இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பேசித் தீர்க்கலாம்

முஸ்லிம் சமய திணைக்­கள பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல்

0 308

நேர்காணல்: ஏ.ஆர்.ஏ.பரீல்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு புதிய பணிப்­பா­ள­ராக நிய­மனம் பெற்­றுள்ள செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் மாவ­னெல்லை –அர­நா­யக்க தல்­கஸ்­பிட்­டி­யவைச் சேர்ந்­த­வர்.

இவர் ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் எம்.யு. இஸட் ஆப்தீன், ஆசி­ரியை மர்ஹூம் நபீஸா தம்­ப­தி­யி­னரின் புதல்­வ­ராவார்.

ஆரம்பக் கல்­வியை ஹெம்­மாத்­த­கம அல் அஸ்ஹர் வித்­தி­யா­ல­யத்தில் பெற்ற இவர் க.பொ.த சாதா­ரண கல்­வியை திப்­பிட்­டிய முஸ்லிம் மகா ­வித்­தி­யா­ல­யத்­திலும் க.பொ.த உயர்­தர கல்­வியை மாவ­னெல்லை ஸாஹிரா கல்­லூ­ரி­யிலும் கற்றார். பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் உயி­ரியல் பீட ­பட்­ட­தா­ரி­யு­மாவார்.

ஆரம்­பத்தில் 4 வருட காலம் ஆசி­ரியர் சேவையில் இருந்த இவர் 2003 இல் இலங்கை நிர்­வாக சேவை போட்டிப் பரீட்­சைக்குத் தோற்றி அதில் சித்­தி­ய­டைந்து நிர்­வாக சேவை அதி­கா­ரி­யாக நிய­மனம் பெற்றார்.

பாது­காப்பு அமைச்சின் பொலிஸ் பிரிவின் உதவிச் செய­லாளர், ருவன் வெல்ல உதவி பிர­தேச செய­லாளர், கலி­க­முவ உதவி பிர­தேச செய­லாளர் மற்றும் கொழும்பு கம­நல அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்தில் உத­வி­யா­ணை­யா­ள­ரா­கவும் அபி­வி­ருத்தி பிரிவில் இரண்டு வரு­டங்கள் ஆணை­யா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார்.

குறிப்­பாக மாவ­னெல்லை அர­நா­யக்க பிர­தேச செய­லா­ள­ராக கடந்த 7 வரு­டங்­களும் 4 மாதங்­களும் பணி­யாற்­றி­யுள்ளார். 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் அர­நா­யக்க பிர­தேச செய­லா­ள­ராக நிய­மனம் பெற்­றார். இப்­ப­கு­தியில் வாழ்ந்த மக்­களில் 92 வீத­மானோர் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்­லி­மான இவர் நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பெரும்­பான்மை இன மதத்­த­லை­வர்கள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டனர். என்­றாலும் பைஸல் சவாலை ஏற்று பத­வியில் அமர்ந்தார்.

இவர் பத­வி­யேற்று சில மாதங்­களில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இவ­ரது அதி­கார எல்­லைக்­குட்­பட்ட பிர­தே­ச­மான சாம­சார கந்த எனு­மி­டத்தில் பாரிய மண்­ச­ரிவு ஏற்­பட்­டது. தொட­ராகப் பெய்­த­மழை கார­ண­மா­கவே இந்த மண்­ச­ரிவு ஏற்­பட்­டது. இதனால் அப்­ப­கு­தியில் 586 குடும்­பங்கள் பாது­காப்­பற்ற சூழலில் இருந்­தன.

பிர­தேச செய­லாளர் பைஸல் உட­ன­டி­யாக செயலில் இறங்­கினார். அரச சார்­பற்ற நிறு­வ­னங்களதும் அரசாங்­கத்­தி­ன­தும் உத­வி­களைக் கோரினார். குறிப்­பிட்ட 586 குடும்­பங்­க­ளையும் பாது­காப்­பற்ற இடத்­தி­லி­ருந்தும் இடம்­மாற்­றினார். அக்­கு­டும்­பங்­க­ளுக்கு அர­நா­யக்­கவில் புதி­தாக வீடுகள் நிர்­மா­ணித்து வழங்­கப்­பட்­டன.

பிர­தேச செய­லாளர் பைஸலின் இந்­தப்­பா­ரிய சேவை மூலம் அவர் மிகவும் பிர­ப­ல­மானார். அவர் அர­நா­யக்க பிர­தேச செய­லா­ள­ராக நிய­மனம் பெற்று வந்­த­போது ஆரம்­பத்தில் எதிர்ப்பு வெளி­யிட்ட பெரும்­பான்மை மக்­களும், பெரும்­பான்மை மதத்­த­லை­வர்­களும் பின்னர் அவரை பாராட்­டி­னார்கள். அவ­ருக்கு மரி­யாைத செலுத்­தி­னார்கள்.
இவர் அர­நா­யக்­கா­வி­லி­ருந்தும் இட­மாற்றம் பெற்றுச் செல்ல மூன்று தட­வைகள் முயற்­சித்த போதும் இதே மக்கள், இதே பெரும்­பான்மை மதத்­த­லை­வர்கள் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை.அவ­ரது இட­மாற்­றத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்­தார்கள்.

