இம்ரான் கானை சந்தித்தார் பந்துல இரு தரப்பு வர்த்தகம் குறித்து பேச்சு

0 260

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பு நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட பாகிஸ்தான் பிர­தமர், இலங்­கை­யுடன் பாகிஸ்தான் கொண்­டுள்ள பல்­துறை ஒத்­து­ழைப்­பினை விரி­வு­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். இலங்­கை­யர்கள் பாகிஸ்­தா­னுக்கு சுற்­றுலா பய­ணங்­களை மேற்­கொள்­வதற்­கான திட்­டங்­களை துரி­தப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம்.

இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான வர்த்­தக ஒப்­பந்­தத்தின் உச்ச பலனை பெற்றுக் கொள்­வ­தற்கு இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் தொடர் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்தல், கருத்துப் பரி­மாறல், இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்தை வாய்ப்­பினை ஊக்­கப்­ப­டுத்தல் ஆகிய விட­யங்கள் குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட வேண்டும்.
பாகிஸ்தான் அர­சாங்கம் பௌத்த சுற்­றுலா துறை­யினை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக உரிய திட்­டங்­களை செயற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், அதற்­க­மைய இலங்­கையில் உள்ள பௌத்த மக்கள் பாகிஸ்­தா­னுக்கு சுற்­றுப்­ப­ய­ணத்தை மேற்­கொள்­வ­தற்­கான திட்­டங்­களை விரி­வு­ப­டுத்­து­மாறும் பாகிஸ்தான் பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை, பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடையில் கல்வி,சுகா­தாரம், தொழி­நுட்பம்,சுற்­றுலா மற்றும் வர்த்­தகம் உள்­ளிட்ட பல்­து­றை­களில் காணப்­படும் உற­வினை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதமர் இம்ரான் கானிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.