முஸ்லிம் கடைகளை புறக்கணிக்குக

ஞானரத்ன தேரர் கோரிக்கை

0 679

சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரி­யுங்கள். முஸ்லிம் கடை­க­ளுக்குச் செல்­லா­தீர்கள். அந்தக் கடை­களில் உண்­ணவோ, அருந்­தவோ வேண்டாம்’ என கண்டி அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் வரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் அறை கூவல் விடுத்­துள்ளார்.

கண்டி, யட்­டி­நு­வர, திய­கெ­லி­னாவ கித்­சி­ரி­மெவன் ரஜ­மகா விகா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது;

“முஸ்­லிம்கள் சிங்­கள மக்­களை அழிப்­ப­தற்கு எடுத்த செயற்­பா­டுகள் இப்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. சிங்­கள மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். சிங்­கள பெண்­க­ளுக்கு கருத்­தடை சத்­திர சிகிச்சை செய்த முஸ்லிம் டாக்டர் ஒருவர் தொடர்பில் ஊட­கங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. அந்த முஸ்லிம் டாக்­டரை கல்­லெ­றிந்து கொல்ல வேண்­டு­மென பலர் என்­னிடம் கூறி­னார்கள்.

இவ்­வா­றான இனத்­து­ரோ­கி­களை சுதந்­தி­ர­மாக விடக்­கூ­டாது என சீலம் இருக்கும் (சில்) பெண்கள் என்­னிடம் கூறி­னார்கள். அவரை கல்லால் அடித்­துக்­கொல்ல வேண்டும் என்­றார்கள். நான் அப்­ப­டிக்­கூற மாட்டேன். ஆனால் செய்­யப்­பட வேண்­டி­யது அதுதான்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சி­யா­ளர்கள் நாட்டை நேசிப்­ப­வர்­க­ளல்ல. சமல் ராஜபக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு ஒன்­றி­ணை­யுங்கள் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மயந்த திசா­நா­யக்­க­வுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.