வைத்தியர் சாபிக்கு எதிரான செய்தி குறித்து விசாரணை

0 685

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செய்­தியை முதன் முதலில் வெளி­யிட்ட சிங்­கள ஊடகம் ஒன்று நெருக்­க­டியை  எதிர்­நோக்­க­வுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.மேற்­படி விடயம் தொடர்­பாக குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­களம், எதிர்­வரும் 27 ஆம் திகதி குரு­நாகல் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்ள அறிக்­கையைத் தொடர்ந்தே சம்­பந்­தப்­பட்ட ஊடகம் வெளி­யிட்ட முன்­பக்க செய்தி தொடர்­பாக நெருக்­க­டியைச் சந்­திக்க இருப்­ப­தாக மற்­றொரு சிங்­கள ஊடகம் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

டாக்டர் ஷாபி­யினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகச் சுமத்­தப்­படும் மேற்­படி விடயம் தொடர்­பாக பொலிஸ்மா அதி­ப­ரினால் குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்­திற்கு விடுக்­கப்­பட்ட பணிப்­பு­ரைக்­க­மைய மேற்­கொண்ட விசா­ரணை அறிக்கை எதிர்­வரும் 27 ஆம் திகதி குரு­நாகல் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

தயா­ரிக்­கப்­பட்­டுள்ள மேற்­படி அறிக்­கையில் டாக்டர் ஷாபி அத்­த­கைய குற்றச் செயல் ஒன்றில் ஈடு­பட்­ட­தாக இது­வ­ரையும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும் அதற்­க­மை­யவே குறித்த பத்­தி­ரிகை நெருக்­க­டியை எதிர்­நோக்­க­வுள்­ள­தாக அந்த பத்­தி­ரிகைச் செய்­தியில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

குறித்த பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்­தியைத் தொடர்ந்தே பிக்கு ஒருவர் சாகும் வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் அதனால் சுமார் 1500 பொலிஸார் மேல­தி­க­மாக சேவையில் ஈடு­ப­டுத்த நேர்ந்­த­தா­கவும் அர­சாங்­கத்­தி­லுள்ள சில அமைச்­சர்கள் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்ய நேர்ந்­த­தா­கவும் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் மோதல் ஒன்று உரு­வாகும் நிலை ஏற்­பட்­ட­தா­கவும் இக்­கா­ர­ணி­களை முன்­வைத்தே மேற்­படி விடயம் குறித்து நீதி­மன்றம் விசேட கவனம் செலுத்­த­வுள்­ள­தா­கவும் இப்­பத்­தி­ரிகைச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் குறித்த ஊடக நிறு­வ­னத்­திற்கும் அதனை எழு­திய ஊட­க­வி­ய­லா­ள­ருக்கும் எதி­ராக ஐ.ஸீ.ஸீ.பி.ஆர் சட்­டத்தின் கீழ் வழக்குத் தொடர்­வ­தற்குப் பெரும்­பாலும் வாய்ப்­புள்­ள­தா­கவும் அறிய வந்­துள்­ள­தாக அச்செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  குறித்த செய்­தியை வழங்­கி­ய­தாகத் தெரி­விக்­கப்­படும் பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கும் மேற்­படி முறைப்­பாட்டின் கீழ் வழக்குத் தொடர வாய்ப்­புள்­ள­தா­கவும் தெரிவிக்கப் படுகிறது. குறித்த ஊடகவியலாளர், மேற்படி பிரதி பொலிஸ்மா அதிபரே தனக்கு இது விடயமான தகவல்களைத் தந்ததாக ஊடகவியலாளர் குற்றவியல் திணைக்களத்தின் விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும் தெரியவருவதாக அந்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.