எரிபொருள் வரிசையில் அநி­யா­ய­மாக பறி போன இளை­ஞனின் உயிர்!

0 593

எஸ்.என்.எம்.சுஹைல்

“தில்­ஷா­னுக்கு பல இடங்­களில் பெண் பார்த்தோம். நீண்­ட­ கா­ல­மாக திரு­மணம் சரி வர­வில்லை. அண்­மையில் கொழும்பை அண்­டிய புற நக­ரொன்றில் பெண் பார்­த்தி­ருந்தோம். அது அவ­ருக்குப் பிடித்துப் போயி­ருந்­தது. ஞாயிற்­றுக்­கி­ழமை அவரது திரு­ம­ணத்­திற்­காக மணப்பெண்ணைப் பார்க்க செல்­ல­வி­ருந்தோம். அதற்குள் அவரின் உயிர் அநி­யா­ய­மாக பறிக்­கப்­பட்­டு­விட்­டது” என்று ததும்­பிய குர­லுடன் பேசினார் துவான் ஹாஜி சல்டீன் தாஜுதீன்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சிறி­முது உயன தொடர்­மாடி குடி­யி­ருப்பின் D கட்­ட­டத்­தொ­கு­தியின் 4 ஆம் மாடியில் வசிப்­பவர் சல்டீன் தாஜுதீன். இரு பெண் பிள்­ளை­க­ளுடன் ஒரே­யொரு ஆண் பிள்­ளை­யுட்­பட மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான இவர் அண்­மைக்­கா­ல­மாக மார­டைப்பு நோய்க்கு ஆளாகியிருந்தார். இந்­நி­லையில் ஒரு வார­மாக வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை தங்கி சிகிச்சை பெற்­ற­போது ஏகப் புதல்வர் சிராஜ் என அழைக்­கப்­படும் துவான் தில்ஷான் தாஜுதீன் தன் அலு­வ­ல­கத்­திலும் விடு­முறை பெற்று தந்­தையை கவ­னித்­தி­ருக்­கிறார்.

“மிகவும் நல்ல முறையில் தந்­தையை அரு­கி­லி­ருந்து கவ­னித்­துக்­கொள்ளும் பிள்ளையை பெற்­றி­ருக்­கிறீர். இது பெரும் பாக்­கியம்” என்று வைத்­தி­யர்கள் தன்­னிடம் குறிப்­பிட்­ட­தா­கவும் இன்று அவனை இழந்­து­விட்டு தவிக்­கிறேன் என்றும் கூறி கண் கலங்­கு­கிறார் தந்தை சல்டீன் தாஜுதீன்.

29 வய­தான இளைஞன் துவான் தில்ஷான் தாஜுதீன் 1992 ஆம் ஆண்டு பிறந்தார். கொழும்பு சாஹிரா கல்­லூரியில் கல்வி பயின்ற அவர், இரண்­டரை வரு­டங்கள் மலே­ஷி­யா­விலும் சில காலம் மதீ­னா­விலும் தொழில் செய்தார். பின்னர் நாடு திரும்­பிய அவர், சீமெக் நிறு­வ­னத்தில் பணி­யாற்­றினார்.

அன்று மார்ச் 20 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை. மதிய போசனத்தை தனது மூத்த சகோ­த­ரியின் வீட்டில் எடுத்­துக்­கொண்­ட துவான் தில்ஷான் தாஜுதீன், மாலை 5 மணிக்குப் பிறகும் வீட்­டுக்கு வந்­தி­ருக்­கிறார்.விடு­முறை நாள் என்­ற­ப­டியால் மாலையில் வீட்டில் பொழுதை கழித்த அவர், இரவு 7 மணிக்கு பிறகு கடைக்கு சென்று வரு­வ­தாக சென்­றுள்ளார்.

8.30 அளவில் மூத்த சகோ­தரி ரினோஷா தாஜு­தீனின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு தில்­ஷானின் கையடக்க தொலைபேசியில் இலி­ருந்து அழைப்பு வரு­கி­றது. “தில்ஷான் விபத்தில் சிக்­கி­யி­ருக்­கிறார்” என்று மறுமுனையில் சொல்­லப்­பட்­டது. அவர் தனது தங்கை பெரோஸா தாஜு­தீ­னுக்கு அழைப்பை எடுத்து தம்­பியை பற்றி விசா­ரிக்க, தில்ஷான் கடைக்கு சென்­ற­தாவும் தனது கணவர் வீட்­டுக்கு வரும்­போது கண்­ட­தா­கவும் கூறி விட­யத்தை நம்ப அவர்­க­ளது மனம் இடம்­கொ­டுக்­க­வில்லை. மீண்டும் அழைப்­பெ­டுத்­தவர் தனது தொலை­பே­சி­யி­லி­ருந்து தொடர்­பு­கொண்டு விட­யத்தை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

