கூர்மையடையும் குடும்ப முரண்பாடுகள்

0 1,011
  • எம்.எம்.ஏ.ஸமட்

அர­சியல் கட்­சிகள் முதல் குடும்ப இல்­லங்கள் வரை முரண்­பா­டுகள் கூர்­மை­ய­டைந்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. தலை­வர்கள், உறுப்­பி­னர்கள், ஆசி­ரியர் மாணவர், கணவன் மனைவி, பெற்றோர் பிள்­ளைகள், மேல்­நிலை அதி­கா­ரிகள் கீழ் நிலை ஊழி­ய­ர்கள் என பல்­வேறு தரப்­புக்கள் மற்றும் மட்­டங்­க­ளுக்­கி­டையில் ஏற்­படும் கருத்து, கொள்கை முரண்­பா­டுகள் ஒவ்­வொரு தரப்­புக்­க­ளுக்­கி­டை­யிலும், பிள­வு­களும், பிரச்­சி­னை­களும் தலை­தூக்க கார­ண­மாக அமைந்­து­வி­டு­வ­தையும் அதனால் பல விளை­வுகள் நடந்­தே­று­வ­தையும் தற்­கா­லத்தில் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளன.

குறிப்­பாக குடும்ப இல்­லங்­களில் நிகழ்­கின்ற முரண்­பா­டுகள் விவா­க­ரத்து மற்றும் தற்­கொலை, தற்­கொ­லை­க­ளுக்­கான முயற்­சிகள் என்­ப­வற்றை உரு­வாக்­கு­வ­தையும் அதனால்  குடும்­பங்கள் சூனி­ய­மா­வ­தையும் தற்­கா­லத்தில் இடம்­பெறும் சம்­ப­வங்­களை அவ­தா­னிக்­கின்­ற­போது விளங்­கிக்­கொள்ள முடி­கி­றது.

இவற்­றிற்குக் காரணம் என்­ன­வென்­பது ஆரா­யப்­பட வேண்­டி­ய­தோடு, முரண்­பா­டுகள் ஏற்­ப­டாமல் வாழ்­வ­தற்­கான வழி­காட்­டல்­களும் ஆற்­றுப்­ப­டுத்­தல்­களும் வழங்­கப்­ப­டு­வது காலத்தின் கட்­டா­ய­மா­க­வுள்­ளது. பொது­வாக கணவன் மனை­வி­க­ளுக்­கி­டையில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டுகள் பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தைப் பாதிப்­ப­தோடு அக்­கு­டும்­பத்தை சின்­னா­பின்­ன­மாக்­கி­வி­டு­கி­றது.

தற்­கா­லத்தில் பிள்­ளைகள் வழி­த­வறிச் செல்­வ­தற்கு பிர­தான கார­ண­மாக இருப்­பது குடும்பப் பின்­ன­ணி­யெனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.  தற்­போது சர்­வ­தேச அளவில் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்கும் மாகந்­துர மதூஷ் கூட ஒரு போதைப் பொருள் மாபி­யா­வா­கவும் பல்­வேறு குற்­றச்­செ­யல்­களின் பிதா­வா­கவும் மாறு­வ­தற்குக் காரணம் அவ­னது குடும்பப் பின்­னணி என்­பதை அவ­னது வாழ்க்கை வர­லாற்றைப் படிக்­கும்­போது கற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இதனால், குடும்­பங்கள் மத்­தியில் ஆற்­றுப்­ப­டுத்தல் அவ­சி­ய­மா­க­வுள்­ள­தோடு திரு­ம­ணத்­திற்கு முன்னும் பின்னும் ஆற்­றுப்­ப­டுத்தல் வழங்­கப்­ப­டு­வது கட்­டா­ய­மென உண­ரப்­ப­டு­வது காலத்தின் தேவை என்­ப­தோடு, குடும்­பங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் கூர்­மை­ய­டை­வ­தையும் தவிர்க்கக் கூடி­ய­தாக அமையும்.

