நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி என்ன?

0 372

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி மிக மோச­மான கட்­டத்தை அடைந்­தி­ருக்­கி­றது. ‘நாடு வங்­கு­ரோத்­தா­கி­விட்­டது’ என ஆளும் தரப்பின் அமைச்­சர்­களே வாய்­தி­றந்து விமர்­சிக்­கின்ற அள­வுக்கு நிலை­வரம் கைமீறிச் சென்­றுள்­ளது.

நேற்று முன்­தினம் இரவு திடீ­ரென எரி­பொருள் விலைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டதால் ஏனைய சகல பொருட்கள் மற்றும் சேவை­களின் விலை­களும் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளன. இது மக்­களைப் பெரும் நெருக்­க­டிக்குள் தள்­ளி­யுள்­ளது. பிறக்­க­வி­ருக்கும் 2022 நிச்­ச­ய­மாக மக்­க­ளுக்கு பலத்த சவால்­களைக் கொண்­டு­வரும் என்றே பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நிபு­ணர்கள் எதிர்வு கூறு­கின்­றனர்.

இது ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்­றஞ்­சாட்டிக் கொண்டும் விமர்­சித்துக் கொண்டும் இருக்­கின்ற நேர­மல்ல. அர­சியல் கட்­சிகள் இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி எவ்­வாறு நாம் அடுத்த முறை ஆட்­சிக்கு வரலாம் எனத் திட்டம் வகுக்­கின்ற காலமும் அல்ல. மாறாக அர­சாங்­கமும் எதி­ர­ணி­யி­னரும் பொரு­ளா­தார நிபு­ணர்­களும் இரா­ஜ­தந்­தி­ரி­களும் இணைந்து தீர்வு காண வேண்­டிய பிரச்­சி­னை­யாகும். இன்றேல் அடுத்த தேர்­த­லுக்கு வாக்­க­ளிக்க மக்கள் உயி­ரோடு இருக்­க­மாட்­டார்கள்.

அந்த வகையில் நாடு தற்­போது எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்ற நிதி நெருக்­கடி, அந்­நியச் செலா­வணி நெருக்­கடி, பொரு­ளா­தார வீழ்ச்சி போன்­ற­வற்­றுக்கு விரை­வாக திட்­ட­மிட்ட ரீதி­யி­லான தீர்வு காணப்­பட வேண்­டிய தேவை­யுள்­ளது.

இலங்­கை­யா­னது இவ்­வ­ரு­டத்­தி­லி­ருந்து 2025 ஆம் ஆண்டு வரை­யான 4 வருட காலப்­ப­கு­தியில் அதி­க­ள­வான பிணை­முறி கொடுப்­ப­ன­வு­களை செலுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது. முக்­கி­ய­மாக இந்த நான்கு வருட காலப்­ப­கு­தியில் இலங்­கை­யா­னது வருடம் ஒன்­றுக்கு பிணை­முறி மற்றும் கடன் கொடுப்­ப­னவு உள்­ள­டங்­க­லாக 4.5 பில்­லியன் டொலர்­களை செலுத்­த­வேண்டும். இதில் அவ­ச­ர­மாக அடுத்த மாதம் 1 பில்­லியன் டொலர்­களைச் செலுத்த வேண்­டி­யி­ருப்­ப­துடன் 2022 இல் மாத்­திரம் 7 பில்­லியன் டொலர்­க­ளுக்கு மேல் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

ஆனால் டொலர்­களில் கடனைச் செலுத்­து­வது என்­பது தற்­போ­தைய சூழலில் சாத்­தி­ய­மற்­ற­தாக மாறி­யுள்­ளது. அத­னால்தான் ஈரா­னுக்கு வழங்க வேண்­டிய சுமார் 260 மில்­லியன் டொலர் கட­னுக்கு பதி­லாக தேயி­லையை ஏற்­று­மதி செய்ய அர­சாங்கம் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்­ளது. எனினும் எல்லா நாடு­களும் இவ்­வா­றான ஒப்­பந்­தத்­துக்கு முன்­வ­ர­மாட்டா.

