ஞானசாரரின் செயலணி அறிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு

0 317

ஆங்­கி­லத்தில்: புத்­திக சம­ர­வீர
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ருவின் கீழ் அவரால் நிறு­வப்­பட்ட பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­லணி சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில் உள்­ள­டக்­கி­யுள்ள சிபா­ரி­சு­களை கவ­னத்திற் கொள்­வ­தில்லை என அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

நாட்டின் தற்­போ­தைய நெருக்­க­டி­யான சூழ்நிலையில் அவ­ச­ர­மாக தீர்க்­கப்­பட வேண்­டிய, கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய பல­வி­ட­யங்கள் உள்­ளன. இந்­நி­லை­மையை கவ­னத்­திற்­கொண்டு பல கட்­சிகள் “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் இறுதி அறிக்­கையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

நாடு இன்று இக்­கட்­டான நிலை­மையில் பல முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்­டி­யுள்­ளது. “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சிபா­ரி­சு­க­ளை­விட இந்­தப்­பி­ரச்­சி­னைகள் முக்­கி­ய­மா­னவை. எனவே நாட்டின் ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்கே முத­லிடம் வழங்க வேண்டும். அதனால் ஜனா­தி­பதி செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது என பல தரப்­பினர் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

நாட்டின் நெருக்­க­டிகள் உரு­வா­கி­யுள்ள சூழ்நிலையில் சர்­வ­கட்சி அர­சாங்கம் ஒன்­றினை நிறு­வு­வது மிகவும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. சர்­வ­தேச நாடுகள் மற்றும் நிறு­வ­னங்கள் சர்­வ­தேச நாணய நிதியம் (IMF) என்­ப­வற்றின் உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு சர்­வ­கட்சி அர­சாங்கம் அமை­வது இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது. இவ்­வா­றான சூழ்நிலையில் அநே­க­மான அர­சியல் கட்­சிகள் அர­சாங்கம் மற்றும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்போர் சர்­வ­கட்சி அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­வ­தற்கே விரும்­பு­கின்­றனர்.
இந்­நி­லையில் குறித்த அர­சியல் கட்­சிகள் முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனா­தி­பதி செய­லணி உட்­பட ஏனைய குழுக்­களில் ஆர்­வ­மற்­ற­வர்­க­ளாக இருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­ல­ணியின் சிபா­ரி­சு­களை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதா? என நீதி, சிறைச்­சாலை விவ­கா­ரங்கள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் தொடர்­பான அமைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­விடம் வின­வி­ய­போது “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் அறிக்கை இது­வரை தனது அமைச்­சுக்கு கிடைக்­க­வில்லை எனத் தெரி­வித்தார்.

அத்­தோடு ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு இவ்­வி­டயம் தொடர்பில் வின­வி­ய­போது குறிப்­பிட்ட அறிக்கை தொடர்பில் ஜனா­தி­ப­தியோ, ஜனா­தி­பதி செய­ல­கமோ தமக்கு இது­வரை (கடந்த 15 ஆம் திகதி) அறி­விக்­க­வில்லை எனத் தெரி­வித்­தது. அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்ள சிபா­ரி­சுகள் தொடர்பில் தாம் அறி­ய­வில்லை என்றும் அதன் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இதே வேளை ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்­டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட பல அர­சியல் கட்­சிகள் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனா­தி­பதி செய­ல­ணியின் இறுதி அறிக்கை தொடர்பில் எதிர்­ம­றை­யான கருத்­து­க­ளையே வெளி­யிட்­டுள்­ளன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இந்த அறிக்கை கிழித்­தெ­றி­யப்­ப­ட­வேண்­டு­மென தெரி­வித்­துள்­ளது.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உதவித் தலைவர் பேரா­சி­ரியர் ரோஹன லக்ஷ்மன் பிய­தா­சவை தொடர்­பு­கொண்டு இது தொடர்பில் நாம் வின­வி­ய­போது,
“ஒரே நாடு ஒரே சட்டம்” இந்­நாட்டின் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டிய தேவை உள்­ளது. இதற்­காக முன்னாள் ஜனா­தி­பதி ஆரம்ப நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்தார். செய­ல­ணியின் தலை­வ­ராக ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்டார். இந்­நி­ய­மனம் கண்­டிக்­கத்­தக்­க­தாகும். இவ்­வா­றான ஒருவர் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டாது என்றார்.

எமது நாட்டில் வெவ்­வே­றான நீதி முறைமை இருக்­கக்­கூ­டாது என்­பதை நாம­னை­வரும் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஒவ்வோர் இனத்­துக்கும் தனிப்­பட்ட நீதி­மு­றை­மைகள் இருக்­கக்­கூ­டாது. நாட்டில் பொது­வான ஒரே சட்­டமே அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அத­னால்“­ஒரே நாடு ஒரே சட்டம்” எண்­ணிக்­க­ரு­வினை நாம் எதிர்க்­க­வில்லை. என்­றாலும் ஞான­சா­ர­தே­ரரின் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும். இச்­செ­ய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட ஞான­சார தேரர் சிறை­வாசம் சென்­றவர். இவர் மீது அநேகர் அதி­ருப்தி கொண்­டுள்­ளனர். இவரை அநேகர் விரும்­பு­வ­தில்லை. அத்­தோடு இவர் தீவி­ர­வாத கருத்­துக்­களைக் கொண்­டவர். இவ­ரது தலை­மை­யி­லான செய­லணி தயா­ரித்த அறிக்­கையை அமுல்­ப­டுத்­து­வதை அங்­கீ­க­ரிப்­பதை பல கட்­சிகள் விரும்­ப­வில்லை.

