பள்ளிவாசலை ஆக்கிரமிக்க பொலிசார் முயற்சி

காத்தான்குடியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை

0 196

எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொலி­சா­ரினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டிருந்த காத்­தான்­கு­டி­ தாருல் அதர் பள்­ளி­வாசலை விடு­விக்­கு­மாறு கோரி கடந்த திங்­கட்­கி­ழமை (6) காத்­தான்­கு­டியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடாத்தப்பட்டது.

இந்த ஹர்த்தால் கார­ண­மாக வர்த்­தக ஸ்தாப­னங்கள் பொதுச் சந்­தைகள் என்­பன மூடப்­பட்டதுடன் இயல்பு நிலை முற்­றாக ஸ்தம்­பிதமடைந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து தாருல் அதர் அமைப்பு பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்டதுடன் அவ்வமைப்பினால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப் பள்ளிவாசலும் மூடப்பட்டது. புதிய காத்­தான்­குடி கப்பல் ஆலீம் வீதி­யி­லுள்ள இப் பள்­ளி­வா­சலை பாது­காப்பு அமைச்சு பொறுப்­பேற்­றி­ருந்­தது. இந்த நிலையில் இந்த பள்­ளி­வா­சலை பொலிசார் கைய­கப்­ப­டுத்தி அதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கிழக்க மாகாண அலுவலகத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்னெடுத்திருந்தனர். எனினும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் அமைந்துள்ள இப் பள்ளிவாசலில் பொலிஸ் பிரிவொன்றை அமைப்பது உகந்ததல்ல என்றும் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள இப் பள்ளிவாசலை பிரதேச மக்களின் பாவனைக்காக வழங்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த பள்­ளி­வாசலை விடு­வித்து பொது மக்கள் தொழு­வ­தற்கும் வணக்க வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வதற்கும் இட­ம­ளிக்­கு­மாறு கோரியே இந்த ஹர்த்தால் இடம் பெற்­றது.

இதன் போது குறித்த தாருள் அதர் பள்­ளி­வா­சலுக்கு முன்­பாக அப்­ப­குதி பொது மக்கள், காத்­தான்­குடி நகர சபை உறுப்­பி­னர்கள், காத்­தான்­குடி பள்­ளி­வாசல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன பிரதிநிதிகள், சமூக ஆர்­வ­லர்கள் கலந்து கொண்ட விழிப்­பு­ணர்வு ஆர்ப்­பாட்­ட­மொன்றும் திங்­கட்­கி­ழமை காலை நடை­பெற்­றது.

 

இந்த ஆர்ப்­பாட்­டத்தின் போது அல்­லாஹ்வை சுஜுது செய்த பள்­ளி­வாசலை விடு­விக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­துடன் பொலிசார் மீது பொது மக்கள் நம்­பிக்கை வைத்­துள்­ளதை சீரழிக்க வேண்டாம், இறை­வனின் இல்­லத்தை இல்­லாமல் ஆக்­காதே, பொலிஸ் திணைக்­க­ளமே பள்­ளி­வாசல் புனி­தத்தில் கறையை பூசும் வர­லாற்றை செய்­யாதே என்­பன போன்ற வாசகங்கள் எழு­தப்­பட்ட சுலோ­கங்கள் தொங்க விடப்­பட்­டி­ருந்­தன.

இந்த விழிப்­பு­ணர்வு ஆர்ப்­பாட்­டத்தின் போது கலந்து கொண்டு கருத்து தெரி­வித்த காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன பொதுச் செய­லா­ளரும் காத்­தான்­குடி நகர சபை உறுப்­பி­ன­ரு­மான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி, இப்­பள்­ளி­வாசல் பொது மக்­களின் நிதிப்­பங்­க­ளிப்பில் கட்­டப்­பட்ட ஒரு பள்­ளி­வா­ச­லாகும். இந்­தப்­பள்ளிவாசல் வக்பு சபையில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு பள்­ளி­வா­ச­லாகும். இந்தப் பள்­ளி­வா­சலை பொலிசார் கைய­கப்­ப­டுத்­து­வதை நாங்கள் விரும்­ப­வில்லை.

இதனை விடு­வித்து பொது மக்கள் தொழு­வ­தற்கும் வ­ணக்க வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் அனு­ம­திக்க வேண்டும் என ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு அமைச்சை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.

இதன்­போது அங்கு வருகை தந்த காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி துமிந்த நய­ண­சிறி இந்தப் பள்­ளி­வா­ச­லை பொலிசார் கையேற்கமாட்­டார்கள் என உறுதிமொழி வழங்கியதை­ய­டுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இதேவேளை இப் பள்ளிவாசலை சட்டரீதியாக விடுவிப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.