திலினியின் வலையில் சிக்கித்தவிக்கும் வர்த்தகர்கள்

பெற்றோல் இறக்குமதி செய்யவே மனைவி, பிள்ளைகளில் நகைகளை கொடுத்து உதவியதாக கூறுகிறார் கமல் ஹாசன்

0 293

றிப்தி அலி

திலினி பிரி­ய­மாலி. பிர­பல வர்த்­த­கர்­களை தனது வலையில் வீழ்த்தி அவர்­க­ளி­ட­மி­ருந்து பல மில்­லியன் கணக்­கான ரூபாக்­களை சுருட்­டி­யமை தொடர்பில் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ள­வரே இவர்.

நிதி மோசடி குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள இவரை எதிர்­வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும் திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் எனக் கூறப்­படும் திலினி பிரி­ய­மா­லி­யுடன் தொடர்­பு­பட்ட மோசடி நட­வ­டிக்­கை­க­ளுக்கு உடந்­தை­யாக செயற்­பட்­ட­மைக்­காக அவ­ரது கணவர் என அறி­முகம் செய்­யப்­பட்­டுள்ள இசுரு சாமிக பண்­டார என்­ப­வ­ரையும் சி.ஐ.டி.யினர் கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்ளார்.
திலினி மேற்­படி நிறு­வ­னத்தின் கீழ் பல கம்­ப­னி­களை செயற்­ப­டுத்தி பல்­வேறு வகை­யான வியா­பா­ரங்­களை மேற்­கொண்­டுள்ளார். இக்­கம்­ப­னிகள் அனைத்தும் கொழும்பு – 01 இலுள்ள உலக வர்த்­தக மைய கட்­டிடத் தொகு­தியின் 34ஆவது மாடி­யி­லேயே இயங்­கி­யுள்­ளன.

திலினி பிரி­ய­மா­லியினால் நடத்­தப்­பட்டு வந்த எந்­த­வொரு கம்­ப­னியும் இலா­ப­மீட்­ட­வில்லை என்­பது விசா­ர­ணை­களின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. எனினும், இவரின் வங்கிக் கணக்­கி­லி­ருந்து கடந்த ஜன­வரி முதல் ஜுன் வரை­யான ஆறு மாத காலப் பகு­திக்குள் மூன்று பில்­லியன் ரூபா­விற்கு அதி­க­மான பணம் மீளப் பெறப்பட்டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ­ரிடம் நிதி வைப்புச் செய்­த­வர்­களின் முழு­மை­யான பட்­டியல் இன்று வரை வெளி­யா­க­வில்லை. எனினும், பல முஸ்லிம் வர்த்­த­கர்­களும் இவ­ரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்­துள்­ளனர் என்­பதை இது­வரை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பொலிஸ் முறைப்­பா­டுகள் மூலம் அறிய முடி­கி­றது.

இவ்­வா­றான நிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, திலினி பிரி­ய­மா­லி­யிடம் 80 மில்­லியன் ரூபா பணத்­தினை வைப்புச் செய்­த­தாக குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­திடம் அண்­மையில் முறைப்­பா­டொன்றை பதிவு செய்­துள்ளார். தான் காணி ஒன்­றினை விற்றுக் கிடைத்த பணத்­தி­லேயே குறித்த முத­லீட்டை செய்­த­தா­கவும் ஆவ­ணங்­க­ளுடன் அசாத் சாலி முறை­யிட்­டுள்ளார்.

இதே­வேளை, அசாத் சாலியின் நண்­ப­ரான பிர­பல ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றின் உரி­மை­யா­ள­ரொ­ருவர் 226 மில்­லியன் ரூபா நிதி­யினை திலினி பிரி­ய­மா­லி­யிடம் வைப்புச் செய்­துள்­ள­தா­கவும் தெரிய வரு­கின்­றது. குறித்த வர்த்­தகர், தனது வீட்­டினை விற்­பனை செய்து கிடைக்கப் பெற்ற பணத்­தி­னையே இவ­ரிடம் வைப்புச் செய்­துள்ளார்.
உலக வர்த்­தக மைய கட்­டிடத் தொகு­தியில் அலு­வ­ல­க­மொன்­றினை நடத்தி வந்த வைத்­தி­ய­ரொ­ரு­வரும் திலினி பிரி­ய­மா­லி­யிடம் 750 மில்­லியன் ரூபா நிதி­யினை வைப்புச் செய்­துள்ளார்.