திரு­ம­ணமும் சம­கா­லமும்

திரு­மணம் பல்­லாண்டு காலப்­பயிர் என்­பார்கள். இந்தப் பல்­லாண்டு காலப்­பயிர் வாடாமல் வள­மாக வளர வேண்­டு­மானால் அது நல்ல போச­ணை­யுடன்  வளர்க்­கப்­பட வேண்டும். முன்­னைய காலங்­க­ளை­விட இந்­ந­வீன யுகத்தில் சிறு சிறு விட­யங்­க­ளுக்­காக முரண்­பட்டு விவா­க­ரத்துக் கோரி பல்­லாண்­டு­கால திரு­மண பந்­தத்தை முறித்­துக்­கொள்ள ஆணும் பெண்ணும் அவ­ச­ரப்­ப­டு­கின்­றனர். இருப்­பினும், எத்­த­கைய விட­யங்­களை ஆணும் பெண்ணும் அறிந்து கொள்­வதன் மூலம் திரு­மண வாழ்க்­கையை முரண்­பா­டு­க­ளின்றி வெற்­றி­க­ர­மாக்­கலாம் என்­பதை அறிந்து கொள்­வது அவ­சி­ய­மாகும்.

திரு­மணம் என்­பது வய­து­வந்த ஓர் ஆணும் பெண்ணும் தன்னுள் ஏற்­ப­டுத்­திக்­கொள்ளும் சட்­ட­பூர்­வ­மான இணைப்­பாகும். திரு­ம­ண­பந்­தத்தில் இணையும் தம்­ப­தி­யினர் புதிய வாழ்க்­கையை ஆரம்­பித்து புதுக்­கு­டும்­ப­மொன்றை உரு­வாக்கத் தன்னை தயார்­ப­டுத்­திக்­கொள்­வது கட­மை­யாகும். திரு­மண பந்­தத்தின் முக்­கிய குறிக்­கோ­ளாகத் திகழ்­வது குடும்­ப­மொன்றை உரு­வாக்­கு­த­லாகும். ரிங் லாட்னர் என்­பவர் குறிப்­பிடும் போது, “நீ எந்தக் குடும்­பத்தில் பிறந்தாய் என்­பது முக்­கி­ய­மல்ல, எப்­ப­டிப்­பட்ட குடும்­பத்தை உரு­வாக்கப் போகிறாய் என்­பதே முக்­கி­ய­மா­னது.”

திரு­மண வாழ்வு பல உயர்ந்த இலக்­கு­க­ளையும் நோக்­கங்­க­ளையும் கொண்­டுள்­ளது. மன­அ­மைதி, பாலூக்­கத்­தேவை, மறு உற்­பத்தி, சமூ­கப்­பா­து­காப்பு, பெண்­க­ளுக்­கான பாது­காப்பு மூப்­பின்­போது உதவி,  நட்புத் தேவை, பெய­ரையும் பொரு­ளையும் விட்டுச் செல்லல் என்ற இலக்­குடன் திரு­ம­ணங்கள் அமை­ய­வேண்டும். அந்த இலக்­கு­களை அடை­வ­தற்­காக கண­வனும் மனை­வியும் உழைக்க வேண்டும்.

திரு­மணம் செய்­வதை அனைத்து மதங்­களும் ஊக்­கு­விக்­கின்­றன. ஏனெனில், திரு­மணம் வாழ்க்­கையின் இன்­றி­ய­மை­யாத தேவை­களுள் ஒன்­றாகக் காணப்­ப­டு­கின்­றது. திரு­மண வாழ்க்­கையை வெற்­றி­க­ர­மாக நடாத்­திச்­செல்ல ஒரு­வ­ரை­யொ­ருவர் புரிந்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும். அத்­தோடு பர­ப­ரப்பும் பயமும் பதற்­றமும் நிறைந்த சமூக வாழ்வில் பிரச்­சி­னை­களும் சிக்­கல்­களும் ஏற்­ப­டு­வது இயல்­பா­னதே. அவற்­றி­லி­ருந்து விடு­பட்டு சற்று ஆறு­தல்­பெற மனி­த­னுக்கு மிக நெருங்­கிய துணை­யொன்று அவ­சியம். திரு­மண வாழ்க்­கையின் மூலம் ஒரு­வ­ருக்கு உடல், உள, சமூக ரீதி­யான தேவைகள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன. குடும்ப வாழ்வில் மன அமை­தியே உண்­மை­யான இலக்­காகும்.

