப்பு மேன் முறை­யீட்டு மனு உயர் நீதி­மன்றில் கடந்த பெப்­ர­வரி 13 ஆம் திகதி விசா­ரிக்­கப்­பட்­டது. அத்­துடன் மனு­தாரர் சார்­பி­லான எழுத்து மூல சமர்ப்­ப­ணங்கள் பெப்ர­வரி 28 ஆம் திக­தியும், முதல் பிர­தி­வாதி டயானா கமகே சார்­பி­லான எழுத்து மூல சமர்ப்­ப­ணங்கள் பெப்­ர­வரி 26 ஆம் திக­தியும் முன்வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே நேற்று (8) தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.
இந்த தீர்ப்­பா­னது 32 பக்­கங்­களை கொண்­டுள்­ள­துடன், நீதி­ய­ரசர் ஜனக் டி சில்வா தீர்ப்­பினை எழு­தி­யுள்ளார். ஏனைய இரு நீதி­ய­ர­சர்­களின் இணக்­கத்­துடன் அவரே நேற்று தீர்ப்­பினை திறந்த மன்றில் வாசித்தார்.

இலங்கை குடி­யு­ரி­மையை நிரூ­பிக்க
தவ­றியுள்ளார்:
இந்த நிலையில் தீர்ப்­பினை வாசித்த நீதி­யரசர் ஜனக் டி சில்வா, இரா­ஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது இலங்கை குடி­யு­ரி­மையை நீதி­மன்­றத்தில் நிரூ­பிக்கத் தவ­றி­யுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பின் 89ஆவது உறுப்­புரை பிர­காரம், இலங்கைப் பிரஜை அல்லாத ஒருவர் இந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­ன­ராக செயற்­ப­டு­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என நீதி­பதி தனது தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதி­கார துஷ்­பி­ர­யோகம் :
“பிர­தி­வா­தி­யான டயானா கமகே, தான் பிரித்­தா­னிய கட­வுச்­சீட்டை உடை­யவர் என்­பதை வழக்கு விசா­ர­ணை­களின் போது ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 5 ஆம் திகதி பிரித்­தா­னிய கட­வுச்­சீட்­டுடன் இலங்­கைக்கு வந்த்­துள்­ளமை தொடர்­பிலும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் அவர் இரா­ஜ­த­ந்திர கடவுச் சீட்­டையும், உத்­தி­யோ­க­பூர்வ இலங்கை கடவுச் சீட்­டொன்­றி­னையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளமை தொடர்­பிலும் வழக்கில் விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. இலங்கை குடி­யு­ரிமைச் சட்­டத்­தின்­படி, இலங்கை பிரஜை ஒருவர் வெளி­நாட்டு குடி­யு­ரி­மையை பெற்­றுக்­கொள்ளும் போது அவ­ரது இந்த நாட்டு குடி­யு­ரிமை தானாக இரத்­தா­கி­விடும். பிர­தி­வாதி டயானா கம­கேவும் பிரித்­தா­னிய பிரஜா உரி­மையை பெற்­றுக்­கொண்ட பின்னர் அவ­ரது இந்த நாட்டு பிரஜா உரிமை இரத்­தா­கி­விட்­டது என்­பது தெளி­வான விட­ய­மாகும். அவ்­வாறு இருக்­கையில் அவர் இலங்­கையின் உத்­தி­யோ­க­பூர்வ கட­வுச்­சீட்டை பெற்­றுக்­கொண்­டுள்­ள­மை­யா­னது பிர­தி­வாதி (டயானா) தனது அதி­கா­ரத்தை தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­மையை புலப்­ப­டுத்­து­கின்­றது” என நீதி­ய­ரசர் தனது தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டினார்.

சி.ஐ.டி. விசா­ர­ணையில்
தெரிய வந்த விடயம் :
இத­னி­டையே, டயானா கம­கே­வுக்கு எதி­ராக சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னா­ய்வுத் திணைக்­களம் முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள் தொடர்­பிலும் அதன் அவ­தா­னிப்­புக்கள் தொடர்­பிலும் தனது தீர்ப்பில் நீதி­ய­ரசர் ஜனக் டி சில்வா குறிப்­பிட்டார்.

“டயானா கம­கே­வுக்கு எதி­ராக குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு சட்­டத்தின் கீழ் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களம் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் வழக்கு பதிவு செய்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. இதன்­போது குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டா­ளரும் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் அளித்­தி­ருந்தார். அதனை ஆராய்­கின்ற போது டயானா கமகே ஒரு பிரித்­தா­னிய பிரஜை என்­பது வெளி­ப்படுத்­தப்­பட்­டி­ருந்­தது. குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு சட்­டத்தின் கீழ் பிர­தி­வா­திக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­தற்கு போது­மான கார­ணிகள் இருப்­பது நீதி­வா­னினால் அவ­தா­னிக்­கப்ப்ட்­டி­ருந்தது. பிர­தி­வா­தியை கைது செய்ய நீதிவான் நேர­டி­யாக உத்­தரவி­டா­விட்­டாலும், அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. க்கு போது­மான கார­ணிகள் இருப்­ப­தாக நீதிவான் குறிப்­பிட்­டுள்ளார். எனினும் சி.ஐ.டி. அவரைக் கைது செய்­ய­வில்லை.

அவ்­வாறு செய்­யா­த­தற்கு சிஐ­டி­யி­ன­ருக்கு பல கார­ணங்கள் இருக்­கலாம். ஆனால் பதவி, அதி­காரம், செல்வம் போன்ற விட­யங்­களால் பாகு­பா­டு­காட்­டப்­படக் கூடாது என்­ப­தற்­கா­கவே சட்ட தெய்­வத்தின் கண்கள் கட்­டப்­பட்­டுள்­ளன. அர­சி­ய­ல­மைப்பின் 12(1) உறுப்­புரை பிர­காரம், ஒவ்­வொரு குடி­ம­கனும் சட்­டத்தின் முன் சம­மாக நடத்­தப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.’ என நீதி­ய­ரசர் தனது தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்ளார்.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின்
விசா­ரணை :
இத­னை­விட, மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தீர்ப்பு தொடர்­பிலும் நீதி­ய­ரசர் தனது தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்ளார்.

‘மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் விசா­ர­ணையின் போது, வழக்கு தொடர்­பாக சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களின் அசல் பிர­திகள் சமர்ப்­பிக்­கப்­ப­டா­மையை அந்த நீதி­மன்றம் மனுவை நிரா­க­ரிக்க ஏது­வான கார­ணி­களில் ஒன்­றாக எடுத்­துக்­கொண்­டுள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. எனினும் அதனை ஏற்க முடி­யாது. குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவை விட­யங்­களை ரிட் மனு­வொன்­றினை விசா­ரிக்கும் போது சமமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பை ஆராயும் போது, அந்த நீதிமன்றத்திற்கு பிரதிவாதி டயானா கமகே சார்பில் முன் வைக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தின் பெரும்பாலான பகுதிகள் அப்படியே நகலெடுத்து ஒட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறான சுமார் 80 இடங்கள் அந்த நீதிமன்ற தீர்ப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான பந்திகளே புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவறானது ‘ என நீதியரசர் ஜனக் டி சில்வா தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படியே, மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அரசியலமைப்பின் 89 ஆவது உறுப்புரை பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக டயானா கமகே செயற்பட சட்ட ரீதியிலான தகுதி இல்லை என நீதியர்சர் ஜனக் டி சில்வா, ஏனைய இரு நீதியரசர்களின் இணக்கத்துடன் தீர்ப்பை அறிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.