இந்­நி­லையில் அர­சாங்­க­மா­னது சர்­வ­தேச நாணய நிதி­யத்தை நாடி புதிய ஒரு ஏற்­பாட்­டுக்குச் செல்­வதன் ஊடா­கவே இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும் என்ற யோச­னையை பொரு­ளா­தார நிபு­ணர்­களும் அர­சி­யல்­வா­தி­களும் முன்­வைக்­கின்­றனர். எனினும் அர­சாங்கம் அதற்குத் தயங்­கு­கி­றது. எக்­கா­ரணம் கொண்டு சர்­வ­தேச நாணய நிதி­யத்தை நாட­மாட்டோம் என மத்­திய வங்கி ஆளுநர் கூறி வரு­கிறார்.
வெளி­நாட்டு கடன் தரப்­ப­டுத்தல் நிறு­வ­னங்கள் இலங்­கையை (–– சிசிசி) என்ற பிரி­வுக்குள் வைத்­தி­ருப்­பதால் வெளி­நா­டுகள் இலங்­கைக்கு கடன் வழங்­கு­வதில் பின்­வாங்­கு­கின்­றன. இலங்கை தற்­போ­தி­ருக்­கின்ற நிலையில் எந்­த­வொரு நாடும் பில்­லியன் கணக்கில் கடன் கொடுக்க முன்­வ­ராது என்­பதே யதார்த்­த­மாகும்.

இந் நிலையில் இலங்­கைக்கு இருக்­கின்ற ஒரே தெரிவு சர்­வ­தேச நாணய நிதி­யத்தை நாடு­வ­துதான். இவ்­வா­றான நெருக்­கடி நேரத்தில் சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் மிகப்­பெ­ரி­ய­தொரு தொகையை கட­னாகப் பெற்று ஏற்­க­னவே இருக்­கின்ற இந்த கடன்­க­ளையும் பிணை­மு­றி­க­ளையும் செலுத்த முடியும். அதன் பின்னர் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் கடனை ஒரு நீண்­ட­கால ரீதியில், சலு­கையின் அடிப்­ப­டையில் இலங்கை செலுத்த முடியும். இலங்கை சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உறுப்பு நாடாக இருப்­பதன் கார­ண­மாக இதனைச் செய்­வது அவ்­வ­ளவு கடி­ன­மா­ன­தல்ல.

எனினும் சர்­வ­தேச நாணய நிதியம் எவ்­வா­றான நிபந்­த­னை­களை இலங்­கைக்கு விதிக்கும் என்­பதே இப்­போ­துள்ள சவா­லாகும். இந்த அச்­சத்­தி­னால்தான் இலங்­கையும் தயங்­கு­கி­றது. அதா­வது அர­சாங்­கத்தின் செலவை கடு­மை­யாக குறைத்தல், மக்­க­ளுக்­கான நலன்­புரி செல­வு­களைக் குறைத்தல், ஊழல், வீண்­வி­ரயம் என்­ப­வற்றைக் கட்­டுப்­ப­டுத்தல், இறக்­கு­மதிக் கட்­டுப்­பா­டு­களை முற்­றாக தளர்த்­துதல் போன்ற நிபந்­த­னை­களை நாணய நிதியம் முன்­வைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த நிபந்­த­னை­க­ளுக்கு கட்­டுப்­ப­டு­வ­தா­னது அர­சாங்­கத்­திற்கு நெருக்­க­டி­களைக் கொண்டு வரும் என்றும் குறிப்­பாக மக்­க­ளுக்­கான கல்வி, சுகா­தாரம் உள்­ளிட்ட நலன்­புரித் திட்­டங்­க­ளுக்­கான செலவைக் குறைப்­பது மக்கள் மத்­தியில் குழப்­பத்தை உண்­டாக்­கலாம் என்றும் அர­சாங்கம் அஞ்­சு­கி­றது. இதில் சில நியா­யங்கள் உள்ள போதிலும் அர­சாங்­கத்தின் செல­வு­களைக் குறைத்தல், ஊழல் மோசடி வீண்­வி­ர­யங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்தல், இறக்­கு­மதிக் கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­துதல் உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்கு இலங்கை இணங்கிச் செல்ல முடியும். இதற்கான அர்ப்பணிப்புகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

நாட்டில் எந்தவித டொலர் கையிருப்பும் இல்லாத நிலையில், வெளிநாடுகளினதோ அல்லது சர்வதேச நாணய நிதியத்தினதோ உதவியின்றி மிகச் சிறிய நாடான இலங்கையால் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். எனவேதான் நாட்டின் இறைமைக்குப் பாதிப்பில்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி, நாட்டை ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதே இப்போதுள்ள ஒரேயொரு தீர்வாகும். இதனையே பொருளாதார நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.