கண­வ­னிடம் மனை­வியும், மனை­வி­யிடம் கண­வனும்  மன அமை­தி­யையும் ஆறு­த­லையும் பெற­வேண்டும் என்­ப­தற்­கா­கவே திரு­மண பந்தம் வர­லாற்றின் எல்­லாக்­கால கட்­டங்­க­ளிலும் அனு­ச­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது.  பாலூக்­கத்­தேவை வாழ்நாள் முழு­வதும் நீடித்து நிற்­ப­தில்லை. அது இள­மைக்­கால உளக்­கி­ளர்ச்­சி­க­ளினால் உந்­தப்­ப­டு­வது. ஆனால் மன ஆறு­தலும் அமை­தியும் வாழ்க்கை முழு­வதும் தேவை­யா­னது. நிம்­மதி, மகிழ்ச்சி, உளத்­தி­ருப்தி, மன அமைதி என்­பன எல்லா மனி­தர்­களும் எப்­போதும் தேடிக்­கொண்­டி­ருப்­பவை. தனது  இர­க­சி­யங்­களை, துன்­பங்­களை, இன்­பங்­களைப் பகிர்ந்­து­கொள்­வ­தற்கும் மனம்­விட்டுப் பேசி சுமையை இறக்­கி­வைப்­ப­தற்கும் மண­வாழ்வு களம் அமைக்­கின்­றது. எனவே, குடும்ப வாழ்வின் உண்­மை­யான இலக்கு இந்த உள அமை­தியே.

பாலூக்­கத்­தே­வையும் மனித இயல்­பு­களில் ஒன்று. மனி­த­னாகப்  பிறந்த அனை­வ­ருக்கும் உரி­யது. தீர்க்­க­த­ரி­சிகள், தத்­து­வ­ஞா­னிகள், துற­விகள். ஆத்­ம­ஞா­னிகள் யாருமே இதற்கு விதி­வி­லக்­கல்ல.

கட்­டி­ள­மைப்­ப­ரு­வத்­தி­லி­ருந்து முன்­மு­துமை வரை மனி­தனில் சுரக்கும் ஹோர்­மோன்கள் பாலூக்­கத்தை தரு­கின்­றன. மனிதன் எதிர்ப்பால் கவர்ச்­சிக்கு உள்­ளா­கின்றான். மனித உடலின் அடிப்­படைத் தேவை­களில் பசியும் காம உணர்வும் முக்­கி­ய­மா­னவை. இந்த உணர்வுத் தேவையை நாக­ரி­க­மான முறையில் பூர்த்தி செய்­வ­தற்­கான  ஓர் ஏற்­பா­டாக திரு­மண வாழ்வு அமைந்­துள்­ளது. மிரு­கங்கள் போன்று கட்­டற்­ற­வ­கையில் மனிதன் இவ்­வு­ணர்வை ஈடு­செய்ய முற்­பட்டால் பெரும் சமூக சீர்­கு­லைவு ஏற்­படும். அதுதான் தற்­போது மேற்­குலக நாடு­களை வியா­பித்து குடும்ப உற­வுகள் சிதைந்து போயுள்­ளன.

பாலூக்­கத்தை நிறைவு செய்­யும்­போது இரு தேவைகள் இயல்­பாக நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன. பாலு­ணர்வுத் தேவை முழு­மை­பெ­று­வ­தோடு அதன் மற்­றொரு விளை­வாக மகப்­பேறு அல்­லது மறு உற்­பத்தி நடை­பெ­று­கின்­றது. மனித நாக­ரி­கத்தின் சிற்­பி­களும் சமூ­கத்தை வழி­ந­டத்தும் தலை­மை­களும் எதிர்­கா­லத்­திற்குத் தேவை. மக­வூக்­கமும் அதன் பேறான குழந்தைப் பிறப்பும் எதிர்­கால மனித சமூக இருப்­புக்கு இன்­றி­ய­மை­யா­தவை.

