20 இற்­காக ஈடு­வைக்­கப்­பட்ட ‘முஸ்­லிம்­களின் ஜனாஸா எரிப்பு’

0 587

சிங்­க­ளத்தில்: லங்கா பத்­தி­ரிகை
தமிழில் : எம்.எச். எம் நியாஸ்

கடந்த வாரம் முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஊடக கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தினர். 20 ஆம் யாப்­புத்­தி­ருத்­தத்­துக்கு வாக்­க­ளித்­த­மைக்­காக முஸ்லிம் மக்­க­ளிடம் மன்­னிப்­புக்­கோரும் நோக்­கத்­தி­லேயே இக்­க­லந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்­டது. ஆனால் குறிப்­பிட்ட அந்தக் கலந்­து­ரை­யா­டலில் அவ்­வா­றான விடயம் பேசப்­ப­ட­வில்லை. மாறாக ‘முஸ்­லிம்­க­ளது கொரோனா மர­ணத்­தின்­போது அவ்­வு­டல்­களை எரிப்­ப­தில்லை’ என்ற வாக்­கு­று­தியை நம்­பியே தாம் இரு­ப­தா­வது யாப்புத் திருத்­தத்­துக்கு வாக்­க­ளி­த்த­தாக அவர்கள் கூறி­னார்கள்.

இரு­ப­தா­வது யாப்புத் திருத்த வாக்­க­ளிப்பு நடை­பெ­றும்­போது அது பற்றி எவரும் அறிந்­தி­ருக்­க­வில்லை. ‘நாமே நாட்­டுப்­பற்­று­மிக்­க­வர்கள் ‘என்று மார்­தட்டிப் பேசிய எவரும் அந்த விடயம் பற்றி மூச்­சுக்­கூட காட்­ட­வில்லை. ஆனால் இப்­போது உண்மை வெளி­யா­கி­விட்­டது.

இரு­பதை பெரும்­பான்மை வாக்­கு­களால் வெற்­றி­கொள்ள ஜனா­தி­பதி எந்த அளவில் கீழி­றங்கி வந்­துள்ளார் என்­பதை இப்­போது எமக்கு விளங்கிக் கொள்ள முடியும். இரு­ப­தா­வது யாப்­புத்­தி­ருத்­தத்தை வாக்­க­ளிப்­புக்கு விடும்­போதே அதற்குத் தேவை­யான பெரும்­பான்மை வாக்­குகள் கிடைக்­கு­மென்­பதை அரசு ஏற்­க­னவே அறிந்து வைத்­தி­ருந்­தது. அதைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக இரட்டை பிர­ஜா­வு­ரிமை பற்றி போடப்­பட்­டி­ருந்த நிபந்­த­னை­க­ளைக்­கூட அவர்கள் பொருட்­ப­டுத்­த­வில்லை. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது உச்­ச­கட்ட வாக்­குகள் தமக்குக் கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கையே அதற்­கான கார­ண­மாகும்.

முஸ்­லிம்­க­ளது கொரோனா மர­ணங்­களை அடக்கம் செய்­வ­தற்கு இட­ம­ளிப்­ப­தல்ல இங்­குள்ள பிரச்­சினை. அது ஒரு அர­சியல் துரும்­பொன்று மட்­டுமே. அதை இன்னும் பல ‘டீல்’­க­ளுக்­காக பயன்­ப­டுத்திக் கொள்­ளவே இந்த முயற்சி நடை­பெ­று­கி­றது. ஒரு குறிப்­பிட்ட இனத்தின் கலா­சார உரி­மை­யொன்றை அர­சியல் சூதாட்­டத்தில் பந்­தயம் கட்ட வைப்­பதே அதன் நோக்கம். வெட்கம், மானம், சூடு, சொர­ணை­யற்ற இந்த ஆட்சி அதை செய்து முடித்­தது. தனிச் சிங்­கள அர­சொன்­றுக்­காக வாக்­க­ளித்த வாக்­கா­ளர்கள் அப்­பா­வி­க­ளாக ஓரங்­கட்­டப்­பட்­டனர். பொது­சன முன்­ன­ணியின் ஆரம்ப காலம் தொடக்கம் தமது அதி­காரத் தேவை­க­ளுக்­கா­கவே இந்தப் துரும்பு பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்கு சஹ்­ரானின் குண்டு ஒரு அரு­ளாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அதன் மூலம் தேசிய பாது­காப்­புக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது என்ற கருத்­து வித்­தி­டப்­பட்­டது. முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள இன­வாத உணர்­வுகள் மேலோங்­கு­வற்கும் அந்தக் காரணம் உச்ச மட்­டத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

அதன் பின்­ன­ணியில் ‘மலட்­டுக்­கொத்து’, மல­டா­வ­தற்­கான சத்­திர சிகிச்சை, மல­டா­வ­தற்­கான மாத்­திரை போன்ற கதைகள் பரப்­பப்­பட்­டன. அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மிக மோச­மான வழியில் இன­வாதம் தூண்­டப்­பட்­டது. அதன் பெறு­பே­றா­கவே ஜனா­தி­பதித் தேர்­தலும் வெற்றி கொள்­ளப்­பட்­டது.