‘‘அரச சேவையில் உள்­ள­வர்கள் தமது சேவை­யினை இன­ ரீ­தி­யில்­அல்லாது பொது­வாக அனை­வ­ருக்கும் சம­மாக மேற்­கொள்­ள­வேண்டும். அர­நா­யக்க பிர­தேச செய­லாளர் இதற்கு சிறந்­ததோர் உதா­ர­ண­மாகும்’’ என பெளத்த மதத்­த­லைவர் ஒருவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்­த­மையை இவ்­வி­டத்தில் குறிப்­பிட்­டாக வேண்டும். பெளத்த மதத்­த­லைவர் ஒருவர் இதற்­கென அவ­ருக்கு நினை­வுச்­சின்னம் வழங்கி கெள­ர­வித்­த­மையும் விசேட அம்­ச­மாகும்.

இவர் பிர­தேச செய­லா­ள­ராக பதவி வகித்த அர­நா­யக்க நிர்­வாக எல்­லைக்குள் சுமார் 8000 மக்கள் வாழ்­கி­றார்கள். இவர்­களில் 92 வீத­மானோர் பெரும்­பான்மை இனத்­த­வ­ராவர். இங்கு 6 வீதம் முஸ்­லிம்­களும், 2 வீதம் தமிழ் மக்­களும் வாழ்­கி­றார்கள். அனை­வரையும் சம­மாக மதித்து தனது கட­மை­யினை 7 வரு­டங்­க­ளுக்கும் மேலாக முன்­னெ­டுத்­த­வரே தற்­போ­தைய முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் முஹம்மத் பைஸல்.

முஸ்லிம் சமய திணைக்­கள பணிப்­பாளர் பதவி மூலம் அவர் முன்­னெ­டுக்­க­வுள்ள பணிகள் தொடர்பில் அவரைச் சந்­தித்துப் பேசி­னோம்.

Q. புதி­தாக பத­வி­யேற்­றுள்ள உங்­களின் இலக்கு என்ன?
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பணிப்­பாளர் பதவி சவா­லா­னது. அனை­வ­ரையும் அனைத்து சமூ­கத்­தி­ன­ரையும் இணைத்து கட­மை­களைச் செய்­ய­வேண்டும். சமூ­கத்தில் கொள்கை ரீதியில் வேறு­பட்ட பல இயக்­கங்கள் இருக்­கின்­றன. வேறு­பா­டு­களை மறந்து நாம் ஒன்­றி­ணைய வேண்டும். பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் திணைக்­க­ளத்தின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமைய இயங்­க­வேண்டும். நாமனை­வரும் ஒன்று சேர்­வதன் மூலமே வெற்றி பெறலாம். வெற்­றியை நிலை நிறுத்­து­வதே எனது இலக்கு.

Q. உங்கள் இலக்­கினை எய்த முடியும் என்ற நம்­பிக்கை உங்­க­ளுக்கு இருக்­கி­றதா?
நிச்­ச­ய­மாக. சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை, பள்­ளி­வா­சல்கள் உட்­பட ஏனைய சமய நிறு­வ­னங்­களின் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். எனக்கு நிர்­வாக சேவையில் 19 வருட அனு­பவம் இருக்­கி­றது. உளத்­தூய்­மை­யுடன் பணி­யாற்­று­வதன் மூலமும் அலு­வ­லர்­களை ஒன்­றி­ணைத்து பணி­யாற்­று­வதன் மூலமும் இலக்கை எய்­தலாம். இதற்கு அல்­லாஹ்வின் உதவி நிச்­சயம் கிடைக்கும்.

Q. கட­மையை பொறுப்­பேற்­ப­தற்கு முன்பு புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கவைச் சந்­தித்­தீர்கள். அவ­ரு­ட­னான பேச்சு வார்த்தை எவ்­வாறு அமைந்­தி­ருந்­தது.
அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யாடல் சுமூ­க­மாக இருந்­தது. முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு இயன்ற வரையில் தீர்வு பெற்­றுக்­கொள்­ளு­மாறு அமைச்சர் என்­னிடம் கூறினார். பிரச்­சி­னை­களை காலம் தாழ்த்­தாது உட­னுக்­குடன் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­க ­வேண்டும் என்று அறி­வு­றுத்­தினார். அத்­தோடு பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் வின­வினார். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்றுக் கொள்­ளப்­ப­ட­ வேண்டும் என்­பதில் அமைச்சர் ஆர்­வ­மாக இருக்­கிறார்.

Q. கொள்கை வேறு­பா­டு­களைக் கொண்­டுள்ள இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மையை எவ்­வாறு வளர்க்கப் போகி­றீர்கள்?
அனைத்து இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளையும் ஒரே மேசையில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்ளேன். கலந்­து­ரை­யாடல் மூலம் இணக்­கப்­பாடு எட்­டக்­கூ­டிய விட­யங்­களில் நாம் ஒன்­றி­ணைய முடியும் எனக் ­க­ரு­து­கிறேன்.