இதற்கு மேல­தி­க­மாக அப்துல் ஹசன் கமல் ஹாசன் எனும் கொழும்பைச்சேர்ந்த வர்த்தகரும் அவ­ரது மனைவி மற்றும் மக­ளுக்கு சொந்­த­மான 1080 கிராம் தங்­கத்­தினை திலினி பிரி­ய­மா­லி­யிடம் கைய­ளித்­துள்ளார். அது மாத்­தி­ர­மல்­லாமல், 100,000 அவுஸ்­தி­ரே­லிய டொலர் மற்றும் 60,000 அமெ­ரிக்க டொல­ரி­னையும் திலினி பிரி­ய­மா­லி­யிடம் வழங்­கி­யுள்ளார். இது தொடர்பில் பிர­பல யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளி­யிட்ட வர்த்­தகர் கமல் ஹாசன் கூறு­கையில், “திலி­னியின் கணவர் என்­ற­றி­யப்­படும் இசுரு பண்­டா­ரவே என்னை முதலில் தொடர்பு கொண்டு தமது வியா­பா­ரத்தில் முத­லி­டு­மாறு கோரினார். இதனைத் தொடர்ந்து நாட்டில் எரி­பொருள் நெருக்­கடி உச்­சத்­தி­லி­ருந்த காலப்­ப­கு­தியில், கப்­ப­லொன்­றி­லி­ருந்து கச்சா எண்­ணெயை விடு­விப்­ப­தற்கு வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு பணம் தேவைப்­ப­டு­வ­தா­கவும் அதற்கு உத­வு­மாறும் திலினி என்­னிடம் கோரினார். இரண்டு நாட்­களில் திறை­சே­ரி­யி­ட­மி­ருந்து பணம் கிடைத்­த­வுடன் அதனைத் திருப்பித் தரு­வ­தாக கூறினார். நான் நாட்டின் நன்மை கரு­தியே எனது மனைவி மற்றும் மகள்­க­ளுக்குச் சொந்­த­மான நகைகள் மற்றும் டொலர்­களை கைய­ளித்தேன். ஆனால் உறு­தி­ய­ளித்­த­வாறு இரண்டு நாட்­களில் பணம் கிடைக்­க­வில்லை. பின்னர் எனது வங்கிக் கணக்கில் காசோலை வைப்­பி­லி­டப்­பட்­ட­தாக திலினி கூறினார். ஆனால் அதுவும் கிடைக்­க­வில்லை. எனது பணத்­திற்கு என்ன நடந்­தது என அறி­வ­தற்­காக உலக வர்த்­தக மையத்தில் அமைந்­துள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­திற்குச் சென்ற போது பொலிஸ் அதி­காரி ஒருவர் மூல­மாக திலினி என்னை மிரட்­டினார். இங்­கி­ருந்து போகா­விட்டால் உண்னைக் கைது செய்வோம் என அந்த பொலிஸ் அதி­காரி கூறினார். அதன் பிற­குதான் இவர்கள் என்னை ஏமாற்­று­கி­றார்கள் என்­பது தெரிய வந்­தது. இத­னை­ய­டுத்தே நான் சி.ஐ.டி.யில் முறைப்­பாடு செய்தேன்” என வர்த்தகர் கமல் ஹாசன் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு, திலினி பிரி­ய­மா­லி­யிடம் நிதி வைப்புச் செய்து ஏமாற்­றப்­பட்­ட­வர்­களின் பட்­டியல் நீண்­டு­கொண்டே செல்­கின்­றது. எனினும், இவர்­களில் பெரும்­பா­லானோர் இந்த மோசடி தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்க முன்­வ­ரு­வ­தில்லை. காரணம், தமக்கு பெருந்­தொகைப் பணம் எவ்­வாறு கிடைத்­தது என்­பது தொடர்­பான தக­வல்­களை பொலிசார் கண்­ட­றிந்­து­வி­டுவர் என்ற அச்­ச­மே­யாகும்.

