சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறிய யுவதிக்கு கனடா புகலிடமளித்தது
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து தனது குடும்பத்தினரைவிட்டும் பிரிந்து வெளியேறிய றஹாப் அல்குனூன் என்ற 18 வயது சவூதி அரேபிய யுவதிக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை டொரொன்டோ விமான நிலையத்தில் வைத்து கனடாவின் பெண் வெளிநாட்டமைச்சர் கிரிஸ்டியா பிரீலேண்டினால் அவர் வரவேற்கப்பட்டார்.
இவர் ஒரு மனோதிடமிக்க புதிய கனேடியர் என பிரீலேண்ட் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இதன்போது அல்குனூன் புன்னகைத்தவாறு அமைச்சரின் அருகில் நின்றுகொண்டிருந்தார்.…