போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட வேண்டும்

0 312

நாட்டில் மாற்றம் ஒன்றைக் கோரி நூறு நாட்­க­ளுக்கும் மேலாக போராட்­டத்தில் ஈடு­பட்ட சுமார் 150 க்கும் மேற்­பட்டோர் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் சிலர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள போதிலும் பலர் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்­கப்பால் சுமார் பத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கடத்திச் செல்­லப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் சிலர் பின்னர் கைது செய்­யப்­பட்­டு­முள்­ளனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ள பலர் மீது அரச கட்­டி­டங்­க­ளுக்குள் அத்­து­மீறிப் பிர­வே­சித்­தமை, ஜனா­தி­ப­தியின் கதி­ரையில் அமர்ந்தமை, ஜனா­தி­பதி மாளிகை சமை­ய­லறைப் பொருட்­களைப் பயன்­ப­டுத்­தி­யமை, ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்த ஒரு தொகைப் பணத்தை எடுத்து பொலி­சா­ரிடம் கைய­ளித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­டமை போன்ற பல குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. கைது­க­ளுக்கு பொலிசார் முன்­வைக்கும் கார­ணங்கள் வேடிக்­கா­ன­வை­யாகும்.

சட்­டத்­திற்குப் புறம்­பான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­வர்­களை, வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­வர்­களைக் கைது செய்­வது நியா­ய­மா­ன­தாகும். எனினும் நாட்டைக் குட்­டிச்­சு­வ­ராக்­கிய அர­சி­யல்­வா­தி­களை ஆட்­சி­யி­லி­ருந்தும் விரட்­டி­ய­டிப்­ப­தற்கு ஜன­நா­யக ரீதி­யாக இரவு பக­லாகப் போரா­டிய போராட்­டக்­கா­ரர்­களை கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தி அவர்கள் மீது பொய்க்­குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வழக்குத் தாக்கல் செய்­வது கண்­ட­னத்­துக்­கு­ரி­ய­தாகும்.

மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமை­தி­யாக போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் மீது தாக்­குதல் நடத்­திய, தாக்­கு­தல்­தா­ரி­களின் பின்­ன­ணியில் இருந்த பொது ஜன பெர­மு­ன­வினர் மீது இது­வரை எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

அதே­போன்­றுதான் 2018 இல் 52 நாட்கள் ஆட்­சி­மாற்­றத்தின் போது ராஜ­பக்ச ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்­தினுள் அரங்­கேற்­றிய முறை­கே­டான நட­வ­டிக்­கை­க­ளுக்கு இது­வரை எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. சபா­நா­ய­கரின் கதி­ரையை இழுத்து வீசி­யமை, அதன் மீது நீரை ஊற்­றி­யமை, சபா­நா­ய­கரின் ஒலி­வாங்­கியை உடைத்து எறிந்­தமை போன்ற நட­வ­டிக்­கை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட எம்.பி.க்கள் யார் யார் என்­பது முழு உல­குமே அறிந்­தவை. இச் சம்­பவம் தொடர்பில் அப்­போ­தைய சபா­நா­ய­கரால் நிய­மிக்­கப்­பட்ட குழு ஐவரை தவறு செய்­த­வர்­க­ளாக கண்­ட­றிந்­தி­ருந்­தது. எனினும் இது­வரை அவர்­க­ளுக்கு எதி­ராக எந்­த­வித ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊடக சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்­வி­யெ­ழுப்­பிய போது, பாரா­ளு­மன்­றத்­தினுள் பொதுச் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்­தமை தொடர்­பான சட்டம் செல்­லு­ப­டி­யா­காது என அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் பந்­துல குண­வர்­தன பதி­ல­ளித்­தி­ருந்தார். இக் கருத்தும் இன்று விமர்­ச­னத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. இது தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவும் நேற்று பாரா­ளு­மன்றில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். இது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வேறு சட்டம், பொது மக்­க­ளுக்கு வேறு சட்­டமா என்ற கேள்­வியை மக்கள் மத்­தியில் தோற்­று­வித்­துள்­ளது. இதற்கு பதி­ல­ளிக்க வேண்­டி­யது சபா­நா­ய­க­ரது கட­மை­யாகும்.

மறு­புறம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, போராட்­டக்­கா­ரர்­களை வேட்­டை­யாடும் செயற்­பாட்டை உட­ன­டி­யாக முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும். போராட்டம் இடம்­பெற்ற சம­யங்­களில் தான் போராட்­டக்­கா­ரர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருப்­ப­தாகக் கூறிய அவர், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதிப் பத­விக்கு வந்­த­வுடன் போராட்­டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்க முற்­ப­டு­வது ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும்.
எனவே ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, தன்னை ஜனா­தி­பதிக் கதி­ரையில் அமர்த்­திய பொது ஜன பெர­மு­ன­வி­ன­ரையும் ராஜபக்சாக்களையும் திருப்திப்படுத்த முனையாது, நாட்டு மக்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதே காலத்தின் தேவையாகும்.

ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால், தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும் என நாட்டு மக்கள் நம்பியிருந்தார்கள். இன்றும் மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கை இருக்கிறது. அவர் அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, இருக்கின்ற நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யக் கூடாது. அந்த வகையில் கைது செய்யப்பட்டுள்ள சகல அமைதி வழிப் போராட்டக்கார்களையும் விடுவிக்குமாறும் அவர்கள் மீதான அடக்குமுறைகளை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும் வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம். இன்றேல் இது மேலும் விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.