காஷ்மீர் பொலிஸ் காவலில் இருந்த ஆசி­ரியர் உயி­ரி­ழப்பு

மோதல்கள் தீவிரம் 

0 522

பாது­காப்பு தொடர்­பான விசா­ர­ணைக்­காக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நபர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் அறி­வித்­ததைத் தொடர்ந்து இந்­திய நிரு­வா­கத்­திற்­குட்­பட்ட காஷ்மீர் பகு­தி­களில் நூற்­றுக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் இந்­தியப் பாது­காப்புப் படை­யி­ன­ருக்கும் இடை­யே­யான மோதல்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

பொலிஸார் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் பயங்­க­ர­வாத வழக்கு தொடர்­பான விசா­ர­ணைக்­காக 29 வய­தான இர­சா­ய­ன­வியல் ஆசி­ரி­ய­ரான றிஸ்வான் ஆசாத் பண்டிட் கைது செய்­யப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. பொலிஸ் காவலில் இருந்­த­போது அந்­நபர் உயி­ரி­ழந்­துள்ளார். இறப்­புக்­கான காரணம் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் தெற்கு புல்­வாமா மாவட்­டத்தில் மக்கள் ஒன்­று­கூ­டிய அதே­வேளை, இது அப்­பட்­ட­மான படு­கொலை என பண்­டிட்டின் குடும்­பத்­தினர் கண்­டித்­துள்­ளனர். பாது­காப்புப் படை­யினர் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்­டு­களை வீசினர். அதே­வேளை அப் பிராந்­தி­யத்தில் இணை­யத்­தளச் சேவை­களை அதி­கா­ரிகள் முடக்­கி­யுள்­ளனர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நள்­ளி­ரவு அவன்­டி­போரா கிரா­மத்­தி­லுள்ள எமது வீட்டில் வைத்து பண்டிட் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார் என பண்­டிட்டின் சகோ­த­ர­ரான முபாஷிர் ஆசாத் தெரி­வித்தார். அவர் விரைவில் விடு­விக்­கப்­ப­டுவார் எனக் கூறிச் சென்­றனர். எனது சகோ­தரன் எந்தக் குற்றச் செய­லிலும் ஈடு­ப­டா­தவர். இது அப்­பட்­ட­மான படு­கொ­லை­யாகும் எனவும் அவர் தெரி­வித்தார். கடந்த பெப்­ர­வரி மாதம் புல்­வாமா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 42 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா வும் பாகிஸ்தானும் உரிமைகோரும் காஷ்மீரில் பதற்றநிலை தீவிரமடைந்துள்ளது.
-Vidvielli

Leave A Reply

Your email address will not be published.