பெரோஸா தாஜுதீன் தனது கணவ­ருடன் உற­வினர் ஒரு­வரின் காரில் நிட்­டம்­புவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹொர­கொல்ல பகு­திக்கு சென்­றார். பதற்­றத்­துடன் சென்ற அவர்கள் எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்­க­ருகே தனது சகோ­தரன் சென்ற மோட்டார் சைக்கிள் விழுந்து கிடப்­பதை கண்­ணுற்று அதிர்ந்து போயினர்.
அப்போதுதான் அவர் பலியான செய்தி கிடைத்தது.

நிட்­டம்­புவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹொர­கொல்ல பகுதி எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­துக்கு அருகே வைத்து இளைஞர் ஒருவர் கூரிய ஆயு­தத்தால் குத்திப் படுகொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஸ்தலத்தில் இருந்த நிட்­டம்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு ஹொர­கொல்ல எரி­பொருள் நிரப்பு நிலை­யத்தில் எரி­பொ­ருளை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக துவான் தில்ஷான் தாஜுதீன் எனும் இளைஞன் தனது மோட்டார் சைக்­கிளில் வரி­சையில் காத்­துக்­கொண்­டி­ருந்­துள்ளார். இதன்­போது அதே வரி­சையில் எரி­பொருள் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வந்த முச்­சக்­கர வண்டி சார­தி­யொ­ருவர் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு எரி­பொருள் நிரப்பச் சென்­றுள்ளார். இதனால் அவருக்கும் தில்ஷான் தாஜு­தீ­னுக்கும் இடையே இரவு 8.30 மணி­ய­ளவில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது. இடை நடுவே வந்து வரி­சையில் புகுந்து பெற்றோல் பெற்­றுக்­கொள்ள முச்­சக்­கர வண்டி சாரதி முயன்­ற­மையாலேயே இந்த வாக்கு வாதம் ஏற்­பட்­டுள்­ளது.
பின்னர் அங்­கி­ருந்து சென்­றுள்ள முச்­சக்­க­ர­வண்­டியின் சாரதி, கொழும்பு – கண்டி பிர­தான வீதியில் எரி­பொருள் நிரப்பு நிலையம் அருகே காத்­தி­ருந்துள்ளார். இந் நிலையில் எரி­பொ­ருளை பெற்­றுக்­கொண்டு கொழும்பு திசை நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த தில்ஷானை வழி­ம­றித்து கூரிய ஆயு­தத்தால் தாக்கி, கொலை செய்­து­விட்டு முச்­சக்­கர வண்டி சாரதி தப்பிச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கூரிய ஆயு­தத்தால் தாக்­கப்­பட்ட பின்னர் மோட்டார் சைக்­கி­ளுடன் வீழ்ந்­து­கி­டந்த இளைஞன், உட­ன­டி­யாக வேறு ஒரு வாக­னத்தில், வத்­து­பிட்­டி­வல வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்ள நிலையில், பின்னர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­ததாக பொலிசார் கூறினர்.

சி.சி.ரி.வி. காணொ­லி­களின் உத­வி­யுடன் நிட்­டம்­புவ பகு­தியை அண்­மித்து வசிப்­ப­வ­ரான சந்­தே­க ந­ப­ரான முச்­சக்­கர வண்டி சாரதி பொலி­ஸாரால் அடை­யாளம் கணப்­பட்டார்.

சம்­பவ தினத்­திற்கு மறுநாள் 21 ஆம் திகதி நிட்­டம்­புவ பனா­வல பிர­தே­சத்தைச் சேர்ந்த முச்­சக்­கர வண்டி சார­தி­யான 48 வய­து­டைய இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான பீ.ஏ.நுவன் பிரி­ய­தர்­ஷன கைது செய்­யப்­பட்டார். இவர் ஆடை பையுடன் தப்­பித்து செல்ல முற்­பட்­ட­போதே கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர், அத்­த­ன­கல்ல நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்பட்­ட­தை­ய­டுத்து 14 நாட்கள் விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்டுள்ளார். இது தொடர்­பான வழக்கு விசா­ரணை எதிர்­வரும் 19 ஆம் திகதி அத்­த­ன­கல்ல நீதி­மன்­றத்தில் இருப்­ப­தாக தில்ஷான் தாஜு­தீனின் குடும்­பத்தார் தெரி­வித்­தனர்.

