கல்முனையில் இரு தரப்பு போராட்டங்களும் நிறைவு

0 572

கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த வேண்டும் எனக்­கோரி கடந்த ஒரு வார கால­மாக தமி­ழர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த உண்­ணா­வி­ரத போராட்­டமும் அதற்­கெ­தி­ராக முஸ்­லிம்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட சத்­தி­யாக்­கி­ரக போராட்­டமும் நேற்று ஞாயிறு நண்­ப­க­லுடன் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி ரன்­முத்­துக்­கல சங்­க­ரத்ன தேரர், இந்த உண்­ணா­வி­ர­தத்தை முடித்து வைத்து உரை­யாற்­றினார்.

கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு கூடிய விரை­வாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அத்­து­ரெ­லிய ரதன தேரர் மற்றும் கல­கொட அத்தே ஞான சார தேரர் போன்­றோ­ராலும் அரச தரப்­பி­ன­ராலும் வழங்­கப்­பட்ட உத்­த­ர­வா­தங்­களை ஏற்­றுக்­கொண்டே தமது உண்­ணா­வி­ரதப் போராட்டம் நிறைவு செய்­யப்­ப­டு­வ­தாக ரன்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர் தன­து­ரையில் தெரி­வித்தார்.

எமது கோரிக்­கையில் நாம் தொடர்ந்தும் உறு­தி­யாக இருப்போம் எனவும் குறித்த காலப்­ப­கு­தி­யினுள் தமிழ் செய­லகம் தர­மு­யர்த்­தப்­படாவிட்டால் எமது போராட்டம் மீண்டும் மிகப்­பெ­ரி­ய­ளவில் வெடிக்கும் எனவும் அவர் சூளு­ரைத்தார்.

தமி­ழர்­களின் உண்­ணா­வி­ரதப் போராட்டம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டி­ருப்­ப­தனால் தாம் ஏற்­க­னவே அறி­வித்­ததன் பிர­காரம் தமது சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தை நிறைவு செய்­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரதித் தலை­வரும் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

இணக்­க­மான தீர்வு எட்­டப்­படும் வரை நாம் விழிப்­பாக இருப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார். இறு­தி­யாக துஆப் பிரார்த்­த­னை­யுடன் சத்­தி­யாக்­கி­ரகம் நிறை­வுக்கு வந்­தது.

முஸ்லிம் தரப்பின் விசேட கூட்டம்

இதே­வேளை, கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தும் விவ­கா­ரத்தை இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் தேசியப் பிரச்­சி­னை­யாக கொண்டு செல்­வ­தென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரதித் தலை­வரும் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலை­மையில் நடை­பெற்ற அவ­சரக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதற்­கான பூர்­வாங்க ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக அனைத்து துறை­யி­ன­ரையும் உள்­ள­டக்­கி­ய­தாக பரந்­து­பட்ட பொறி­மு­றை­யொன்றை வகுப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன் ஊடாக கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­லக உரு­வாக்­கத்­தின்­போது கல்­முனை முஸ்­லிம்­களின் பிர­தான பொரு­ளா­தார வளங்­க­ளான மாந­கர பஸார், பொதுச் சந்தை, வயல் காணிகள் மற்றும் குடி­யி­ருப்­புகள் என்­பன அவர்­க­ளுக்குத் தெரி­யா­ம­லேயே தமிழ் கிராம சேவகர் பிரி­வு­க­ளுக்குள் உள்­வாங்­கப்­பட்டு பெரும் அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டி­ருப்­பதை ஜனா­தி­பதி, பிர­தமர், உள்­ளிட்ட அர­சாங்க உயர் மட்­டத்­தி­ன­ருக்கும் சிங்­கள, பௌத்த தரப்­பி­ன­ருக்கும் எதி­ர­ணி­யி­ன­ருக்கும் மித­வாத தமிழ் தலை­மை­க­ளுக்கும் எடுத்து விளக்கி, உணர்த்­து­வது முக்­கிய இலக்­காக அமை­ய­வுள்­ள­தாக இக்­கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

கல்­முனை மாந­கர முதல்வர் சட்­டத்­த­ரணி ஏ.எம்.றகீப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சட்­டத்­த­ரணி ஆரிப் சம்­சுதீன், ஏ.எல்.தவம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமின் இணைப்புச் செய­லாளர் ரஹ்மத் மன்சூர், கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­னர்­க­ளான சட்­டத்­த­ரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், ஏ.சி.ஏ.சத்தார், அப்துல் மனாப், எம்.எம்.நிசார், கல்­முனை வர்த்­தகர் சங்­கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக், பொதுச் சந்தை வர்த்­தகர் சங்­கத்தின் தலைவர் ஏ.பி.ஜமா­ல்தீன், செய­லாளர் ஏ.எல்.கபீர், முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஸீர் உட்­பட கல்­முனை, மரு­த­முனை, சாய்ந்­த­ம­ருது மற்றும் நற்­பிட்­டி­முனை பிர­தே­சங்­களை சேர்ந்த முக்­கி­யஸ்­தர்கள் பலரும் இக்­கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

அதே­வேளை, கல்­முனைத் தொகு­தி­யி­லுள்ள அனைத்து முஸ்லிம் ஊர்­க­ளையும் சேர்ந்த பள்­ளி­வா­சல்கள், இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், வர்த்தக, விவசாய, மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று ஞாயிறு மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.