அம்பாறை முள்ளிக்குளம் மலை பகுதியில் வெளியாட்கள் நிர்மாண பணிகளை மேற்கொள்ள இடமளிக்கப்படாது

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஹக்கீம் எம்.பி.யிடம் உறுதியளிப்பு

0 337

அம்­பாறை மாவட்­டத்தின் பாலமுனை, முள்­ளிக்­குளம் மலைப் பிர­தே­சத்தில் அண்­மையில் நடந்­தது போன்று, அங்கு வசிக்கும் பொது­மக்­க­ளுடன் கலந்­தா­லோ­சிக்­காமல் தொல்­பொ­ருட்­களும், புரா­தனச் சின்­னங்­களும் இருப்­ப­தாக காரணம் காட்டி வெளியார் நிர்­மாண வேலை­களை மேற்­கொள்ள இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது என்றும் , உரிய கார­ண­மின்றி அங்கு வழ­மை­யான பயிர்ச் செய்­கை நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு விவ­சா­யி­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட மாட்­டாது என்றும் தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் பேரா­சி­ரியர் அனுர மண­துங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீ­மிடம் தெரி­வித்­துள்ளார்.

நேற்று முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் தொல்­பொருள் திணைக்­க­ளத்தில் , அதன் பணிப்­பாளர் நாய­கத்­துடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தையின் போதே இவ்­வாறு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் அந்தப் பிர­தே­சத்­திற்கு திடீ­ரென சிலர் வந்து நிர்­மாண வேலையில் ஈடு­பட்­டதைத் தொடர்ந்து பெரும் பதற்ற நிலை தோன்­றி­யி­ருந்­ததை சுட்­டிக்­காட்டி, அவ்­வா­றான பிர­தே­சங்­களில் மக்­களின் இயல்பு வாழ்க்­கை­யையும்,கலா­சா­ரத்­தையும் பாதிக்கும் விதத்தில் அத்­து­மீறல் நடப்­ப­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் பணிப்­பாளர் நாய­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அதற்கு பதி­ல­ளித்த தொல்­பொருள் திணைக்­களப் பணிப்­பாளர் நாயகம் ,பிர­தேச செய­லா­ள­ருடன் தொடர்பு கொண்ட நிலையில், வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்டிருந்த போதி­லும்­கூட , அங்கு வாழும் மக்­க­ளுடன் உரிய முறையில் கலந்­தா­லோ­சனை செய்­யப்­ப­டாமல் அத்­த­கைய முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட மாட்­டாது என்றும் மாவட்ட அரச அதி­ப­ருக்கும் அது­பற்றி அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

குறிப்­பாக கிழக்கு மாகா­ணத்தில் இவ்­வா­றான தொல்­பொருள் அகழ்­வா­ராய்ச்சி கண்­டு­பி­டிப்­புகள் என்ற பின்னணியில் சிறுபான்மை சமூகத்தினர் செறிந்து வாழும் பிரதேசங்களில் அத்துமீறல் இடம் பெறுவதையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் விசனம் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.