ஹோட்டலில் அரேபியர்களுடன் ஹிஸ்புல்லாஹ்: சந்திப்பை ஏற்பாடு செய்தவர் சவூதியில் நாட்டுக்கு அழைத்து விசாரிக்க திட்டம்

0 575

4/21 உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத தற்­கொலை தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற தினத்­தன்று இரவு அரே­பிய பிர­ஜைகள் மூவரை மட்­டக்­க­ளப்பு – பாசிக்­குடா ஹோட்டல் ஒன்றில் சந்­தித்து அவர்­களை நாட்­டி­லி­ருந்து அனுப்­பு­வ­தற்கு முயற்­சித்­த­தாக  கிழக்கு முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ் வுக்கு  எதி­ரான குற்­றச்­சாட்டு முன்­வைக்­க­ப்படும் சம்­பவம் தொடர்பில்,  குறித்த சந்­திப்பை ஏற்­பாடு செய்­த­தாகக் கூறப்­படும் பிர­தான ஒருங்­கி­ணைப்­பா­ளரை  விசா­ரணை செய்ய சி.ரி.ஐ.டி. எனும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு தீர்­மா­னித்­துள்­ளது.

குறித்த தின இரவு சந்­திப்பை தொடர்ந்து அந்த ஒருங்­கி­ணைப்­பா­ளரும் சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்ள நிலையில், அவரை விசா­ர­ணை­க­ளுக்கு அழைக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா மற்றும் அரே­பிய பிர­ஜைகள் மூவர் பாசிக்­குடா பகு­தி­யி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் சந்­தித்­தமை தொடர்­பி­லான சி.சி.ரி.வி. காணொ­லிகள்  ஊட­கங்­களில் ஒலி­ப­ரப்­பப்­பட்­டி­ருந்­தன.  தற்­போது  அந்த காணொ­லி­களை  பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ர­ணைப்­பி­ரி­வினர் தமது பொறுப்பில் எடுத்­துள்­ளனர்.

குறித்த தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட நாளில் அரே­பிய பிர­ஜைகள் மூவரும் பதற்­ற­மான நிலையில் ஹோட்­டலை விட்டு வெளி­யேறும் பதி­வுகள் அதில் உள்­ள­தாகக் கூறப்­படும் நிலையில், அவர்கள்,  என்ன நோக்­கத்­திற்­காக இலங்­கைக்கு வருகை தந்­தார்கள் என்­பது தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இது தொடர்பில் ஏற்­க­னவே 7 பேரிடம் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் கடந்த சனி­யன்று முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்­விடம் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் 8 மணி நேர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

இதன்­போது குறித்த சந்­திப்பை ஏற்­பாடு செய்­த­வர்கள் உள்­ளிட்ட மேல­திக தக­வல்­களை ஹிஸ்­புல்லாஹ் விசா­ரணை அதி­கா­ரி­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அதன்­ப­டியே  குறித்த ஒருங்­கி­ணைப்­பாளர் தொடர்பில் தக­வல்கள் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவர், குறித்த வீடி­யோ­விலும் தோன்­று­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே இந்த ஒருங்கிணைப்பாளர் தொடர்பில் பிரத்தியேக விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே,  தற்போது பாசிக்குடா ஹோட்டல் சம்பவம் தொடர்பிலும் அவரை விசாரிக்க பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.