சம்­பவம் தொடர்பில் நிட்­டம்­புவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரி­சோ­தகர் அபே­ரத்ன தலை­மையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் மது­ஸங்க, நளின், பொலிஸ் சாஜன்ட்­க­ளான விஜே­ரத்ன, சரத், ஜய­தி­லக, அமீன், புஸ்­ப­கு­மார, பொலிஸ் கொஸ்­தா­பல்­க­ளான, பணா­வல, குண­தி­லக, ரண்­தரு, பெரேரா, குல­ரத்ன, தில­க­ரத்ன,ரத்­நா­யக மற்றும் சமீர உள்­ளிட்ட குழு­வினர் சம்­பவம் தெடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

“தில்ஷான் (சிராஜ்) சுறு­சு­றுப்­பான இளைஞன். சுற்­றத்­தா­ரோடு அன்­னி­யோன்­ய­மாக பழகும் அவர் தொடர்­மாடி குடி­யி­ருப்பு பகு­தி­யி­லேயே பல­ரது அன்­புக்­கு­ரி­ய­வ­ராக இருந்தார். இதனால், அவரின் ஜனா­ஸாவில் அதிகமானோர் கலந்­து­கொண்­டனர். எதிர்க்­கட்சித் தலைவர் என்­னுடன் தொலை­பே­சியில் உரை­யா­டினார். மகனின் இழப்­புக்கு ஆறுதல் சொன்னார். மக­னுக்கு நீதி வேண்டி பாரா­ளு­மன்றில் அவர் உரை­யாற்­றி­ய­மைக்கு நன்­றி கூறு­கிறேன். முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உள்­ளிட்ட பலரும் வீடு­தேடி வந்­தனர்” என்று தந்தை சல்டீன் தாஜுதீன் கூறினார்.

“எனக்கும் தம்­பிக்கும் 15 வரு­டங்கள் வித்­தி­யாசம். தம்பி பாசத்­தையும் ஒரு மகன் போன்ற பாசத்­தையும் அவன் மீது வைத்­தி­ருந்தேன். எங்கள் குடும்­பத்தில் ஒற்றை ஆண் பிள்ளை என்­பதால் எல்­லோ­ருக்கும் அவன் செல்­லப்­பிள்ளை. அவரின் இழப்பை ஈடு செய்ய முடி­யாது. எதற்கும் துணி­வுடன் குரல் கொடுக்கும் அவர் அநீதி இழைக்­கப்­ப­டு­வதை பார்த்­துக்­கொண்­டி­ருக்க மாட்டார். துணி­வுடன் பேசுவார். அன்று அங்கு அநீதி இடம்­பெற்­றதை தட்டிக் கேட்கப் போய் இந்த விப­ரீதம் ஏற்­பட்­டுள்­ளது” என்றார் இளைய சகோ­தரி பெரோஸா தாஜுதீன்.

தில்ஷான் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விரைந்து செயற்பட்டதாக அவரின் சகோதரி பெரோஸா கூறினார். எனவே, இச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று நீதி கிடைக்கும் என நம்புகிறோம். என்றாலும், போன உயிரை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என்ற வருத்தமே மிஞ்சியிருக்கிறது என்று கூறி கண்ணீருடன் மௌனித்தார் சகோதரி.
அநீதி இழைக்­கப்­படும்­போது தட்டிக் கேட்­பது மனித இயல்பு. குற்றம் இழைத்­த­வரை தண்­டிப்­ப­தற்கே எந்­த­வொரு பிர­ஜைக்கும் உரி­மை­யில்லை. நீதி­மன்­றத்தின் தீர்ப்­புக்­க­மை­யவே தண்­ட­னைகள் வழங்க முடியும். இந்­நி­லையில் வரிசை நடை­முறையை மீறிச் செயற்­பட்­டதை தட்டிக் கேட்ட­போது கொலை செய்யும் அள­வுக்கு வக்­கிரம் கொண்டு செயற்­ப­டு­வ­தா­னது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் மோச­மான பொரு­ளா­தார நிலைமை கார­ண­மாக எல்லா விட­யத்­திற்கும் வரிசை என்ற நிலை உருவாகி விட்டது. இந்த மரணத்திற்கு இவ்வாறான வரிசைகள் உருவாக காரணமானவர்களே பொறுப்புக் கூறவேண்டும்.

அத்துடன் உயிரிழந்த தில்ஷான் தாஜு­தீ­னுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன் குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து செயற்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.