இரு­ப­துக்கு வாக்­க­ளிப்­பதன் மூலம் இரு சாராரும் அரசும் ‘டீல்’­களை செய்­து­கொண்­டனர். அடுத்த பக்கத்தில் ராஜ­ப­க்ஷாக்கள் ‘டீல்’ வைத்துக் கொண்டனர். இவற்றை அறி­யாத சிங்­கள மற்றும் முஸ்லிம் பொது­மக்கள் இரண்­டாகப் பிரிந்­து­கொண்­டனர்.

அதன்­பி­றகு கொரோ­னாவின் முதலாம் அலை நாட்­டுக்கு வந்­தது. அத்­து­டனே முஸ்­லிம்­க­ளது பிரே­தங்­களை எரிக்­காது அடக்கம் செய்ய வேண்­டு­மென்ற பிரச்­சினை தலை தூக்­கி­யது. தனி­மைப்­ப­டுத்­தலின் பழைய சட்­ட­வி­தி­மு­றைகள் மாற்­றப்­பட்டு அதற்­காக வேண்டி புதிய வர்த்­த­மா­னி­யொன்று வெளி­யி­டப்­பட்­டது. அதற்குப் பொருத்­த­மான முறையில் சுகா­தாரப் பிரிவின் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது. அதுவும் அர­சி­ய­லுக்குத் தேவை­யான வகையில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது. பொதுத் ‘தேர்தல்’ முடியும் வரை முன்பு போலவே நாடு பூரா­கவும் இன­வாதம் ‘தூவப்­பட்­டது’. பகி­ரங்­க­மாக ‘எமக்கு முஸ்­லிம்­க­ளது வாக்­குகள் தேவை­யில்­லை­’யென்று கூறப்­பட்­டது. ஜனா­தி­பதி பத­வி­யேற்பு வைப­வத்தின் போது ‘சிங்­கள மக்­க­ளுக்­கான ‘ஒரே தலைவர்’, சிங்­க­ள­வர்­க­ளுக்­கான ‘ஒரே அரசை’ உரு­வாக்­கி­யுள்ளேன் என்­றெல்லாம் தைரி­ய­மாக பேசப்­பட்­டது. அவ­ருக்கு வாக்­க­ளித்­த­வர்கள் மகிழ்ச்­சிக்­க­டலில் குளிக்­க­லா­னார்கள். அது மட்­டு­மன்றி சிங்­கள மக்­களில் பெரும்­பான்­மை­யினர் உச்­ச­மட்­டத்தில் அரசைப் பாராட்­டினர்.

சில வாரங்கள் கடந்­ததும் ஜனா­தி­பதி கோட்­டா­பய அர­சி­ய­ல­மைப்பில் கை வைத்தார். பத்­தொன்­பதில் பெற்­றுக்­கொண்ட அதி­காரம் போத­வில்­லை­யென்று கூறி முழு­மை­யான அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இரு­பதைத் திருத்­தி­ய­மைக்கும் முயற்­சியும் மேற்­கொள்­ளப்­பட்­டது. எனினும் அதற்­காக நூற்றி ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வதில் சற்று சிரமம் ஏற்­பட்­டது. அர­சாங்­கத்தில் இருக்கும் சிலர் முன்­வைத்த நிபந்­த­னைகள் கார­ண­மா­கவே அந்­நிலை ஏற்­பட்­டது. அவர்­க­ளிடம் ஏற்­க­னவே நூற்றி ஐம்­ப­துக்கு ஒன்று குறை­வாக (149) வாக்­குகள் மட்­டுமே இருந்­ததே அதற்­கான கார­ண­மாகும். அந்த நிலை தொடர்ந்­தி­ருந்­தி­ருக்­கு­மாயின் அவர்­க­ளுக்கு அந்த வாக்­கெ­டுப்பில் வெற்றி பெற முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்கும்.