Q. சமூ­கத்தில் சிவில் சமூக அமைப்­புகள் தொடர்பில் உங்கள் நோக்கு என்ன?
சமூ­கத்தில் எண்­ணற்ற சிவில் சமூக அமைப்­புக்கள் இருக்­கின்­றன. அந்த அமைப்­புக்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­துடன் அவற்றின் செயற்­பா­டுகள் சமூ­கத்தை நேர்­வ­ழிப்­ப­டுத்தும் வகையில் அமைய வேண்டும் என்­பதை எடுத்­து­ரைக்­க­வுள்ளேன்.

Q. சில பள்­ளி­வா­சல்­களில் நிர்­வா­கப்­பி­ரச்­சி­னைகள் உட்­பட பல்­வேறு தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பிரச்­சி­னைகள் உள்­ளன? இவற்றை தீர்த்து வைப்­ப­தற்கு திட்­டங்கள் ஏதும் உள்­ள­னவா?
ஆம், முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் நிலவும், உட­ன­டி­யாகத் தீர்த்து வைக்க வேண்­டிய பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நேரடி விஜயம் மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டுள்ளேன். பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி சுமு­க­மான தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுக்­க­வுள்ளேன். வக்பு சபையின் ஒத்­து­ழைப்பு இதற்­காக பெற்­றுக்­கொள்­ளப்­படும்.

Q. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள நிர்­வாக கட்­ட­மைப்பில் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டுமா?
திணைக்­க­ளத்­தினுள் பல்­வேறு பிரி­வுகள் இயங்­கி­ வ­ரு­கின்­றன. இப்­பி­ரி­வு­களில் குறிப்­பாக ஹஜ் பிரிவு மற்றும் வக்பு பிரிவு என்­ப­ன­வற்றை வினைத்­திறன் மிக்­க­வை­க­ளாக மாற்­றி­ய­மைப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன். அதி­கா­ரி­களின் பூரண ஒத்­து­ழைப்பு இதற்­காகப் பெற்­றுக்­கொள்­ளப்­படும்.

Q. இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் எந்த நிலையில் உள்­ளது?
இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு புதி­தாக அரச ஹஜ் குழு­வொன்­றினை விரைவில் நிய­மிக்­கு­மாறு அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கவைக் கோரி­யி­ருக்­கிறேன். ஹஜ் குழுவே ஹஜ் ஏற்­பா­டு­களை திணைக்­க­ளத்­துடன் இணைந்து முன்­னெ­டுக்க வேண்டும். இவ்­வ­ருட ஹஜ் முக­வர்கள் நிய­மனம் தொடர்பில் இது­வரை தீர்­மானம் எடுக்­க­வில்லை. புதி­தாக ஹஜ் குழு நிய­மிக்­க­பட்­டதன் பின்பே தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும்.
அதே­வேளை வக்பு சபையின் பத­விக்­கா­லமும் காலா­வ­தி­யா­கி­யுள்­ளது. புதிய வக்பு சபை­யொன்­றினை நிய­மிப்­ப­தற்கு அமைச்சர் கவனம் செலுத்­தி­யுள்ளார்.

Q. நீங்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா­ச­பையின் நிர்­வாகக் குழு­வினைச் சந்தித்து கலந்­து­ரை­யா­டி­னீர்கள்? என்ன விட­யங்கள் அங்கு பேசப்­பட்­டன.
அன்­றைய தினம் உலமா சபையின் மாதாந்த நிர்­வாக சபைக்­கூட்­டங்கள் நடை­பெற்­றது. அச்­சந்­தர்ப்­பத்தில் அவர்­க­ளுடன் சிறிது நேரம் கலந்­து­ரை­யா­டினேன். ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அரபு மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்டம் தொடர்­பாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. கலந்­து­ரை­யாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

Q. முஸ்லிம் சமூகத்துக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
முஸ்லிம் சமூ­கத்­துக்­கென்று இருக்கும் ஒரே ஒரு திணைக்­களம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ள­மாகும். முஸ்­லிம்கள் இத்­தி­ணைக்­க­ளத்­தி­னூ­டாக தங்­க­ளது தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும். திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் என்ற வகையில் அதற்கு நான் தயா­ராக இருக்­கின்றேன். திணைக்­க­ளத்தில் தவ­றுகள், பிழைகள் ஏது­மி­ருப்பின் தயங்­காமல் சுட்­டிக்­காட்­டலாம். தவ­று­களை எம்மால் திருத்திக்கொள்ள முடியும்.
திணைக்­க­ளத்தின் துரித செயற்­பா­டு­க­ளுக்கு சமூகம் ஒத்­து­ழைக்க வேண்டும். பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சுமு­க­மாகத் தீர்த்துக் கொள்­வதே சிறந்த வழி­யென நான் கரு­து­கிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.