மண­வாழ்வும் குடும்ப அமைப்பும் தீமை­க­ளி­லி­ருந்து சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­கான ஒரு காப்­ப­ர­ணாகும். பாலூக்­கத்தை ஒழுங்­கு­ப­டுத்­தப்­ப­டாத வகையில் அல்­லது மனம்­போன போக்கில் ஈடு­செய்ய முற்­பட்டால் அறமும், ஒழுக்­கமும் கேள்­விக்­குள்­ளா­கி­விடும். சமூகம் கீழ்த்­த­ர­மான நிலை­யி­லி­ருந்து தன்னை விடு­வித்து  உயர் இலக்­கு­களை நோக்கிப் பய­ணிக்க வேண்­டு­மாயின் அங்கு உயர்ந்த இலட்­சி­யங்கள் வேண்டும். மிருக உணர்­வுகள் நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அந்த உணர்ச்­சிகள் நெறிப்­ப­டுத்­தப்­ப­டா­மலும் இவ்­வு­ணர்ச்­சி­க­ளுக்கு இயற்­கைக்கு முர­ணாக செயற்­பட முனை­யும்­போதே அநா­க­ரிக, இழி­நி­லைகள் உரு­வாகி மனித நாக­ரி­கத்­தையே புதை­கு­ழிக்குத் தள்­ளு­கி­றது. குடும்ப வாழ்க்கை இன்­ப­க­ர­மாக  அமைய வேண்­டு­மாயின் திரு­மணம் முடி­ப்ப­தற்கு முன்­னரும் திரு­மணம் முடிந்த பின்­னரும் குடும்ப வாழ்க்­கையின் வெற்­றிக்­கான உள­வ­ளத்­து­ணையை பெற்­றுக்­கொள்­வது இன்­றி­ய­மை­யா­தது.

உள­வி­யலும் குடும்ப வாழ்­வி­யலும்

ஆண்­க­ளோடு ஒப்­பி­டு­கையில் பெண்கள் உடல்­ரீ­தியில் பல­வீ­ன­மா­ன­வர்கள். பெண்­களை சமூகத் தீமை­யி­லி­ருந்து பாது­காத்து அவர்­களின் கற்­புக்கும் இருப்­புக்கும் உத்­த­ர­வா­த­ம­ளிக்க வேண்­டு­மாயின் அவர்­க­ளுக்கோர் ஆண் துணை அவ­சியம். இதில் பெண்­களின் பொரு­ளா­தாரம், பாது­காப்பு, மக­வூக்கம் என்­ப­னவும் உறுதி செய்­யப்­ப­டு­கின்­றது. அத்­தோடு திரு­ம­ணத்தால் முது­மை­யா­த­லின்­போது ஆறுதல் கிடைக்­கின்­றது. உடல் ரீதி­யிலும் உள ரீதி­யிலும் மூப்­ப­டைந்­த­வர்­களை பரா­ம­ரிப்­பது மிக அவ­சியம். ஏரிக் எரிக்சன், “மூப்பில் ஏற்­படும் உடல் பல­வீ­னத்தை விட உளப் போராட்டம் தீவி­ர­மா­னது” என்­கிறார்.

மூன்று வகை­யான முதியோர் ஒப்­பீட்­டு­ரீ­தியில் தீவிர உளப்­பா­திப்­புக்கு உள்­ளா­வ­தாக எரிக்சன் குறிப்­பி­டு­கிறார். திரு­மணம் முடிக்­காத நிலையில் முதுமை அடைந்­தவர், பிள்­ளைப்­பேறு அற்ற முதியோர், வய­து­மு­திர்ந்த காலத்தில் பிள்­ளை­களைப் பிரிந்து வாழ்­ப­வர்கள் என்­பதே அந்த மூன்று வகை­யி­ன­ராகும். எல்லா மனி­தர்­க­ளுக்கும் நட்பு தேவை­யா­னது. மிக நெருங்­கிய நண்பர் ஒருவர் தேவை. நீடித்த நட்­புக்கு திரு­மணம் நல்­லதோர் களம். புத்­தி­யுள்ள பெண்ணே தனது கண­வனின் நெருங்­கிய நண்­ப­னாக இருக்க முடியும். கண­வ­னது நெருங்­கிய நண்­ப­னாக அவ­ரது மனை­வியே இருக்க முடியும். திரு­மண பந்­தத்தில் இணை­கின்ற இருவர் பரஸ்­பரம் பக்­கத்தில் இருக்­கக்­கூ­டிய நண்­பர்­க­ளாக வாழ்நாள் முழு­வதும் நீடிக்­கலாம். இத்­த­கைய நட்பு குடும்ப வாழ்வில் மட்­டுமே சாத்­தி­ய­மாகும்.

