வன்முறையாளர்களிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

0 437

ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்லிம் மக்­களை இலக்­கு­வைத்து வன்­முறைத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில், வன்­மு­றை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அர­சாங்கம் முஸ்லிம் மக்­களைப் பாது­காக்க வேண்டும் என்று சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது. அத்­தோடு வன்­மு­றைகள் மேலும் பர­வாமல் தடுப்­ப­தற்கும் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களைச் சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு மன்­னிப்­புச்­சபை அர­சாங்­கத்தைக் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.

ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து கடந்த 13 ஆம் திக­தி­யி­லி­ருந்து சில முஸ்லிம் பிர­தே­சங்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட வன்­முறைத் தாக்­கு­தல்­களால் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், பெரு­ம­ள­வான சொத்­துக்­க­ளுக்குச் சேத­மேற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் வன்­முறை செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்­களின் இலக்­கா­கி­யுள்ள முஸ்­லிம்­களை அர­சாங்கம் பாது­காக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ள சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது:

வன்­மு­றை­யா­ளர்­களால் சிறு­பான்மை முஸ்­லிம்­களின் வீடுகள், பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­ப­டு­கின்ற தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து அர­சாங்கம் அவர்­களைப் பாது­காக்க வேண்டும். வன்­மு­றை­யையும், அச்­சத்­தையும் பரப்பும் குழுக்­க­ளுக்கு எதி­ராக ஒற்­று­மை­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் மேம்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை உரிய அதி­கா­ரிகள் முன்­னெ­டுக்க வேண்டும்.

மனித உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு முன்­னு­ரிமை அளித்துச் செயற்­ப­டு­வ­துடன், வன்­மு­றைகள் மேலும் பர­வாமல் தடுப்­ப­தற்கும் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களைச் சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றோம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறை தாக்­குதல் சம்­ப­வங்­களில் தொடர்­பு­பட்­டி­ருந்த சில­ருக்கு தற்­போ­தைய தாக்­கு­தல்­களில் சம்­பந்­த­மி­ருப்­ப­தாக வெளி­யா­கி­யுள்ள அறிக்­கை­களில் வெகு­வாகக் கவனம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.

இந்தத் தாக்­கு­தல்கள் திடீ­ரென ஓர் அழுத்­தத்­தினால் ஏற்­பட்­டவை என்று கரு­த­மு­டி­யாது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­ரு­வாக்கம் தொடர்பிலான அறிகுறிகள் முன்னரே தென்பட்டதுடன், அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற எச்சரிக்கைகளைக் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அண்மையில் இடம்பெற்றுள்ள பல தாக்குதல்களை தடுத்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.