தற்­பே­ாதைய அர­சாங்­கத்தைப் பத­வியில் அம­ர­வைத்த சில கௌர­வ­மிக்க பிக்­குகள் கூட அர­சுக்கு சில நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்த முற்­பட்­டனர். எனினும் அவற்றில் எத­னையும் பொருட்­ப­டுத்­தாமல் தமக்குத் தேவை­யான அனைத்து அம்­சங்­க­ளையும் உட்­ப­டுத்தி இரு­பதை வெற்­றி­கொள்­வதில் அரசு மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வெற்­றியும் கண்­டது. முழு நாட்­டையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்கி, 156 வாக்­கு­களைப் பெற்று தமது நாட­கத்தை அரசு வெற்­றி­க­ர­மாக அரங்­கேற்­றி­யது. நாடு மிக மோச­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இயங்கிக் கொண்­டி­ருந்த வேளையில், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதி­யு­தீனின் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள் ‘இரு­ப­துக்கு’ சார்­பாக வாக்­க­ளித்­தமை இலங்­கையில் நடை­பெற்ற ஆச்­ச­ரி­யா­ம­னதோர் அசம்­பா­வி­த­மாகும். தாமே மிகக்­க­டு­மை­யாக எதிர்த்­துக்­கொண்­டி­ருக்கும் ஒரு விட­யத்தை துரும்­பாகப் பாவித்து அரசு தமது நாட­கத்தை அரங்­கேற்றிக் கொண்­டமை அரசு செய்த பார­தூ­ர­மான தவ­றாகும்.

சில மாதங்­க­ளுக்குப் பின்னர் இந்த விடயம் நாட்­டுக்குப் பகி­ரங்­க­மா­கி­விட்­டது. அதிலும் ஒரு விடயம் மட்­டுமே வெளி­யா­னது. இரு­ப­துக்கு சார்­பாக வாக்­க­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­க­ளுக்கு மேலும் என்­னென்ன கொடுக்­கப்­பட்­டது என்­பதும், எவற்­றுக்­காக அவர்கள் உடன்­பட்­டார்கள் என்­பதும் இன்று வரை இர­க­சி­ய­மா­கவே இருக்­கி­றது. கொரோ­னா­வினால் மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்­யவும் முடியும் என்று பிர­தமர் மகிந்த ராஜ­பக்ஷ கூறி­யதன் பின்­னர்தான் தாம­தித்­தேனும் பூனைகள் சாக்­கி­லி­ருந்து ஒவ்­வொன்­றாக வெளியே பாய்­கின்­றன. பிர­தமர் அவ்­வாறு கூறிய மறு­நாளே அர­சாங்­கத்­தி­லுள்ள மற்­று­மொரு ராஜாங்க அமைச்சர் ஒருவர் ‘அவ்­வா­றான தீர்­மா­ன­மொன்று இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை’ என்று கூறினார். ஒரு சில தினங்­க­ளுக்குள் அது விடயம் பற்­றிய அறிக்கை வெளி­யா­னது. அதன் தலைவர் பேரா­சி­ரியர் திரு­மதி ஜெனிபர் பெரேரா தமது அறிக்­கையை கடந்த டிசம்பர் (2020) மாதமே அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைத்­த­தா­கவும், அதன்­படி சில நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் கொரோனா சட­லங்­களை அடக்கம் செய்ய அனு­மதி உண்­டென்றும் விப­ரித்தார். ஆனால் அந்த ‘மாற்று முடி­வுக்­கான’ வர்த்­த­மா­னியை பிர­சு­ரித்து ஏற்­க­னவே இது விட­யத்தில் பிர­சு­ரிக்­கப்­பட்ட வர்த்­த­மா­னியை ரத்து செய்­யா­தி­ருப்­பதே இப்­போ­துள்ள பிரச்­சி­னை­யாகும். அது விடயம் சம்­பந்­த­மாக மாற்று நட­வ­டிக்­கை­களை எடுக்க குறித்த குழு­வுக்கு முடியும். ஆனால் ஜனா­தி­ப­தியின் கட்­டளை வந்தால் மட்­டுமே குறித்த அமைச்­ச­ருக்கு அது விட­யத்தில் மாற்று நட­வ­டிக்கை மேற­கொள்ள முடியும். அது சம்­பந்­த­மாக, இன்­று­வரை ஜனா­தி­ப­திக்கு முடி­வெ­டுக்க நேர­மில்­லையோ தெரி­ய­வில்லை.

