ஆளுநர் நிய­ம­னங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது

மக்கள் விடு­தலை முன்­னணி எதிர்ப்பு

0 663

ஜனா­தி­ப­தியால் வழங்கப்­பட்ட ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்­கொள்ள முடி­யாது. பொருத்த­மில்­லாத ஆளுநர்களை நிய­மித்து ஜனா­திபதி ஆளுநர் பதவியை கொச்­சைப்­ப­டுத்­தி­யுள்ளார் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார்

ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­ப­ட்டுள்ள புதிய ஆளுநர் நிய­மனம் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், ஐந்து மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டனர். இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­டுள்ள சில ஆளு­நர்கள் அந்த பத­விக்கு எந்­த­வ­கை­யிலும் பொருத்­த­மில்­லா­த­வர்­க­ளாகும். மாகா­ணங்­க­ளுக்­கான ஆளு­நர்கள் நிய­மிக்­கப்­படும் போது அவர்கள் அர­சியல் கட்சி பேத­மற்­ற­வர்­க­ளாக இருக்­க­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். ஆனால் தற்­போது நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் அனை­வரும் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­ப­வர்­க­ளாகும்.

அத்­துடன் இதற்கு முன்னர் நிய­மிக்­கப்­பட்ட சில ஆளு­நர்­க­ளுக்கு எதி­ராக நிதி மோசடி குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­கின்­றன. நிதி மோசடி தொடர்­பான விசா­ர­ணைக்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளு­நரின் பெயர் இருக்­கின்­றது. அதனால் ஜனா­தி­ப­தியால் வழங்­கப்­பட்­டுள்ள  புதிய ஆளுனர் நிய­ம­னங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

மேலும் குறித்த ஆளுநர் நிய­ம­னங்­களை பார்க்கும் போது ஜனா­தி­பதி எதிர்­வரும் தேர்­தல்­களில் மாகா­ணங்­களை இலக்­கு­வைத்து வழங்­கி­யது போல் இருக்­கின்­றது. நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் ஆளு­நர்கள் அனை­வரும் கடந்த காலங்­களில் ஜனா­தி­ப­திக்­காக பாடு­பட்­ட­வர்கள். ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கை­களை நியா­யப்­ப­டுத்த பாரிய முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

எனவே மாகாண ஆளுநர் நிய­ம­ன­மா­னது மிகவும் கெள­ர­வ­மான பத­வி­யாக மதிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­தொன்­றாகும். அந்த நிய­ம­னங்கள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி சார்பற்ற கெளரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்படவேண்டும். ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் என்ற பதவியையும் அகெளரவப்படுத்தி, இவ்வாறானவர்களை நியமித்து அவரும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.