அமைதிக்காக உதவிய தேரர்களுக்கு அமைச்சர் கபீர் நன்றி தெரிவிப்பு

0 676

மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் பிர­தே­சத்தில் அமை­தி­யையும், பாது­காப்­பையும் நிலை­நி­றுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய விகா­ரை­களின் தலைமை அதி­ப­தி­க­ளுக்கு பெருந்­தெ­ருக்கள், வீதி அபி­வி­ருத்தி  மற்றும் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் உட்­பட்ட குழு­வினர் நேரில் சென்று தமது நன்­றி­களைத் தெரி­வித்­தனர்.

அமைச்சர் உள்­ளிட்ட குழு­வினர் மாவ­னெல்ல ஹிங்குல் போதி மனு விகாரை, ஹிங்­குல ரஜ மகா­வி­காரை, அஸ் வாரம ஸ்ரீ மகா­போதி விகாரை, சியம்­ப­லா­பிட்­டிய ஸ்ரீ சுமங்ல பிரி­வெனா, தெஹி­ம­டுவ பழைய விகாரை, கோன்­கி­வெல ஸ்ரீ சாகிய சென­வி­ரத்ன ராமய, மாவெல மல்­வத்து விகாரை ஆகிய விகா­ரை­க­ளுக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு குறிப்­பிட்ட சம்­ப­வங்­க­ளி­னை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட சமா­தான ஏற்­பா­டு­க­ளுக்கு நன்­றி­களைத் தெரி­வித்­தனர்.

சேதத்­துக்­குள்­ளாக்­கப்­பட்ட அனைத்து புத்தர் சிலை­க­ளையும் புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்கும் எனவும் அமைச்சர் கபீர் ஹாஷிம் உறு­தி­ய­ளித்தார்.

‘அமைச்சர் கபீர் ஹாஷிமை அர­சி­யலில் பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளாக்கி அர­சாங்­கத்­தையும், அமைச்­ச­ரையும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குட்­ப­டுத்தி அர­சியல் இலாபம் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சில தரப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சியே இது’ என விகா­ரை­களின் தலைமை அதிபதிகள் குழுவினரிடம் தெரிவித்தனர்.

மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் அநுர சந்தன உட்பட்ட குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.