இவை மட்­டு­மன்றி, திரு­ம­ண­மா­னது உடல் ஆரோக்­கி­யத்தில் பெரும்­பங்கு வகிக்­கின்­றது. மனி­தனின் உடல், உளத் தேவைகள் திரு­ம­ணத்தின் மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தா­னது உடலை ஆரோக்­கி­யத்­துக்கு இட்­டுச்­செல்­கின்­றது. அத்­தோடு, பாலியல் உற­வா­னது இத­யக்­கோ­ளா­று­க­ளி­லி­ருந்து தவிர்ந்து கொள்­வ­தற்கு உத­வு­வ­தாக நவீன விஞ்­ஞானம் குறிப்­பி­டு­கின்­றது. அது­மட்­டு­மன்றி, இன்னும் பல உட­லியல் சார்ந்த நோய்­க­ளி­லி­ருந்து தவிர்த்­துக்­கொள்ள திரு­மண பந்தம் வழி­வ­குக்­கின்­றது. திரு­மண வாழ்வில் ஏற்­படும் சண்­டைகள், சச்­ச­ர­வு­களை தவிர்த்து ஒரு­வ­ருடன் ஒருவர் கலந்து சந்­தோ­ச­மாக வாழ­வேண்­டு­மெனில், கண­வனும் மனை­வியும் தனது கட­மை­க­ளையும் பொறுப்­புக்­க­ளையும் உணர்ந்து செயற்­பட வேண்டும்.

கணவன், மனை­வி­யாக வாழ்வைத் தொடங்­கி­யதன் பின்னர் அன்பும் பாச­முமே அவர்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களை வலுப்­ப­டுத்தும். இரு­வ­ருக்கும் இடை­யி­லான தொடர்­பாடல், அதற்குப் பயன்­ப­டுத்தும் வார்த்­தைகள், அன்­பான அர­வ­ணைப்பு என்­பன அந்த உறவின் சுமு­க­நி­லையைத் தீர்­மா­னிக்கும். மிக முக்­கி­ய­மாக, ஒரு­வரை ஒருவர் புரிந்து கொள்ளல் வெற்­றியும் மகிழ்ச்­சியும் நிறைந்த வாழ்வின் அத்­தி­வா­ர­மாகும்.

ஏனெனில், இது மகிழ்ச்­சியைத் தரும் விடயம் மட்­டு­மன்றி பிரச்­சி­னை­களைத் தவிர்க்­கவும் உள்ள வழி­யாகும். ஒரு­வரை ஒருவர் புரிந்­து­கொள்­ளா­த­போது மகிழ்ச்­சியும் சந்­தோ­சமும் மறைந்­து­விடும். மட்­டு­மன்றி, வாழ்க்கை முரண்­பா­டு­க­ளாலும் மோதல்­க­ளாலும் சிதைந்­து­போகும். திரு­மணம் முடித்து தசாப்­தங்கள் கடந்தும் ஒரு­வரை ஒருவர் முழு­மை­யாகப் புரிந்­து­கொள்­ளாத கண­வனும் மனை­வியும் இருக்­கத்தான் செய்­கின்­றனர். ஒரு­வரை ஒருவர் புரிந்­து­கொள்­ளா­ம­லேயே வாழ்நாள் முழு­வ­தையும் கடத்­து­கின்­ற­வர்­களும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள். இந்த நிலை சமூ­கங்­க­ளி­லி­ருந்து மாற­வேண்டும் வெற்­றி­க­ர­மான திரு­மண வாழ்க்கை புரிந்­து­ணர்­வுடன் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும்.

