மினுவாங்கொடைக்கு தொடர்ந்து இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு

0 504

வன்­செ­யல்­களால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள மினு­வாங்­கொடை நக­ருக்கு தொடர்ந்தும் பலத்த பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தி­னரும், பொலி­ஸாரும், பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்ள மினு­வாங்­கொடை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­குள்ளும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் பாது­காப்பில் ஈடு­பட்­டுள்­ளனர்.

மீண்டும் மினு­வாங்­கொடை தாக்­கப்­படும் என வதந்­திகள் பரப்­பப்­பட்டு வரு­வதால் நகரை அண்­டிய கிராம மக்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில் இருப்­ப­தாக மினு­வாங்­கொடை ஜும்ஆ பள்­ளி­வாசல் செய­லாளர் ஏ.டபிள்யூ. ரஷீத் தெரி­வித்தார்.

இப்­ப­கு­தியைச் சேர்ந்த கோப்­பி­வத்த கிராமம் தாக்­கப்­படும் என நேற்று முன்­தினம் வதந்­திகள் பரப்­பப்­பட்­டதால் அங்கு வாழும் சுமார் 250 முஸ்லிம் குடும்­பங்கள் பதற்ற நிலையில் உள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

மினு­வாங்­கொடை பள்­ளி­வா­ச­லுக்கும், நக­ருக்கும் தொடர்ந்தும் அர­சி­யல்­வா­திகள் விஜயம் செய்த வண்­ண­முள்­ளனர். நேற்று பதில் பாது­காப்பு அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார், மேல்­மா­காண ஆளுநர் அசாத்­சாலி என்போர் விஜயம் செய்­தனர். நேற்று முன்­தினம் அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ. ஹலீம், ரிசாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்சர் அமீர் அலி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஜிபுர் ரஹ்மான், ஏ.எச்.எம். பௌஸி, ஹர்ஷ ராஜ­க­ருண ஆகியோர் விஜயம் செய்­தனர்.

பள்­ளி­வா­சலின் மேல் மாடியில் ஒருபகுதி சுத்தம் செய்யப்பட்டு தற்போது தொழுகை நடாத்தப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசல் செயலாளர் ரஷீத் கூறினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.