குறித்த முத­லீட்­டா­ளர்­களை திலினி பிரி­ய­மாலி நேர­டி­யாக அன்றி தர­கர்கள் மற்றும் முக­வர்­களின் ஊடா­கவே அணு­கி­யுள்ளார். மேலும் இந்த வைப்­புக்­க­ளுக்கு அதிக இலாபம் வழங்­கப்­படும் எனவும் திலினி பிரி­ய­மா­லி­யினால் வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மல்­லாமல், இலங்­கைக்கு எரி­பொ­ருளைக் கொண்டு வரு­வ­தற்­கா­கவும் இந்த நிதியை பயன்­ப­டுத்­து­வ­தாக கூறி அவர் பலரை ஏமாற்­றி­யுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மனைவி சிரந்தி ராஜ­பக்ஷ உட்­பட பல முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் தனக்கு நெருக்­க­மான தொடர்பு இருப்­ப­தா­கவும் அவர்­களும் இந்த வியா­பா­ரத்தில் நேர­டி­யாகத் தொடர்­பு­ப­டு­கின்­றனர் என்றும் முத­லீட்­டா­ளர்­க­ளிடம் திலினி பிரி­ய­மாலி கூறி­யுள்ளார். எனினும் சிரந்தி ராஜ­பக்ஷ உள்­ளிட்ட பல பிர­மு­கர்கள் திலினியுடன் தமக்கு எந்த தொடர்­பு­மில்லை என அறி­வித்­துள்­ளனர்.

திலினி பிரி­ய­மா­லிக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­துள்ள பிர­பல வர்த்­தகர் அனீஸ் சத்தார் என்­பவர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்ரி குண­ரத்­தன நீதி­மன்றில் ஆஜ­ராகி வரு­கின்றார். மறுபுறம் திலினி பிரி­ய­மாலி சார்­பாக நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவின் புதல்­வரான ரகித ராஜ­பக்ஷ ஆஜ­ரா­கி­யி­ருந்தார். இதுவும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­தி­ருந்­தது. பாரிய நிதி மோசடி தொடர்­பான வழக்கு விசா­ர­ணையில் பிர­தி­வாதி தரப்பில் நீதி அமைச்­சரின் கீழ் செயற்­படும் கனிஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­வது நல்­ல­தல்ல என்று எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணிகள் குற்­றஞ்­சாட்­டினர். எனினும், இந்த குற்­றச்­சாட்­டினை கடந்த வெள்­ளிக்­கி­ழமை (21) பாரா­ளு­மன்­றத்தில் நீதி அமைச்சர் நிரா­க­ரித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இத­னி­டையே, இது­வரை திலி­னியால் மோசடி செய்­யப்­பட்­ட­தாக கூறப்­படும் பணத்­துக்கு என்ன ஆனது என்­பது மர்­ம­மா­கவே இருந்து வரு­கின்­றது. மோசடி செய்­யப்­பட்ட பணம் அவ­ரது வங்­கிக்­க­ணக்­கிலோ நிறு­வன கணக்­கிலோ வைப்புச் செய்­யப்­ப­ட­வில்லை என தெரி­ய­வந்­துள்ள நிலையில், அவை பண­மாக நிறு­வ­னத்தில் வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை எனவும் தெரி­ய­வந்­துள்­ளது. மோசடி செய்­யப்­பட்ட முழு பணத் தொகை­யையும் சந்­தேக நபர்கள் செலவு செய்­தி­ருக்க வாய்ப்­பில்லை என கூறும் விசா­ர­ணை­யா­ளர்கள், இவ்­வா­றான நிலையில் அந்த பணத் தொகை எங்கோ ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் சி.ஐ.டி.யினர் தொடர்ச்சியாக பணத்தை கண்டுபிடிக்கவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறான சட்ட அங்கீகாரமற்ற நிறுவனங்களிடம் நிதி வைப்புச் செய்ய வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு வழிப்புணர்வூட்டி வருகின்றது. இந்த நிலையிலும் வர்த்தகர்கள் சட்டவிரோத நிதி நிறுவனங்களிடம் தொடர்ச்சியாக வைப்புச் செய்து ஏமாறுகின்றமை வேடிக்கையானதாகும்.
சக்விதி ரணசிங்க, பிரிவேல்த் குளோபலின் சிஹாப் ஷெரீப் முதல் திலினி பிரியமாலி வரை இலங்கை மக்களின் பல பில்லியன் ரூபாய்களை மோசடி செய்தவர்களின் வரலாறு நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இறுக்கமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.