ஷாபியின் அடிப்­படை உரிமை மீறல் மனு அடுத்த வருடம் வரை ஒத்­தி­வைப்பு

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று மற்றும் பெண்­ணியல் நோய் தொடர்­பி­லான வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தாக்கல் செய்­தி­ருந்த அடிப்­படை உரிமை மனு மீதான பரி­சீ­ல­னையை அடுத்த வருடம் ஜன­வரி மாதம் 24 ஆம் திக­திக்கு உயர் நீதி­மன்றம் ஒத்­தி­வைத்­தது. சட்­ட­வி­ரோ­த­மாகக் கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்­டமை, முறை­யற்ற வகையில் நிதி சேக­ரித்­தமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் தாம் தடுத்து வைத்­தி­ருந்­த­மையை ஆட்­சே­பித்து,…

யானை­களின் மர்ம மர­ணங்கள் தும்­பிக்­குளம் காட்டில் சோதனை

ஹப­ரனை - ஹிரி­வட்­டுன, தும்­பிக்­குளம் காட்டில் 7 பெண் யானைகள் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்­துள்­ளமை தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்தின் அறி­வு­றுத்­தலின் கீழ் சீகி­ரிய வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­லகம் ஊடாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், யானை­களின் மர­ணத்தின் பின்­ன­ணியில் பாரிய குற்­ற­மொன்று இருக்­க­லா­மென சந்­தே­கிக்­கப்­படும் நிலையில் அது­தொ­டர்பில் விசா­ர­ணைகள் சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான…

அறுவாக்காலு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக பொலிஸில் 200 முறைப்பாடுகள்

புத்தளம், அறுவாக்காலு பகுதியில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாகத் தெரிவித்து கரைத்தீவு மற்றும் சேராக்குளி மக்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் டிப்பர் வாகனங்கள் மூலம் புத்தளம் அறுவாக்காலு பகுதியில் கொட்டப் படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் சூழல் மாசடைவதாகத் தெரிவித்து சேரக்குளி மற்றும் கரைதீவு பகுதியைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். எனினும்,…

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மகேஷ் சேன­நா­யக்க

தேசிய மக்கள் இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஓய்­வு­பெற்ற இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இது தொடர்­பி­லான நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்­றிய சேன­நா­யக்க, ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கு­மாறு தன்­னிடம் புத்­தி­ஜீ­வி­களும் சிவில் சமூக அமைப்­பு­களும் விடுத்த வேண்­டு­கோ­ளுக்­க­மைய தேசிய மக்கள் இயக்­கத்தின் வேட்­பா­ள­ராக முன்­வந்­தி­ருப்­ப­தையும் இலங்­கைக்கு மாற்று சக்­தி­யொன்று தேவை என்றும் அந்த சக்தி தானே…