இதனால் குறிப்­பிட்ட ஜனா­தி­பதி செய­ல­ணியின் அறிக்கை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. இந்த அறிக்கை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வேண்டும். இதற்­கென ஒரு குழு­வொன்­றினை நிய­மிக்­கலாம் அல்­லது சட்­ட­வாக்­கத்­து­றையில் நிபு­ணத்­துவம் கொண்டோர் “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்­பான அறிக்­கையை ஆராய்ந்து தீர்­மானம் மேற்­கொள்­ளலாம் என்று பேரா­சி­ரியர் ரோஹன லக்ஷ்மன் பிய­தாஸ தெரி­வித்தார்.

“ஒரே நாடு ஒரே சட்­டம்”­தொ­டர்­பாக முன்னாள் முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஜனா­பதி செய­ல­ணி­யொன்­றினை நிய­மித்­தமை தவ­றான தீர்­மா­ன­மாகும் என தமிழ் மக்கள் தேசிய கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

இந்­நாட்டில் ஐந்து சட்ட முறை­மைகள் உள்­ளன. (Legal System) அவை. ஆங்­கி­லேயர் சட்டம், ரோம டச்சுச் சட்டம்,தேச வழமை சட்டம்,முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் கண்­டியர் சட்டம் என்­ப­ன­வாகும். இச்­சட்­டங்­களை சிங்­கள பௌத்த பெரும்­பான்­மை­யி­னரின் கொள்­கை­க­ளுக்­காக இல்­லா­மற்­செய்­வது ஏற்­பு­டை­ய­தா­காது.

நாட்டில் ஐந்து சட்­ட­மு­றை­மைகள் உள்­ளன. இப்­ப­டி­யி­ருக்­கையில் சிங்­கள பௌத்த பெரும்­பான்­மைகள் இந்தச் சட்­ட­மு­றை­மை­களை இல்­லாமற் செய்­வ­தற்கு விரும்­பு­கி­றார்கள் என ஒரு­வரால் எப்­ப­டிக்­கூ­ற­மு­டியும்? இது சிங்­கள பௌத்த நாடல்ல, இந்­நாட்டில் மொழி ரீதியில் இரு தேசிய மக்கள் வாழ்­கி­றார்கள். தமிழ் மக்கள் சுமார் 3000 ஆண்­டு­க­ளுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் வாழ்­கி­றார்கள். எனவே “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று கருத்­தாடல் செய்­வது தவறு என சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் தமிழ் மக்கள் தேசிய கூட்­டணி, “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் அறிக்­கையை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது. நிரா­க­ரிக்க வேண்டும் என அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­குமா? என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னிடம் வின­வி­ய­போது ‘வேறு முக்­கி­ய­மான தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பிரச்­சி­னைகள் எங்­க­ளுக்­குள்­ளன. தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை உட்­பட பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இந்­தப்­பி­ரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­வதில் நாங்கள் ஆர்­வ­மாக உள்ளோம். இந்த விடயம் எங்­க­ளுக்குத் தேவை­யற்­றது. வடக்கு கிழக்கும் ஒரே நாட்டின் பகு­தி­யொன்­றல்ல.

இதே­வேளை உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள தேசிய சர்­வ­கட்சி அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­வ­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சில நிபந்­த­னை­களை ஜனா­தி­ப­தி­யிடம் முன் வைத்­தி­ருக்­கி­றது. உட­ன­டி­யாக அவசரகால நிலைமையை வாபஸ் பெற்றுக் கொள்ளல், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நிறுத்துதல், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியமித்த ஜனாதிபதி செயலணியின் அறிக்கையை நிராகரித்தல், செயலணியை வாபஸ் பெற்றுக் கொள்ளல் உட்பட பல நிபந்தனைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு நிபந்தனைகள் அடங்கிய கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளது.

‘முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வினால் ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணிக்கு தீவி­ர­வாத கருத்­துக்­க­ளைக்­கொண்ட மத­கு­ருவே தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் நாட்டின் சட்­டத்தை மதி­யா­தவர். அவரால் சிறு­பான்­மை­யினம் இலக்கு வைக்­கப்­பட்­டது. முஸ்லிம் தனியார் சட்டம் உட்­பட முஸ்­லிம்­களின் கலா­சா­ரத்தை இவர் சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யவர் முஸ்­லிம்­களின் மத்­தியில் செல்­வாக்­கி­ழந்­தவர் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.