உள­வ­ளத்­து­ணையும் முரண்­பா­டு­கள் தவிர்த்­தலும்

உண்­மையில் கண­வனும் மனை­வியும் பரஸ்­பரம் புரிந்­து­கொள்ள வேண்­டிய விட­யங்­களை அறிந்­து­கொள்ள வேணடும். அவற்றை பின்­வ­ரு­மாறு அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

பெறு­மா­னங்கள், மன­வெ­ழுச்­சிகள், பால் வேறு­பா­டுகள், எதிர்­பார்ப்­புகள், உரி­மைகள், கட­மைகள், பலங்கள், பல­வீ­னங்கள் என்­ப­வற்றை அறிந்­து­கொண்டால் திரு­மண வாழ்­கையை வெற்­றி­க­ர­மாக்க முடியும்.

ஒவ்­வொ­ரு­வரும் நிகழ்­வுகள், சம்­ப­வங்கள் என்­ப­வற்­றுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­துவம் ஒரு­வ­ருக்கு ஒருவர் வேறு­ப­டு­கின்­றது. எல்­லோரும் ஒரே­வ­கை­யான பெறு­மா­னங்­களை கொண்­டி­ருப்­ப­தில்லை. ஒரு­வ­ருக்கு வாசிப்பும் ஆய்வும் முதன்­மை­யான பெறு­மா­ன­மாக இருக்க மற்­றொ­ரு­வ­ருக்கு சமூக சேவையோ சமை­யலில் புதுப்­புது வகையை செய்து பார்ப்­பதோ உயர் பெறு­மா­னத்­துக்­கு­ரி­ய­தாக இருக்­கலாம். பெறு­மா­னங்­களில் எது­சரி, எது பிழை­யென தீர்ப்புக் கூறு­வ­தை­விட அடுத்­த­வர்­களின் பெறு­மா­னங்­களை அங்­கீ­க­ரிப்­பதே முரண்­பா­டு­களை தவிர்ப்­ப­தற்­கான வழி. ஒரு­வரின் பெறு­மா­னத்தை மற்­றவர் புரிந்­து­கொள்­ளும்­போது தான் மகிழ்ச்­சி­யான குடும்­ப­வாழ்வு சாத்­தி­ய­மாகும்.

மன­வெ­ழுச்­சி­க­ளிலும் மனி­த­னுக்கு மனிதன் வேறு­பட்­டவன். ஒவ்­வொ­ரு­வ­ரிலும் மன­வெ­ழுச்­சிகள் வெவ்­வேறு அளவில் செயற்­ப­டு­கின்­றன. மன­வெ­ழுச்­சிகள் மனித வாழ்வின் ஆதார சுரு­திகள். அவை அவ­சி­ய­மா­ன­தும்­கூட. ஒருவர் தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் போதும் மற்­ற­வ­ரு­ட­னான உறவின் எல்­லையை வகுக்­கும்­போதும் தொடர்­பா­டலின் போதும் மன­வெ­ழுச்­சிகள் பங்­கு­கொள்­கின்­றன. மன­வெ­ழுச்­சிகள் எல்லா மனி­தர்­க­ளி­டமும் ஒரே­ய­ளவில் காணப்­ப­டு­வ­தில்லை. அதன் அளவும் தாக்­கமும் வேறு­ப­டு­கின்­றன.

மன­வெ­ழுச்­சி­களை முகாமை செய்யத் தெரி­யாத போது தம்­ப­தி­யி­ன­ரி­டையே தேவை­யற்ற பிரச்­சி­னைகள் எழ வாய்ப்­புள்­ளது. எனவே, எதிர்­ம­றை­யான மன­வெ­ழுச்­சி­களைத் தோற்­று­விக்கும் சூழ்­நி­லை­களைத் தவிர்க்க வேண்டும். மன­வெ­ழுச்­சி­களை ஆரோக்­கி­ய­மா­கவும் அறி­வு­பூர்­வ­மா­கவும் கையாளத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். ஏனெனில் கட்­டுக்­க­டங்­காத ஒரு கோடி உணர்ச்­சியே நிரந்­தர விவா­க­ரத்­துக்கு இட்­டுச்­செல்­கி­றது.

