யுத்தகாலம் முதல் கிழக்கு மாகாண மக்களுக்கு எதிராக பல சமூக அநீதிகள் இடம்பெற்றுள்ளன

நிபுணத்துவ குழு சுட்டிக்காட்டு; ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் அறிக்கை அனுப்பப்படும் என்கிறார் ஆளுநர்

0 280

(றிப்தி அலி)
யுத்த காலம் முதல் இன்று வரை கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மக்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு அநீ­திகள் இடம்­பெற்­றுள்­ள­தா­க கிழக்கு மாகாண சமூக அநீ­திகள் தொடர்பில் ஆராய்ந்த நிபு­ணத்­துவ குழுவின் அறிக்கை மூலம் தெரிய வந்­துள்­ள­தாக கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யஹம்பத் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­க­வுள்­ள­துடன் ஜெனீ­வா­வி­லுள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வைக்கும் அனுப்­பி­வைக்­க­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

யுத்த காலம் முதல் இன்று வரை கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மக்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு அநீ­திகள் இடம்­பெற்­றுள்­ளமை இந்த அறிக்­கையின் ஊடாக தெரிய வந்­துள்­ளது எனவும் ஆளுநர் கூறினார்.

இதனால், குறித்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களை முடிந்­த­ளவு அவ­ச­ர­மாக அமுல்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுப்பேன் எனவும் அவர் உறு­தி­ய­ளித்தார்.

இந்த அறிக்­கை­யினை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்கும் நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை (15) அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.