இந்தப் பிரச்­சி­னையை மேன்­மேலும் ஒரு அர­சியல் துரும்­பாக பயன்­ப­டுத்­து­வ­தற்­கா­கத்தான் இந்த அளவில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றதோ தெரி­ய­வில்லை. ஆரம்­பத்தில் இந்த விட­யத்தை அரசு ‘உதைப்­பந்­தாக’ பாவித்­தது. தமக்கு அதி­காரம் தேவைப்­ப­டும்­போது, மக்­க­ளுக்குள் தமது கருத்தைத் ‘திணித்து’ மக்­க­ளி­ட­மி­ருந்து வாக்­கு­களை அரசு பெற்­றுக்­கொண்­டது. ‘இரு­ப­து’க்­காக வாக்­குகள் தேவைப்­ப­டும்­போது அதை (முஸ்­லிம்­க­ளது கொரோனா சட­லங்­களை எரிக்கத் தேவை­யில்லை என்ற விட­யத்தை) மற்­று­மொரு தடவை பயன்­ப­டுத்திக் கொண்­டது. மீண்­டு­மொரு தடவை அரசு இது விட­யத்தில் தமது ‘பணி’யை இவ்­வாறே செய்து கொள்­வ­திலும் கரி­சனை காட்­டு­கி­றது. இவ்­வாறே மக்­க­ளது பிரச்­சி­னை­களை சரி­யாக இனங்­கண்டு அவற்றை முறை­யாகத் தீர்க்கும் முறையை அரசு கைவிட்டுக் கொண்டே வரு­கி­றது. தற்­போ­தைய அரசு மட்­டு­மன்றி வர­லாற்று ரீதி­யாக இலங்­கையை நீண்ட கால­மாக ஆட்சி செய்­து­வரும் அனைத்து அர­சு­களும் இவ்­வா­றுதான் தமது ‘பணி’­களை மேற்­கொண்டு வந்­துள்­ளன. வரு­கின்­றன.

இது போன்ற விட­யங்­களால் இரு குழுக்­க­ளுக்­கி­டையில் இன­வா­தத்­தையும் குரோ­தத்­தையும் வளர்த்து அதன் மூலம் பய­ன­டை­வதே அரசின் நோக்­க­மாகும். அதன் மூலம் தமது அதி­கா­ரத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்­வ­தற்­கா­கவே ‘டீல்’ வைத்துக் கொள்­வ­தற்கு முயற்­சிகள் மோற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இரு­ப­துக்கு வாக்­க­ளிப்­பதன் மூலம் இரு சாராரும் அரசும் ‘டீல்’­களை செய்­து­கொண்­டனர். அடுத்த பக்­கத்தில் ராஜ­ப­க்ஷாக்கள் ‘டீல்’ வைத்துக் கொண்­டனர். இவற்றை அறி­யாத சிங்­கள மற்றும் முஸ்லிம் பொது­மக்கள் இரண்­டாகப் பிரிந்­து­கொண்­டனர். சில வேளை­களில் அவ்­வி­ரு­சா­ராரும் ஒரு­வ­ரோ­டொ­ருவர் மோதிக்­கொண்­டனர். நிகழ்­கா­லத்­திலும் எதிர்­கா­லத்­திலும் ஒரு­வ­ரோ­டொ­ருவர் மோதிக்­கொள்வர். இந்த அடிப்­ப­டையில் மக்­க­ளுக்கு மத்­தியில் இன­வா­தத்தை பரப்பிக் கொண்டே ஆளும் கட்­சி­யினர் தமது தேவை­களைப் பூர்த்தி செய்து கொள்­வார்கள். இந்­நிலை எதிர்­கா­லத்­திலும் தொட­ரு­மானால் அதன் மூலம் பார­தூ­ர­மான விளை­வுகள் ஏற்­படும். இது ஓரி­ரண்டு சம்பவங்களால் மட்டும் முற்றுப் பெறப்போவதில்லை.

பல மாதங்களாக இரகசியமாகப் பேணப்பட்ட இது போன்ற பில விடயங்கள் இருக்க முடியும். இப்போதாவது நாட்டின் பொதுமக்கள் இந்த விடயங்கள் பற்றி நன்கு தெளிவு பெற வேண்டும். இனவாதத்திற்கு உரமிடும் அரசின் தேவைகள் பற்றி நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவற்றை நன்கு புரிந்து கொள்வது மட்டுமன்றி அது போன்ற நடவடிக்கைகளை முறியடிக்க மும்முரமாக ஈடுபடவேண்டும். அதற்காக, இனவாதத்துக்கு எதிரான தேசிய ஒற்றுமையின் திசையில் வீறு நடைபோடும் அரசியலில் ஈடுபட வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.