அலி சப்ரியை பதவி நீக்குக

போர்க்கொடி தூக்குகிறார் ஞானசாரர்

0 333

(ஆர்.யசி)
நீதி அமைச்சர் பத­வியில் இருந்து அலி சப்ரி நீக்­கப்­பட வேண்டும், அவர் நீதி அமைச்சர் பத­வியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்­றங்­க­ளுக்கு நியா­யத்தை பெற்­றுக்­கொள்ள முடி­யாது. எனவே நீதி­ய­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து அலி சப்­ரியை நீக்க வேண்டும் என பொது­பல சேனா அமைப்பின் செய­லா­ளரும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலை­வ­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலை­மைத்­துவம் குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ள­துடன், நீதி அமைச்சர் உள்­ளிட்ட ஆளுந்­த­ரப்பு உறுப்­பி­னர்கள் தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அதற்கு பதில் தெரி­விக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறு­கையில்,
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­லணி உரு­வாக்­கத்தின் போதும், அதில் என்னை தலை­வ­ராக நிய­மித்­துள்­ள­தற்கும் பல்­வேறு விமர்­ச­னங்கள், அவ­தூறு கருத்­துக்கள் எழு­வதை அவ­தா­னித்தே வரு­கின்றேன். ஆனால் இவற்றை நாம் கருத்தில் கொள்­ளப்­போ­வ­தில்லை. எமது வேலைத்­திட்டம் வெற்­றி­ய­ளித்­துள்­ள­தற்­கா­கவே சிலர் எம்மை விமர்­சிக்­கின்­றனர். அது­மட்டும் அல்­லாது நீதி அமைச்சர் அலி சப்ரி என்னை நீக்க வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் முரண்­பா­டு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். முதலில் அவர் யார்? அவர் மக்­களின் வாக்­கு­களில் தெரி­வான பிர­தி­நி­தியும் இல்­லையே. ஜனா­தி­ப­தியின் நம்­பிக்­கையை வென்­றவர் என்ற கார­ணத்­திற்­கான அவரை நீதி அமைச்­ச­ராக்­கி­யுள்­ளனர். அதனை நாம் எதிர்க்­க­வில்லை, அதற்­காக அவரின் விருப்­பத்­திற்கு செயற்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது. அவரும் காலத்தை கடத்தும் அர­சியல் செயற்­பாட்­டையே முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

அவ­ருக்கும் எமக்கும் இடையில் பல பிரச்­சி­னைகள் உள்­ளன, அவற்றை நாம் தீர்த்­துக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக இவற்றை நாம் கையாள வேண்­டி­யுள்­ளது. அழ­காக புனி­த­மாக பேசி­னாலும் இவர்கள் பித்­த­லாட்ட அர­சி­யல்­வா­திகள். ஆகவே இவர்­களின் செயற்­பா­டு­களை எம்மால் வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. நீதி அமைச்சர் யார், அவரை சுற்­றி­யுள்ள நபர்கள் யார் எவர் என்­பது எமக்கு நன்­றாக தெரியும். அவர்­க­ளுக்கு தைரியம் இருந்தால் எம்­முடன் விவா­தத்­திற்கு வர வேண்டும்.

நீதி அமைச்சர் பத­வியில் இருந்து அலி சப்ரி நீக்­கப்­பட வேண்டும், அதையே நாம் விரும்­பு­கின்றோம். அவர் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்­றங்­க­ளுக்கு நியா­யத்தை பெற்­றுக்­கொள்ள முடியும் என நாம் நினைக்­க­வில்லை. ஏனென்றால் இவரே காலத்தை கடத்­திக்­கொண்­டுள்ளார். அது­மட்­டு­மல்ல தான் பதவி விலக வேண்டும் என நினைத்­தி­ருந்தால் அவ­ருக்கு கொள்கை ஒன்று இருக்கும் என்றால், ஆடை அணியும் நபர் என்றால் யாரும் கூறுவதை கேட்டுக்கொண்டு அமைச்சுப்பதவியில் இருக்க வேண்டியதில்லை. உடனடியாக பதவி விலக வேண்டும். ஊடகங்களுக்கு ஒன்றும், அமைச்சரவைக்குள் வேறொன்றும் பேசும் இவர்களின் நிலைப்பாடு என்னவென்பது எமக்கும் நன்றாக தெரியும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.