ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுவிப்பு

0 269

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­புட்­ட­தாகக் கூறி கைது செய்­யப்­பட்ட இலங்கை ஜமா­அத்தே இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலை­வ­ரான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். சட்ட மா அதி­பரின் இணக்­கப்­பாட்­டுடன், அவ­ருக்கு நேற்று முன்­தினம் (11) கொழும்பு மேல­திக நீதிவான் சந்­திம லிய­னகே பிணை­ய­ளித்து உத்­த­ர­விட்டார்.

சட்ட மா அதி­பரின் இணக்­கப்­பாடு, மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ரவின் கையெ­ழுத்­துடன் கிடைக்கப் பெற்­றி­ருந்த நிலையில், நெருங்­கிய உற­வி­னர்கள் மூவரின் சரீரப் பிணையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடு­விக்­கப்­பட்டார்.
இவ் வழக்கில் ஹஜ்ஜுல் அக்பர் சார்பில், சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தலை­மை­யி­லான குழு­வினர் ஆஜ­ராகி வாதங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இவ்­வ­ழக்கின் இறுதி முன்­வைப்­புகள் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இடம்­பெற்­றி­ருந்­தன.

இதன்­போது அல்­ஹ­சனாத் சஞ்­சி­கையில் ஆக்­கங்­களை எழு­தி­யதை முன்­வைத்து ஹஜ்ஜுல் அக்பர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்றுக் கொள்ள முடி­யாது என வாதங்­களை முன்­வைத்த சட்­டத்­த­ரணி சுஹைர், இது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கருத்துச் சுதந்­தி­ரத்தை மீறும் செயல் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

தனது கருத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்­காக ஒரு­வரை கைது செய்து பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைப்­பது ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டமா? கருத்துச் சுதந்­தி­ரமா? என்று நோக்கும் போது கருத்துச் சுதந்­தி­ரமே அர­சி­ய­ல­மைப்பின் படி உயர்ந்த அந்­தஸ்த்தில் உள்­ளது. அத­ன­டிப்­ப­டையில், மாண­வர்­களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் வெளி­யி­டப்­பட்ட அல் ஹசனாத் சஞ்­சி­கையில், தனது கருத்­துக்­களை முன்­வைத்­த­மையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்­யப்­பட்­ட­மை­யா­னது அடிப்­படை உரி­மை­களை மீறும் செயல் என்றும் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை பிணையில் விடு­விப்­ப­தற்கு தாம் ஆட்­சே­ப­னையை முன்­வைக்கப் போவ­தில்லை என சட்­டமா அதிபர் திணைக்­களம் மன்­றுக்கு அறி­வித்­தது.

எனினும் கடந்த 2021 டிசம்பர் 17 ஆம் திகதி நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களின் இறுதி நாளாகும். அதனைத் தொடர்ந்து நட­வ­டிக்­கை­க­ளுக்கு வருட இறுதி விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருந்­தது, இந் நிலை­யி­லேயே மீண்டும் புதிய ஆண்டில் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து குறித்த வழக்கு நேற்று முன்­தினம் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முன்­ன­தாக கடந்த 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை கைது செய்­தி­ருந்­தது. ஏப்ரல் 21 தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை, அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளுக்கு இலங்­கைக்குள் மீள பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்க அதனை கட்­டி­யெ­ழுப்ப உத­வி­யமை மற்றும் இனங்­க­ளுக்கு இடையே முரண்­பா­டு­களை தோற்­று­விக்க நட­வ­டிக்கை எடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை முதல் தட­வை­யாக கைது செய்­தி­ருந்­தனர்.

முதல் தடவை கைது செய்­யப்­பட்டு சி.சி.டி.யினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை விசா­ரித்த போது, அவ்­வி­சா­ர­ணை­களில் திருப்தி இல்­லாமல், அவர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்தார். அங்கும் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்ட பின்­ன­ரேயே, ரி.ஐ.டி.யினரின் கோரிக்­கைக்கு அமை­யவே அவர் தடுப்புக் காவலில் இருந்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.

எனினும் கடந்த 2021 மே 12 ஆம் திகதி அவர் மீளவும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார். அது முதல் தொடர்ந்து தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டார். இந் நிலையில் அவ­ருக்கு எதி­ராக பயங்கரவாத தடைச் சட்டம், ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே சட்ட மா அதிபரின் இணக்கத்துடன் நேற்று முன்தினம் அவருக்கு பிணையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.