ஆண், பெண் இரு­வரும் மனி­தர்­க­ளாக இருப்­பினும் இரு­வ­ரது உடல்­கட்­ட­மைப்பும் இயல்­பு­களும் வித்­தி­யா­ச­மா­னது. பெண்கள் அதி­க­மாக உணர்ச்சிக் கொந்­த­ளிப்­புக்கு உட்­ப­டுவர். பெண்­களின் இந்த இயல்­பு­க­ளையும் உடற்­குறை நிறை­க­ளையும் ஆணும் பெண்ணும் புரிந்­து­கொள்ளல் வேண்டும். இது அவ­ரவர் பணியை சரி­யாகச் செய்­வ­தற்கும் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் துணை­யாக இருக்கும்.

குடும்ப வாழ்­வி­லேயே ஆணும் பெண்ணும் இயல்­பாகத் தேடும் ஒற்­று­மையும் சந்­தோ­சமும் ஈடே­று­கின்­றது. மகிழ்ச்­சி­யான மண­வாழ்வைத் தீர்­மா­னிக்கும் பிர­தான காரணி இரு­வ­ரது எதிர்­பார்ப்­பு­களும் பரஸ்­பரம் நிறை­வேற்­றப்­ப­டு­வதே. எதிர்­பார்ப்­புகள் ஒரு­வ­ரது இயல்பு, பெறு­மா­னங்கள், சூழ்­நி­லைகள், மன­வெ­ழுச்­சி­களைப் பொறுத்து வேறு­ப­டலாம்.

பொது­வாக அன்பு, ஆத­ரவு, பாது­காப்பு, வலிமை போன்­ற­வற்றை மனைவி கண­வ­னிடம் எதிர்­பார்க்­கின்றாள். கணவன் மனை­வி­யிடம் அன்பு, மென்மை, ஈடுபாடு போன்றவற்றை எதிர்பார்க்கின்றான். இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிவடையும்போது முரண்பாடுகள் முகம் காட்டத் தொடங்குகின்றன. இதுவே மனக்கசப்புக்கும் மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்வுக்கும் காரணமாகிவிடும்.

தம்பதியினர் தமது கடமைகளைப் புரிந்துகொண்டு செயற்படும்போதே மகிழ்ச்சியான குடும்பவாழ்வை உறுதி செய்யலாம். ஒருவர் தனது கடமைகளைப் புறக்கணிப்பதும் உரிமைகளை அனுபவிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பதும் குடும்பத்தகராறுகளை ஏற்படுத்தும். எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளல் என்பதில் தமது கடமைகளையும் உரிமைகளையும் புரிந்துகொள்ளல் என்பது முக்கியமானது.

ஒருவர் அடுத்தவரின் பலங்கள், பலவீனங்களை விளங்கியிருப்பதும் சமாளிப்புடன் கூடிய, விட்டுக் கொடுப்புடன் கூடிய குடும்ப வாழ்க்கைக்கு அவசியமாகும். எல்லா மனிதர்களிடமும் பலங்கள் உள்ளன. பலவீனங்களும் உள்ளன. பலவீனம் இல்லாத எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. பொதுவாக பலவீனங்களும் ஆளுக்காள் வேறுபடுகின்றன. பலங்களைப் புரிந்துகொள்ளும்போது தம்பதியினர் மென்மேலும் அவற்றை வளர்த்துக்கொள்ள பரஸ்பரம் ஒத்துழைக்கலாம், உதவலாம், ஆலோசனை வழங்கலாம். குறைந்தபட்சம் தடைக்கல்லாக இருக்காமல் அவை வளர்வதற்கு விலகி இடம் கொடுக்கலாம். பலவீனங்களைப் புரிந்துகொள்ளும்போது அவற்றை இயலுமானவரை குறைத்துக் கொள்வதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்யலாம். முடியாதபோது சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுப்புடனும் நடந்து கொள்ளலாம். பொறுமையைக் கையாளலாம். எனவே தம்பதியினர் தம்மிடமுள்ள பலங்கள், பலவீனங்களை பரஸ்பம் புரிந்துகொள்ளல் போன்ற  மேற்படி கூறப்பட்ட வியடங்களை குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் கடைப்பிடிக்கின்றபோது முரண்பாடுகள் கூர்மையடையாது தவிர்க்கப்படுவதோடு குடும்ப  வாழ்க்கையில் வசந்தம் பிறக்கவும் வழி பிறக்கும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.